18 December 2010

ஈசன் திரைவிமர்சனம்

                        கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில்
 வந்திருக்கும் இரண்டாவது படம் ..முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகர பின்னணியில்
 எடுத்திருக்கிறார் ..முதல் பட கூட்டணி இதிலும் தொடர்கிறது ...
                அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அமைச்சர் தெய்வநாயகமாக அழகப்பன் , அவரின் ஒரே பையன் செழியனாக வைபவ், நேர்மையான துணை ஆணையர் (ACP ) சங்கையாவாக சமுத்திரகனி   நடித்திருக்கிறார்கள் ..

                     பணக்கார இளைஞர்,இளைஞிகள் இடையே உள்ள போதைபழக்கம் , இரவு நேர விடுதி (பப்) கலாச்சாரம் ,  சட்ட திட்டங்களை மதிக்காத ஆணவம் , அரசியல் பலம் , இதற்கு மத்தியில் நேர்மையான காவல் துறை அதிகாரியின் தைரியம் என்று இதை வைத்து  அடுத்தடுத்து பின்னப்பட்ட
சுவாரஸ்யமான காட்சிகள் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன ..திடீரென காணாமல் போகிறார் வைபவ் ..இரண்டாவது பாதியில் அவரை தேடி விசாரணை மேற்கொள்கிறார் சமுத்திரக்கனி ...முடிவில் கொலையாளியை கண்டு பிடிப்பதோடு அவனை அழகப்பனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் ....வைபவ் ஏன் கடத்தப்பட்டார் ? அவர் நண்பன் வினோத் ஏன் கொல்லப்பட்டான் ? இதனை விளக்க சற்று நீண்ட ப்ளாஷ்பாக்....    இதற்கு காரணம் பழி  வாங்கல் எனும்போது ஏமாற்றம் ... நிறைய ரத்த சிதறல்களோடு முடிகிறது கிளைமாக்ஸ்
                       .நண்பர்களுடன் இரவு நேர விடுதிகளில் கூத்தடிக்கும் வைபவ்      ஒரு பெண்ணின் கொலைக்கு காரணம் ஆகி விடும்    தன் நண்பர்களை ACP யின்  காவலில் இருந்து     தன்   அப்பாவின் உதவியோடு வெளியே கொண்டு வருகிறார் ....
             நண்பர்களுடன் ஊரை  சுற்றுவதோடு தனக்கு பிடித்த பெண்ணையும் காதலிக்கிறார் ...இதை தவிர இவருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை ...இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணை முதல் முறையாக பார்த்து விட்டு அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நண்பரிடம் சொல்லும் போது சிரிப்பு வருகிறது ......
                   நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கட்சித பொருத்தம்... விறைப்புடனே இருக்கும் இவர் கொஞ்சம் உடற்கட்டையும் ஏற்றி இருந்தால் கன கச்சிதம் ஆகி  இருக்கும்..  அமைச்சர் வீட்டிற்கே  சென்று அவர் மகனை மிரட்டும் இடம் அற்புதம் .. கமிசனர் இவரிடம் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போக சொல்லி அறிவுரை வழங்கும் காட்சி யதார்த்தம் ... கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இவர் நடிப்பு அருமை ...
                            
                  தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அறிமுகம் அரசியல் வில்லன் அழகப்பன்.... .கண்களில் .கருப்பு கண்ணாடி  ,வெள்ளை வேட்டி சட்டை , வட்டார பேச்சு என அமைச்சர் தெய்வ நாயகமாகவே கண் முன் நிற்கிறார் ...இட பிரச்சனைக்காக ஒரு பெண்ணையும் , அவள் குழந்தையையும் கொலை செய்து விட்டு காவல் துறையிடம்  கள்ள காதல் என்று சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று சொல்லும் இடம் குரூரம் ...
                  கோடிஸ்வர பெண்ணாக வரும் அபர்ணா வைபவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்கிறார் ...இவர் இன்னும் அழகாக இருந்திருந்தால் பார்த்தவுடன் காதலிக்கும் வைபவின் செயலிற்கு நியாயம் கிடைத்திருக்கும் ... நமோ நாராயனாவிற்கு நல்ல வாய்ப்பு  நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்  ..இவர் பிரமாதம் சொல்லும் இடம் உண்மையிலேயே பிரமாதம் .... ஏசி வண்டிக்குள்ளேயே     ஏசி இல்லையா  என்று நக்கல் செய்யும் போது கைதட்டல் ....
                     சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அபிநயா, இவர் தம்பியாக வரும் ஈசன் நல்ல தேர்வு....தோற்றத்தில் அப்பாவியாக இருந்தாலும் கண்களில் கொலை வெறி ...என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பள்ளி சிறுவன் ஈ மெயில் ஹாக் செய்வதாக காட்டுவது கொஞ்சம்  ஓவர்...அபிநயாவின் தோழியாக வரும் பெண் , விபச்சாரம் செய்யும் அக்கா, அதிகாரி நீதிராஜன் , பெண் ப்ரோக்கர் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள் ....
                 பின்னணி இசை பிரமாதம் , படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் அதில்  மூன்று மட்டுமே முனுமுனுக்க  வைக்கின்றன...குறிப்பாக கடற்கரை கானா பாடலில் அக்காவின் ஆட்டம் அருமை ...கதிரின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைகுலுக்கல் ....
                         சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பிறகு அதன் பாணியில் பலர் படம் எடுத்து கொண்டிருக்க  அதன் பாதிப்பே இல்லாமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்கள் ... வசனங்களாக மட்டும் இல்லாமல் இல்லாமல்  காட்சிகளில்  நேர்த்தி , பாத்திர தேர்வு ,   முதல் பாதியில் இருந்து சற்றும் எதிபாராமல்  திரைகதையில்  திருப்பம் என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் டச் ...
                        இவை எல்லாம் இருந்தும் பழிவாங்கும் கதை  அதிலும்  ஒரு பெண்ணிற்காக பழி வாங்குகிறான் என்னும் போது பெரிய சறுக்கல் ...பழிவாங்குவதற்கு என்ன தான் நியாயம் கற்பித்தாலும் இதை எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் செய்கிறான் என்று தெரியும் போது நெருடல் ..தொடர்ந்து வரும் பப் காட்சிகள் போர் ..விசாரணைக்காக தோழியின் வீட்டிற்கு செலும் சமுத்திரக்கனியை யார் என்று அவள் கணவன் விசாரிப்பதும் பின்னர் போலீஸ் என்று தெரிந்தவுடன் பம்முவதும் , வேலைக்கு செல்லும் அந்த பெண் வீட்டில் அடக்கமாக இருந்து விட்டு வேலைக்கு சென்றவுடன் முடியை விரித்து விட்டு பரவலாக பழகுவதாக காட்டுவதும் , தானுண்டு தன்  வேலையுண்டு என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தையும் , பொருளாதார நெருக்கடிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்களையும் இழிவு படுத்துவது போல உள்ளது .....
                        காவல்துறை சம்பத்தப்பட்ட காட்சிகளை நேர்மையாக எடுத்திருக்கும் இயக்குனர் செல்வாக்குள்ள ஒரு குடும்பம் கிராமத்தில்  இருந்து சென்னைக்கு வருவதற்கு பேஷன் டெக்னாலஜி படிப்பை காரணமாக காட்டுவது நம்பும் படியாக இல்லை ...சம்பத்தப்பட்ட காட்சிகளை தெளிவாக சேர்த்திருக்கலாம் ...
                 சுப்ரமணியபுரம் படம் முடிந்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு நிச்சயம் இல்லை ...இந்த படத்தை அப்படத்தோடு ஒப்பிடுவது நியாயம் இல்லை....இரண்டும் வெவ்வேறு களம் ...சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து விட்டு எல்லோருக்கும் போன் செய்து போய் பார்க்க சொன்னதும், படம் நிச்சயம் பெரிதாக ஓடும் என்று சான்றிதழ் கொடுத்ததும் நினைவிற்கு வருகிறது ....
       அந்த படத்தை நினைவில் வைத்து கொள்ளாமல் இப்படத்தை புதிதாக பார்த்தால் நன்றாக இருக்கும் ......
 ,

1 comment:

பனித்துளி சங்கர் said...

திரை விமர்சனம் சிறப்பு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...