9 April 2011

அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?

             நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் 72 வயது இளைஞர் அன்னா ஹசாரே ...ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றி காட்டியதற்காக 1992  ம் ஆண்டு "பத்ம பூஷன்"   வாங்கிய சமூக தொண்டர் இந்த "அன்னா ஹசாரே "..
                  
             ஊழலுக்கு எதிராக "ஜன் லோக்" மசோதாவை கடுமையான சட்ட திருத்தங்களுடன் நிறைவேற்றக்கோரி அற வழியில் அவர் செய்த போராட்டத்திற்கு மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது...ஜூன் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்திருக்கிறது ..
                .தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...
               "அண்ணா" வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியில்வாதிகள் தமிழகத்தில் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்க அங்கு நடந்த அன்னாவின் உண்ணாவிரதம் ஜனநாயகவாதிகளுக்கு  ஒரு உற்சாக டானிக் .... 
                                   
     2 ஜி அலைவரிசை ஊழல் மூலமாக உலகமே தமிழகத்தை கேவலமாக  பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால்  வாக்குக்கு பணம்  கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அது உங்கள் பணம் என்று மக்களைப் பார்த்து
கூறும் அளவிற்கு இங்கு ஊழல் பழகி விட்டது வேதனைக்குரிய விஷயம் ... 
        மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துக்கொண்டதாலேயே இதனை ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான முடிவாக எடுத்துக்கொள்ளலாமா ? நிச்சயம் முடியாது ....ஏனென்றால் மகளிர் இட ஒதுக்கீடு பல முறை விவாதிக்கப்பட்ட 
போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது நாடறிந்த விஷயம் ...
           அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்பது நிதர்சன உண்மை ..
  .     இந்த   மசோதாவை நிறைவேற்றுவதற்க்கான   திட்டக்குழுவில் "அன்னா", "பூஷன்" போன்றவர்கள் இடம் பெற்றிருந்தாலும்  மத்திய அரசின் அமைச்சர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கிறார்கள் ...இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எந்த ஊழல் வழக்கும் இல்லா விட்டால் கூட இவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஊழலையே மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதை உலகமே அறியும் ....
                               
          அதிலும்  2 ஜி  அலைவரிசை ஊழலில் அரசிற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை  என்று கூசாமல் பொய் சொன்ன கபில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ...            லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக தாமசை நியமித்ததற்கு முழு பொறுப்பையும்    நான் ஏற்றுக் கொள்கிறேன் ,கூட்டணி தர்மத்திற்காக வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒப்புக்கொண்டதன் மூலம் அப்பழுக்கற்றவர் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் நேர்மை
மண்ணைக்கவ்வியதையும் நாம் அறிவோம் ... 
          மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலுக்கு எதிராக பிரதமர் உட்பட உயர் பதவி வகிக்கும் எவரையும் கேள்வி கேட்கும் உரிமை குழுவிற்கு வந்து விடும்.  அது மட்டும் அல்லாமல் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்..ஊழல் செய்தது நிரூபணம் ஆனால் கொள்ளையடித்த பணம் முழுவதும் 
பறிக்கப்படும் என்பவை இதன் மற்ற சாரம்சங்கள் ...
              .
           ஆனாலும் எவ்வளவு பெரிய ஊழலாக இருந்ததாலும் அதற்கு எதிராக கொடுக்காப்படும் 
கடுங்காவல் தண்டனை மட்டும் போதுமானதா ? அந்த ஊழல் பணம் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட மற்றவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா ?
ஊழல் புரிபவரை அமைச்சராக்கிய கட்சிக்கு என்ன தண்டனை ? ஊழலுக்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூட்டணி தர்மத்திர்க்காகவோ ஒத்துழைப்பு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் , தொழிலதிபர்களுக்கும் 
என்ன தண்டனை ?....இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ...
               அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா ?..இலவசமாக கொடுக்கிறார்கள் 
என்பதற்காக எல்லாம் இருந்தும் அதை ஓடி ஓடி வாங்கியது குற்றம் இல்லையா ?....நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் , ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக
முறையிடாமல் ஒதுங்கிப்போவதும் குற்றம் இல்லையா ? இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ....
         முன்பே சொன்னது போல் இது ஊழலுக்கு எதிரான முடிவு அல்ல ...ஒரு ஆரம்பம் .."அக்னிக் குஞ்சொன்று கண்டேன் " - மகாகவியின் பாடலுக்கு ஏற்ப ஒரு தீப்பொறியின் ஆரம்பம் ....
          மசோதா நிறைவேற்றப்பட்டு , ஊழல் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, ஊழல் முற்றிலும் மலிந்து இன்னுமொரு "அன்னா" இதற்காக "உண்ணா" விரதம் இருக்கும் நிலை ஏற்படாமல் இருப்பதே
முழுமையான வெற்றி ...
                  
                  

        
                 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...