28 April 2011

கோ - விமர்சனம்

                                                                         கோ - 
       அரசன்  ஆவதற்கு  ஒருவன் அரசியலில் செய்யும் சதிகளை மையமாக கொண்டு பின்னப்பட்டதே இப்படம் .
            ..                               
           படத்தை  ...காதல்,ஆக்ஸன்,நட்பு,சோகம்,
துரோகம் என எல்லா மசாலாவையும் தூவி  தனிப்பட்ட பாணியில் கின்டி இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்....
        "தின அஞ்சல்" பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக வேலை செய்கிறார் ஜீவா...வங்கியில் 
கொள்ளையடித்து விட்டு வேனில் தப்பித்து ஓடுபவர்களை விரட்டி விரட்டி அவர்
 போட்டோ எடுக்கும் அறிமுக காட்சியே நல்ல விறுவிறுப்பு...பியா மற்றும் கார்த்திகா (ராதாவின் மகள் இதில் அறிமுகம் ) இருவரும் ஜீவாவுடன் வேலை செய்கிறார்கள்..பியா ஜீவாவை சுற்றி சுற்றி வருவதை தவிர வேறு எதுவும் வேலை செய்ததாக தெரியவில்லை ....
                                 
             தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது , நடிகையை வைத்து பிரச்சாரம் செய்வது , ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போட்டி விவாதங்கள் என்று நடப்பு தேர்தல் களத்தை கண் முன் நிறுத்துகிறார்கள் ....தேர்தலுக்கு முன் வந்திருந்தால் நல்ல பொருத்தமாக 
இருந்திருக்கும் ...அதற்காகவே படத்தை வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது 
போல தெரிகிறது .....
              ஆளுங்கட்சி முதல் அமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக   கோட்டா சீனிவாசராவ்  , இவர்களுக்கு நடுவில் மாற்றத்தை கொண்டு 
வர வேண்டும் என்ற லட்சியத்தில் தேர்தலில் நிற்கும் "சிறகுகள்" அமைப்பின் 
தலைவன்,படித்த இளைஞன்  வசந்தனாக "அஜ்மல்"....அனைவரும் படத்தில் 
எளிதாக பொருந்துகிறார்கள் ..
            ஜன நெரிசலில் வண்டியை விட்டு இறங்கி நடக்கும் போதும் , தப்பாக கேள்வி
கேட்கும் நிருபரை செருப்பால் அடிக்கும் இடத்திலும் தெரிவது பிரகாஷ்ராஜ் "டச்" ..ஆனால் அதையே ஜீவா "தின அஞ்சல்" பத்திரிக்கையில் போட்டு கிழிப்பது இயக்குனர் "டச்"...
         "கோட்டா" பதிமூணு வயசு சிறுமியை  ரகசியமாக திருமணம் செய்வதை ஜீவா தெரியாமல் படம் பிடிப்பதும் அது சம்பத்தப்பட்ட காட்சிகளும் அற்புதம் ...ஆனால் "தின அஞ்சல்" மட்டுமே பத்திரிக்கை போலவும் ,இவர் ஒருவர் மட்டும் தான் எல்லா வேலையும் செய்வதாக காட்டுவதும் திரும்ப
திரும்ப ஒரே காட்சிகளே வருவது போல சலிப்பை ஏற்படுத்துகின்றன ....
       ஜீவா தான் துப்பறிகிறார் என்றால் கார்த்திகாவும் அவர் பங்கிற்கு ஒரு
பழைய போட்டோவை வைத்து கொண்டு ஜீவா , அஜ்மல் இருவரும் பழைய கல்லூரி நண்பர்கள் என்று கண்டுபிடிக்கிறார் .. , அதற்காக ஒரு பிளாஷ்பேக் பாடல் வேறு ....இழுவையை தவிர்த்திருக்கலாம்..
                         
       "ராம்" , "ஈ" வரிசையில் ஜீவாவின்  நடிப்பிற்கு பெரிய தீனி "கோ" படத்தில் இல்லையென்றாலும் தன் பங்கை ஜீவா இயல்பாக செய்திருக்கிறார்.."பியா" இறந்த பின் உருகும் இடம் உதாரணம் .."கார்த்திகா"விற்கு  நல்ல உயரம் ,அழகான கண்கள் ..ஆனால் அவரை போலவே அவர் புருவத்தையும் உயரமாக வரைந்தது ஏனோ உறுத்துகிறது ..."பியா" குறுகுறுப்பான நடிப்பில் மனதை
கொள்ளை அடிக்கிறார்...ஒரு சிறுவன் இவரை சைட் அடிப்பது போல் வைத்த காட்சியில் விரசத்தை தவிர்த்து இருக்கலாம்....
        இவர்கள் எல்லோரையும் விட மனதில் பதிவது வசந்தனாக வரும் 
அஜ்மலின் கதாபாத்திரம்.. கட்சிகாரர்களிடம் அடிவாங்குவது ,
 மேடையில் வீராவேசமாக பேசுவது ,ஆட்சியை பிடிப்பதற்கு இவர் செய்யும் சூழ்ச்சிகள் , கடைசி காட்சியில் ஜீவாவை வழிக்கு கொண்டு வர இவர் செய்யும் தந்திரம் என எல்லாமே நன்றாக அமைந்து இருக்கின்றன...
ஆனால் இவர் உடல் மொழியில் முன்னேற்றம் தேவை ..
            சுபா வசனங்கள் சுருக்கம் பிளஸ் தெளிவு..ஒளிப்பதிவு பலம் ,இசை பலவீனம்..."என்னமோ ஏதோ" பாடல்கள் தவிர மற்றவை "அயன்"-"ஆதவன்" கலவை ...
            பத்திரிக்கைக்காரன்  கதை என்றதும் இப்படத்தில் புதுமையான , 
வித்தியாசமான இதழியல்  சம்பத்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று எதிபார்த்தால் ஏமாற்றமே .."அயன்" படம் கடத்தல் பின்னணியை கொண்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டதை போல இல்லாமல் 
இதில் வழக்கமான  அரசியல் நிகழ்வுகளே வருவதால் ஈடுபாடு குறைகிறது ..
               உண்மையை எழுதுவதால் ஏற்படும் இடர்பாடுகளையும் உரக்க சொல்லியிருக்கிறார்கள்.....
        கல்லூரியை முடிக்கும் நண்பர்கள் திடீரென ஒரு நாள் அரசியலில் குதிப்பது
 மற்றும் குடிசையில் எரியும் தீயை அணைப்பது, ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பது ,
பிரச்சார மேடையில் வெடிக்கும் குண்டு - அதன் மூலம் ஏற்படும் பரிதாபம் இதையெல்லாம் வைத்து ஒரே தேர்தலில் 
"சிறகுகள்" கட்சி ஜெயித்து   ஆட்சியை பிடிப்பது என லாஜிக் மீறல்கள் ஏராளம்...
சில காட்சிகள் "ஆயுத எழுது" படத்தை நினைவுபடுத்துகின்றன  ...          
         அதிலும் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரவாதிகளின் உதவியை நாடுவது ரொம்ப பழைய "பார்முலா"....இருப்பினும் முடிந்த அளவு பழைய நெடியை
 தவிர்த்து இருக்கிறார்கள்...படத்தின் முடிவு நிறைவை தருகிறது...
 . .இன்றைய சூழலில்  நல்லவனாகவே இருந்தாலும் நேர்மையான முறையில் வெற்றியை
அடைய முடியாது என்பது படம் உணர்த்தும் உண்மை ...




2 comments:

ஆனந்தி.. said...

A Good Review...:))

praveenkumar said...

this story is absolutely based on the election 2011 as u said. but கோட்டா சீனிவாசராவ் child marriage is happend at last election our cm done this... he had persnel manthiravathi with him he begave as per his instructions.. as u said this movie shld be released early... it may create awarness .. the fact of the movie is youngster shld cme to politics.. if thy sure india ill became wealthier....bt as people like raja its a big deal to achive it.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...