27 December 2012

டாப் 20 மூவீஸ்- T20 TAMIL MOVIES 2012...


ந்த வருடம் ஒன்றிரண்டை தவிர பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் ஊத்திக்கொள்ள புது இயக்குனர்களின் மாறுபட்ட  சிந்தனையுடன் வெளிவந்த சிறு முதலீட்டு படங்கள் வெற்றியோடு சேர்த்து நம் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன . ஒரு படத்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , தியேட்டர்காரர்கள் எல்லாம் எவ்வளவு லாப , நஷ்டம் அடைந்தார்கள் என்பதோடு அது ரசிகர்களையும் , விமர்சகர்களையும் எந்த அளவு கவர்ந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அந்த வகையில் 2012 தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான   வருடமாக இருந்தாலும் நம்மை புரட்டிப்  போடும் படியான படங்கள் ஒன்றிரண்டை தவிர எதுவும் வராதது குறை . ரிலீசான மாதங்களின் அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன . பெரிய வெற்றியையடைந்தும் ரீ ரிலீஸ் என்பதால் கர்ணன் படத்தை சேர்க்கவில்லை ...

நண்பன் 

வசூல் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் நமது கல்வி கற்பிக்கும் முறையில் உள்ள குளறுபடிகளை சாட்டையுரித்த 3 இடியட்ஸ்  என்ற ஹிந்திப்படத்தின் அருமையான ரீ மேக் . விஜய் , ஜீவா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அந்த படத்தை போலவே நல்ல பெயரை தட்டிச் சென்றவன் நண்பன் ...

விமர்சனம் படிக்க : நண்பன் - வெற்றியாளன் ...

காதலில் சொதப்புவது எப்படி 

நாளைய இயக்குனர் வெற்றி மூலம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்ற குறும்படத்தை அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படமாக மாற்றி அதில் வணிக ரீதியாக வெற்றியும் அடைந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி ...

அரவான் 

எதிர்பார்த்து ஏமாந்த படமாக இருந்தாலும் சாகித்திய விருது பெற்ற ஒரு நாவலை படமாக்க எடுத்துக்கொண்ட சிரத்தைக்காகவும் , அதை நேர்மையாக படமாக்கிய விதத்திற்காகவும் என்னை கவர்ந்த படம் ...

விமர்சனம் படிக்க : அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...

மெரினா 

தர்க்க ரீதியாக பெரிய அளவிற்கு கவரா விட்டாலும் , நல்ல ப்ரமோ மற்றும் இயக்குனர் பாண்டியராஜின்  ப்ராண்ட் நேம் இரண்டாலும் கிடைத்த ஒப்பனிங் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு நல்ல வசூலை கொடுத்திருக்கிறது ...

விமர்சனம் படிக்க : மெரினா - கால் தொடாத அலைகள் ...

கழுகு 

அருமையான கதைக்களன் , இசை , ஒளிப்பதிவு நடிப்பு இவை எல்லாமே இருந்தும் கவராத காதலும் , திரைக்கதையுமே கழுகு அதிக உயரம் பறக்காததற்க்கு காரணம் . இருப்பினும் இந்த வருடம் கவனிக்க வைத்த  படம் கழுகு . யுவனின் இசை படத்திற்கு பெரிய பலம் ...

விமர்சனம் படிக்க : கழுகு - பறக்கும் உயரம் குறைவு ...

ஒரு கல் ஒரு கண்ணாடி  

வருடத்தின் முதல் பெரிய ஹிட் . சந்தானத்தின்  காமெடி , ஹாரீஷின் இசை இரண்டுமே படத்திற்கு பெரிய பலம் . நடிப்பில் ஓ.கே என்கிற அளவிற்கு  இருந்தாலும் தயாரிப்பாளராக டபுள் ஓ.கே அந்தஸ்தை இயக்குனர் ராஜேஷ் மூலமாக உதயநிதிக்கு கொடுத்த படம் ...

விமர்சனம் படிக்க : ஒரு கல் ஒரு கண்ணாடி - ஓ.கே ...

வழக்கு என்  18/9 

புது முக நடிகர்களை வைத்து தன்னால் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியுமென்று  இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் நிரூபித்த படம் . தனிப்பட்ட முறையில் இந்த படத்தை பற்றிய விவாதங்கள் எனக்கு இருந்தாலும் 2012 ஆம் ஆண்டின் சிறந்த படம் என்று இதை அடித்து சொல்லலாம் ... 

விமர்சனம் படிக்க : வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...
மேலும் படிக்க        : வழக்கு எண் 18/9 - சில விவாதங்கள் ...

கலகலப்பு 

நீண்ட நாள் கழித்து கமர்சியல் இயக்குனராக மீண்டும் சுந்தர்.சி யை நிலைநிறுத்திய படம் . பெயருக்கேற்றார்ப்போல நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக போனதே படத்தின் வெற்றி ... 

விமர்சனம் படிக்க : கலகலப்பு @ மசாலா கபே - மினி மீல்ஸ் ...

ராட்டினம் 

சிறு முதலீட்டு படமாக இருந்தாலும் வேந்தர் மூவீஸ் வாங்கியதால் கொஞ்சம் கவனத்தை பெற்ற படம் . அமெச்சூர் நடிகர்களால் வசூல் ரீதியாக சறுக்கியிருந்தாலும் கதையால் கவர்ந்த படம் ...

விமர்சனம் படிக்க : ராட்டினம் - சுற்றலாம் ...

தடையறத்  தாக்க 

அருண் விஜய்க்கு நல்ல ப்ரேக் கொடுத்த படம் .  விறுவிறு திரைக்கதை , ஸ்டைலிஷான மேக்கிங் இருந்தும் வெகுஜன ரீதியாக அனைவரையும் கவராமல் போனதில் வருத்தமே ...

நான் ஈ 

தரமான க்ராபிக்ஸும் , விறுவிறுப்பான திரைக்கதையும் இருக்கும் போது படத்தின் ஹீரோ ஈயாக இருந்தால் கூட தப்பில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி  . தமிழ் , தெலுங்கு  இரண்டிலும் சக்கை போடு போட்ட படம் ஹிந்திக்கும் பறக்கிறது . சுதீப் , சமந்தா இருவரும் ஈ உயரே பறக்க முக்கிய காரணமாய் இருந்தவர்கள் ...

விமர்சனம் படிக்க : நான் ஈ - நான் ஸ்டாப் பேன்ட்ஸீ ...

பில்லா 2 

பில்லா வை போலல்லாமல் படத்திற்கு மிக்ஸட் ரெஸ்பான்ஸ் இருந்தாலும் ஸ்டைலிஷான மேக்கிங்கிலும் , அஜித்தின் நடிப்பிலும் குறை சொல்ல முடியாத படம் . அஜித் ஓபனிங்கில் கிங் என்பதை திரையுலகிற்கு மீண்டுமொருமுறை உணர்த்திய படம்  ...

விமர்சனம் படிக்க :  பில்லா 2 - டான் ஃபார் ஃபேன் ( DON FOR FAN )...

அட்டகத்தி 

யதார்த்தமான படம் என்றால் சோகமாக தான் இருக்க வேண்டுமா என்ன ? அட்டகத்தி பார்த்த பிறகு தேவையில்லை என்று அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறார்  அறிமுக இயக்குனர் ரஞ்சித் . கத்தியின்றி ரத்தமின்றி ஜாலியாக குத்திய படம் அட்டகத்தி .

சுந்தர பாண்டியன் 

ஈசன் , போராளி இரண்டு  படங்களின் தோல்விக்கு பிறகு கமர்சியல் நடிகனாகவும் , தயாரிப்பாளராகவும் சசிக்குமாரை தூக்கி நிருத்தியிருக்கின்றான்  சுந்தர பாண்டியன் . கலகலப்பான முதல் பாதி , கலங்க வைக்கும் இரண்டாம் பாதி  என கலந்து கட்டி அடிக்கிறான் . படத்தின் வெற்றிக்கு பிறகு சசி 5 சி கேட்பதாக பேச்சு அடிபடுகிறது ...

விமர்சனம் படிக்க :  சுந்தரபாண்டியன் - சறுக்க மாட்டான் ...

சாட்டை 

கொஞ்சம் நாடகத்தனத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் அரசு பள்ளியின் அவலங்களை தோலுரித்துக்காட்டும் சமூக அக்கறையுள்ள படம் . இயக்குனர் அன்பழகனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் ...

விமர்சனம் படிக்க : சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...

பீட்சா  

இந்த வருடத்தின் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றிப்படம் . சிறந்த ஒளிப்பதிவு , திறம்பட்ட திரைக்கதை , விஜய் சேதுபதியின் நடிப்பு இவற்றால் வசூலையும் , விமர்சகர்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்த திகில் ஜிகர்தண்டா . பாலாஜியை தொடர்ந்து குறும்பட உலகிலிருந்து திரையுலகிற்கு வெற்றிகரமாக கால் பதித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் ...

விமர்சனம் படிக்க :  பீட்சா - சாப்பிடலாம் ...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

வித்தியாசமான தலைப்பு , வசீகரமான ப்ரமோ இரண்டோடு மட்டும் நின்று விடாமல் வியாபாரிகள் , ரசிகர்கள் இருவரையும் நிறைவு செய்த படம் . தன் முதல் படத்திலயே முத்திரை பதித்து விட்டார் பாலாஜி தரணீ தரன் ...

விமர்சனம் படிக்க : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - நிறைவு...

துப்பாக்கி 

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களால் சர்ச்சைக்கு உள்ளானாலும் வசூலுக்கு  எந்த பங்கமும் இல்லாமல் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் துப்பாக்கி . க்ளைமாக்ஸ் சண்டையால் காமெடி பண்ணாலும் விறுவிறு திரைக்கதையால் இந்த வருடத்தின் இரண்டாவது வெற்றியை விஜய் க்கு கொடுத்திருக்கும் படம் . பெரிய இயகுன்ர்களிடம் ஈகோ பார்க்காமல் ஹீரோக்கள் தங்களை  ஒப்படைத்தால் வெற்றியை எதிர்பார்க்கலாம் என்பதை உணர்த்துகின்றன விஜய்யின் வெற்றிகள் ...

விமர்சனம் படிக்க :  துப்பாக்கி - ஏ. ஆர். 47...

போடா போடி 

சரியான தருணத்தில் ரிலீசாகி நல்ல படியாக ப்ரமோ செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் சிம்பு வின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கக் கூடிய படம் ...

விமர்சனம் படிக்க : போடா போடி - பொழுதுபோக்கு ...

கும்கி 

மைனா வில் பாதியளவு கூட படம் கவரவில்லை என்றாலும் நல்ல ஒளிப்பதிவு , பாடல்கள்  , குடும்பத்துடன் பார்க்கும்படியான கதை , அதோடு மட்டுமல்லாமல் தற்போதைக்கு வேறெந்த நல்ல படமும் இல்லாதது போன்ற காரணங்களால் எதிர்பார்த்ததை விட வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது கும்கி ...

விமர்சனம் படிக்க : கும்கி - கோவில் யானை ...










16 December 2012

கும்கி - கோவில் யானை ...


மிகவும் தாமதமாக தனது ஐந்தாவது படத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தக்கவைத்துக் கொள்ள இயக்குனர் பிரபுசாலமன் எடுத்த முயற்சி கும்கி யை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசத்திலிருந்து நன்றாக தெரிகிறது.கும்கி யை பொறுத்தவரை அவரின் முயற்சி திருவினையாக்கியதா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லலாம் ...

சிறு வயதிலிருந்தே மாணிக்கம் என்கிற யானையை ( கும்கி ) வைத்து பிழைப்பு நடத்தும் சொக்கன் (  விக்ரம்சிவாஜி ) தெரிந்தவருக்கு உதவி செய்வதற்காக தனது யானையை கும்கி ( காட்டு யானைகளை விரட்ட உதவும் பயிற்சி பெற்ற யானை ) என்று சொல்லி ஆதிக்காடுக்குள் நுழைகிறான் .  ஊர்த்தலைவர் மகள் அல்லி ( லக்ஷ்மிமேனன் ) மீதான காதல் தனது தாய் மாமா கொத்தல்லி ( தம்பிராமையா ) சொல்லையும் மீறி சொக்கனை அந்த காட்டிலேயே தங்க வைக்கிறது . சொக்கன் காதல் நிறைவேறியதா ? கொம்பன் என்கிற காட்டு யானையிடமிருந்து  ஊர் மக்களை காப்பாற்றினானா ? என்ற கேள்விகளுக்கு பதில் தான்  கும்கி ...

விக்ரம் சிவாஜிக்கு இந்த படம் நல்ல அறிமுகம் . முகத்தில் ஒரு விதமான கடுமை இருந்தாலும் யானைக்காக கெஞ்சும் இடத்திலும் , க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் தன குடும்பத்தின் பெயரை காப்பாற்றுகிறார் . காதல் காட்சிகளுக்கு விக்ரம் பெரிய அண்ணா கமல் ஹாசனிடம் க்ளாஸ் எடுத்துக்கொண்டால் கூடிய விரைவிலேயே தேறிவிடுவார் ... முதலில் புக் செய்ததால் லக்ஷ்மி மேனனை அறிமுகம் என்று போடுகிறார்கள் . யானையை கண்டு பயப்படும் போதும் , பிறகு அதன் மீது பாசம் காட்டும் போதும் தனது நடிப்புத்திறமையை நிரூபிக்கிறார் ...


கதையை விட இயக்குனர் தம்பி ராமையாவை நம்பியிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது . " ஹெல்பர் அனிமல்" என்று இவர் உதவியாளரை அழைப்பதும் , வேலையை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய சூட்சுமங்களை சொல்வதுமென முதல் பாதி முழுவதும் காமெடியுடன் இவரை வைத்தே படத்தை நகர்த்துகிறார்கள் . மனிதர்  யானை பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆகுமென பயந்து நடுங்க ஊர் மக்களோ இவரை பெரிய வீரர் என்று பில்ட் அப் செய்ய அதற்கேற்றாற்போல தம்பி ராமையா அண்டர்ப்ளே நடிப்பால் அசத்துகிறார் . இவருக்கு வில்லன் போல தேவையில்லாமல் பின்னணி இசை கொடுப்பதும் , சீரியசான படத்திற்கு காமெடியை பிரதானமாக நம்பியதும் மிகப்பெரிய குறை ...

ஊர்த்தலைவராக வருபவர் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் . ஜூனியர் பாலையா , மைனா வில் இன்ஸ்பெக்டராக நடித்தவர் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . முதல் ப்ரேமிலிருந்து கடைசி வரை சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களிலேயே நிற்கிறது . சொல்லப்போனால் இவரின் ஒளிப்பதிவும் , லொக்கேஷனும் இல்லையென்றால் நிச்சயம் படத்தை  பார்த்திருக்க முடியாது . இமானின் இசை படத்திற்கு மற்றொரு பெரிய பலம் .
 " ஒன்னும் புரியல " ,  " அய்யய்யோ " பாடல்களும் அதை படமாக்கிய  விதமும் அருமை .பின்னணி இசை தான் கொஞ்சம் மைனா வை நினைவுபடுத்துகிறது...


தற்செயலாக ஊருக்கு வரும் ஹீரோ , ஊர்த்தலைவர் மகள் மேல் காதல்வயப்படுவது என்கிற வழக்கமான ஒன்லைன் தான் என்றாலும் அதில் யானையை புகுத்திய சாமர்த்தியம் , யானை - விக்ரம் இருவருக்குமிடையேயான பாசத்தை விளக்கும் காட்சிகள் , காட்டில் வாழ்ந்தாலும் தன் மகள்  மேல் சிறிதும் சந்தேகப்படாத அப்பா , அவரின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக காதலை துறக்கும் மகள் , ஜம்போ வந்தால் என்ன ஆகுமோ என்கிற பயத்தை தக்கவைக்கின்ற டெம்போ இப்படி இசை , ஒளிப்பதிவு தவிர படத்தில் ரசிக்கும்படியான மற்ற விஷயங்களும் இருக்கின்றன ...

ஒரு பெண்ணை பார்த்தவுடன் காமம் வருவது இயற்கை , ஆனால் பார்த்தமாத்திரத்தில் பசியில்லை , தூக்கமில்லை , இவள் தான் உயிர் என்றெல்லாம் காதல் கிறக்கத்தில் ஹீரோ அலைவது அதர பழசான பேத்தல் . யானை - விக்ரம் உறவில் ஏற்பட்ட தாக்கத்தில் ஒரு சிறு விழுக்காடு கூட விக்ரம் - லக்ஷ்மி காதலில் ஏற்படாதது படத்தின் பெரிய சறுக்கல் . காதல் சுவாரசியமாக இல்லாததால் பிரிவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .
எக்கச்சக்க பில்ட் அப் கொடுத்துவிட்டு கடைசியில் யானைகளுக்கிடையேயான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சி.ஜி சமாராக இருப்பது பெருத்த ஏமாற்றம் . படத்தின் கவராத காதலால் காட்டு யானைகளையே  விரட்டக்கூடிய கும்கி கட்டிப்போடப்பட்ட கோவில் யானையாகவே கண்களுக்கு தெரிகிறது . கும்கி - COULD HAVE BEEN BETTER ...

ஸ்கோர் கார்ட் : 42  


14 December 2012

நீதானே என் பொன்வசந்தம் - விண்ணைத்தாண்டி வந்திருக்கும் ...


சைஞானி , கௌதம் மேனன் , ஜீவா இவர்கள் கூட்டணிக்காக படம் பார்க்க போனால் எல்லோரையும் விட சர்ப்ரைசாக சமந்தா அதிகம் மனதில் பதிகிறார். மற்றபடி படம்  விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த இன்ஸ்பிரேஷனில் யாரோ புது இயக்குனர் எடுத்த அளவிற்கு அதிகம் அழுத்தமில்லாமல் இருக்கிறது ...

வருண் ( ஜீவா ) , நித்யா ( சமந்தா ) இருவரின்  காதல் , ஊடல் . கூடல் எல்லாவற்றையும் பிள்ளை பிராயத்திலிருந்து திருமணம் வரை இரண்டரை மணி நேரம் சொல்வதே  நீதானே என் பொன்வசந்தம் ...

பள்ளி மாணவன் , கல்லூரி மாணவன் , உத்தியோகம் பார்ப்பவன் என்று மூன்று விதமான கெட்டப்புகளில் வந்தாலும் ஜீவா வித்தியாசம் காட்டுகிறார் , ஆனாலும் இளைஞனாக கவர்ந்த அளவிற்கு பள்ளி மாணவனாக நம்மை கவராததற்கு அவர் தோற்றம் கூட காரணமாய் இருக்கலாம் ... நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை , வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம் . பள்ளி மாணவியாக குறும்பு , கல்லூரி மாணவியாக காதல் , இளைஞியாக காதலில் பிரிந்த சோகம் என்று நவரசங்களையும் பிழிந்திருக்கிறார் . படத்தின் பின்பாதியில் இவரை அதிகம் அழ விடாமல் அடக்கி வாசிக்க விட்டிருக்கலாம். ஜீவாவை விட காதலுக்காக இவர் அதிகம் ஏங்குவது சில இடங்களில் ஒரு தலை காதல் போல இருக்கிறது ...


அதிகம் பின்னணி இசை இல்லாமல் நேர்கோட்டில் போகும் திரைக்கதைக்கு முதல் பாதியில் ஆபத்பாந்தவனாக இருப்பது சந்தானம் மட்டுமே .
" பொண்ணுங்களும் காஸ் பலூனும் ஒன்னு , உட்டா பறந்துருவாங்க " என்று இவர் அடிக்கும் கமெண்டுக்கு கிளாப்ஸ் அள்ளுகிறது . இவருக்கு ஜோடியாக வரும் குண்டு பொண்ணும் கவனிக்க வைக்கிறார் ...

எம்.எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான பீலை கொடுக்கிறது. படத்தின் மிகப்பெரிய ஒப்பனிங்குக்கு கௌதம் தவிர மற்றுமொரு முக்கிய காரணம் இசைஞானி . ஏற்கனவே சாய்ந்து சாய்ந்து , என்னோடு வா , வானம் மெல்ல உட்பட எல்லா பாடல்களும் ஹிட்டாகி விட்டதால் அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்று பார்க்க ஆவலோடு போனால் மாண்டேஜுகளாகவே எடுத்து ஏமாற்றம் அளிக்கிறார்கள் . பின்னணி இசைக்கும் பெரிதாக வேலையில்லாததால் ஏமாற்றமே ...

இரண்டு லீட் கேரக்டர்களின் காதல் , ஈகோ பிரச்சனையால் வரும் பிரிவு இவை இரண்டை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு திரைக்கதையை  நகர்த்துவதென்பது எளிதான விஷயமல்ல . கெளதம் மேனனுக்கு ஏற்கனவே இதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார் . வருண் - நித்யா இருவரின் கதாபாத்திரங்களையும் நம்முடன் உலவ விட்டிருப்பது இயக்குனரின் வெற்றி . குறிப்பாக க்ளைமேக்ஸ் வருவதற்கு முன் ஜீவா - சமந்தா இருவரின் படபடப்பான காட்சிகள் க்ளாசாக இருக்கின்றன .

படம் சில  வருடங்களுக்கு முன் நடப்பதை உணர்த்தும் விதமாக பணக்கார ஹீரோயின் அந்த காலகட்டத்தில் பிரபலமான நோக்கியா செல்போனை உபயோகப்படுத்துவதாக காட்டுவது கௌதமின் லாஜிக் சென்சிற்கு ஒரு எடுத்துக்காட்டு  . ஹீரோவிற்கு குடும்ப பொறுப்பு வருவதற்குரிய லீட் சீன் அழுத்தமில்லாமல் இருந்தாலும் யதார்த்தமாக இருக்கிறது .


ஹீரோயினை சுற்றி வரும் கதையில் அவர் குடும்பம் பற்றிய டீட்டைளிங் இல்லாதது குறை . படமே விண்ணைத்தாண்டி வருவாயா வின் பார்ட் 2 போல இருப்பதால் அதோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை . சிம்பு வை போலவே ஜீவாவும் ஹீரோயினை தேடி போகிறார் , அதில் திரிஷா திருமணத்தை நிறுத்தினால் இதில் ஜீவா நிறுத்துகிறார் . சிம்பு - திரிஷா கெமிஸ்ட்ரி போல ஜீவா - சமந்தா கெமிஸ்ட்ரி இருந்தாலும் விடிவி போல காதலர்கள் ஒன்று சேர்வதில்  எந்த வித காம்ப்ளிகேஷனும் இல்லாததால் படம் ரொம்பவே ப்ளாட்டாக இருந்து கொஞ்சம் சலிப்பை தருகிறது .

ஒரு பத்து நிமிடம் மனது விட்டு பேசியிருந்தால் முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை நீட்டி முழக்கி விட்டார்களே  என்றும் தோன்றாமல் இல்லை . இடைவேளைக்கு முந்திய ஜீவா - சமந்தா பிரிவு சீனில் ஒரு க்ளோஸ் அப் கூட வைக்காமல் டாப் ஆங்கிளிலேயே ஷாட் வைத்திருப்பது சீனிற்கு தேவையான இம்பாக்டை கெடுக்கிறது . இது போன்ற குறைகளை தவிர்த்து வசனங்களாக மட்டும் இல்லாமல் விசுவலாகவும் படத்தை சொல்லியிருந்தால் நிச்சயம் நீதானே என் பொன்வசந்தம் விண்ணைத்தாண்டி  வந்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 42 


12 December 2012

12.12.12 ...



மிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் நடிப்பில் ஏற்பட்ட வெற்றிடத்தை கமல் நிரப்ப , எம்.ஜி.ஆருக்கு பின் வசூலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்று வரை நிரப்பிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . எனக்கு தெரிந்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த பிறகு  விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே  வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்திருக்கும் . அதோடு நஷ்டமடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமல் எடுத்து வரும்  பரீட்சார்த்த முயற்சிகளை சமன் செய்யும் விதமாக ரஜினியின் கமர்சியல் படங்கள் அமைந்து வந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது .
வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவருக்கு வாய்த்தது போல உணர்ச்சிப்பூர்வமான ரசிகர் பட்டாளம் வாய்த்தது இல்லை . 12.12.12 அன்று  பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எல்லோர் சார்பாகவும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதோடு எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் 12 படங்களையும் இதோ வரிசைப்படுத்தியுள்ளேன் . உங்களுக்கு பிடித்த 12 படங்கள் என்னென்ன ?

மூன்று முடிச்சு 

கமல் , ரஜினி இருவர் நடிப்பில் அவர்களின் குரு கே.பாலச்சந்தர் இயக்கிய படம் . காதலுக்காக நண்பனையே கொலை செய்யும் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் ரஜினி . ஆற்றில் விழுந்து கமல் இறந்த பிறகு ரஜினி பார்க்கும் குரூர பார்வை இன்றும் நம் கண்களில் நிற்கும் . சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் , நடை இவற்றோடு தன் சிற்றன்னையாக ஸ்ரீதேவியே வந்த பிறகு நன்றாக நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி...

16 வயதினிலே 

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களில் நிச்சயம் இடம்பிடிக்கும் படம் பாரதிராஜாவின் " 16 வயதினிலே " . சப்பாணியாக கமல் , மயிலாக ஸ்ரீதேவி இருவரின் நடிப்பும் எப்படி நம் மனதில்  பதிந்ததோ அதே போல " இது எப்படி இருக்கு " என்று வசனம் பேசும் பரட்டையாக ரஜினியின் நடிப்பும் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ...

ஆறிலிருந்து அறுபது வரை 

ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிய பெருமை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு மட்டுமே உண்டு . ரஜினியை வைத்து அவர் முரட்டுக்காளை , பாயும்புலி என்று எத்தனையோ கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு பாசமிகு அண்ணனாக நடிப்பில் ரஜினியின் மற்றொரு பரிமாணத்தை காட்டும் படம் ...

முள்ளும் மலரும் 

விசுவலாக கதை சொல்வதில் முன்னோடி மகேந்திரன் . அவர் இயக்கத்தில் வழக்கமான கோபக்கார இளைஞன் வேடமென்றாலும் தன் யதார்த்தமான நடிப்பால் அதற்கு தனி முத்திரையை கொடுத்திருப்பார் ரஜினி . தங்கை ஷோபாவிற்காக சரத்பாபுவிடம் பேசும் இடம் சூப்பர் ஸ்டார்  நடிப்பில் ஒரு மைல்கல் ...

பில்லா 

ரஜினி நடித்த அமிதாப்பின் பல ரீ மேக் படங்களில் எத்தனையோ  வருடங்கள் கழித்து மீண்டும் வேறொரு நடிகரை வைத்து ரீ மேக் செய்த போதும்  மெகா ஹிட்டடித்த படம் பில்லா . மிரட்டும் டான் , மிரளும் அப்பாவி என்று இரண்டு வேடங்களிலும் புகுந்து விளையாடிருப்பார் சூப்பர் ஸ்டார் .

நெற்றிக்கண் 

காமுக அப்பா , ஒழுக்கமான பையன் என்று இரண்டு வேடங்களில் ரஜினி கலக்கிய படம் . " இது கட்டில் , நீ பொண்ணு , நான் பையன் " என்று வசனம் பேசிய படியே குறும்புப்பார்வை பார்க்கும் கிழட்டு ரஜினியின் நினைவுகள் இன்றும் இளமையாக நெஞ்சில் நிற்கின்றன ...

தில்லு முல்லு 

ஆக்சன் ஹீரோவாக மட்டும் வளம் வந்து கொண்டிருந்த ரஜினியை முழு நீள காமெடியில் கலக்க வைத்திருப்பார் கே.பாலச்சந்தர் . சந்திரன் , இந்திரன் என்று மாறி மாறி ரஜினி தேங்காய் ஸ்ரீனிவாசனை ஏமாற்றும் சீன்கள் உம்மனாமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரஜினி படம் . இப்பொழுது மிர்ச்சி சிவாவை வைத்து இப்படத்தை ரீ மேக் செய்து கொண்டிருக்கிறார்கள் , படம் பெயரை கெடுக்காமல் இருக்கிறதா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

ஜானி 

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த மற்றுமொரு மனதில் நிற்கும் படம் ஜானி . முடி திருத்துபவர் , திருடன் என்று இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பார் ரஜினி . ரஜினி - ஸ்ரீதேவி காதல் காட்சிகள் இன்றும் இனிப்பவை . இசைஞானியின் இசை படத்திற்கு பெரிய பலம் ...

தளபதி 

வழக்கமான ஸ்டைல்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ரஜினியை ரசிக்க வைத்திருப்பார் மணிரத்னம் . படம் முழுவதும் ரஜினியின் நடிப்பு , மம்முட்டியுடனான காம்பினேஷன் , " சுந்தரி " பாடலில் ரஜினியின் கெட்டப் என்று எல்லாமே படத்தின் ஹைலெட் . இசை , ஒளிப்பதிவு இவற்றிற்க்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய படம்...

அண்ணாமலை 

ரஜினி நண்பனுக்கு நண்பன் , எதிரிக்கு எதிரி என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம் . படத்தில் தீய அரசியவாதிக்கு எதிராக ரஜினி குரல் கொடுக்க நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர வேண்டுமென்று ரசிகர்களை ஏங்க வைத்த , வைத்துக்கொண்டிருக்கின்ற படம் ...

பாட்ஷா 

சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு மிக கச்சிதமாக பொருந்தும்  படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளி வந்த பாட்ஷா . கமல் ரசிகனான  என்னை ரஜினியின் பக்கம் அதிகமாக ஈர்த்த படம் . " பாட்ஷா , பாட்ஷா " என்று பின்னணியில்  அதிர சூப்பர் ஸ்டார் நடந்து வரும் அழகுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம் ...

சிவாஜி 

ஷங்கரின் வழக்கமான சமூக சீர்திருத்த பாணி படம் தானென்றாலும் விறு விறு திரைக்கதையால் நம்மை கட்டிப்போடும் படம் . குறிப்பாக சில சீன்களே வந்தாலும் மொட்டை தலையுடன் வளம் வரும் ரஜினி சும்மா அரங்கத்தையே அதிரவிட்டிருப்பார் . ரஹ்மான் இசையில்  பாடல்கள் , விவேக் காமெடி , கிராபிக்ஸ் இவையெல்லாம் படத்தின் ஹைலைட் ... இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 டி யில் வந்து அனைவரையும் மீண்டும் குஷிப்படுத்த போகிறது சிவாஜி ...










11 December 2012

மகாகவி ...


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்  சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ ?

- மகாகவி பாரதியார்

என்றென்றும் எங்கள் நெஞ்சிலே
வீழாதிருக்கும் மகா கவியே
உன்னை வணங்குகிறேன் ...

8 December 2012

விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா ...



லகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா ? தவறா ? என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ  07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும்  தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் ஜெயராம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முழு தொகுப்பு  தமிழ் ப்ளாக் உலக வரலாற்றில் முதன்முறையாக இதோ உங்களுக்காக ( யாராவது முன்னரே எழுதியிருந்தால் கம்பெனி பொறுப்பல்ல ஹி .. ஹி ... ) :


  • ஒரு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஒரு இடத்தில் நடத்துவது என்பதே      சாதாரண காரிமயமல்ல , அப்படியிருக்க அதையே மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே தினத்தில் நடத்துவதென்பது எவ்வளவு சிரமம் என்பது அங்கே நடந்த பரபரப்பிலிருந்தும் , நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது  ( இதுலயும் உலகநாயகன் ஒரு ட்ரென்ட்செட்டர் )

  • எம்.ஐ.பி ( மோஸ்ட் இம்பார்டன்ட் பெர்சன் ) , வி.வி.ஐ.பி , வி.ஐ.பி என்று மூன்று பாஸ்கள் கொடுத்திருந்தார்கள் , அதில் எம்.ஐ.பி யில் மட்டும் பிரபலங்கள் அமர்ந்திருக்க மற்ற இரண்டையும் ரசிகர்கள் ஆக்ரமித்தார்கள் . எம்.ஐ.பி யில் இருந்ததால் இசைஞானி மற்றும் உலகநாயகனை மிக அருகாமையில் ரசிக்க முடிந்தது ( எதுக்கு இந்த விளம்பரம் )      

  • நிகழ்ச்சியை அறிமுகம் செய்த பெண் ஒரு இடத்தில வாய் தவறி ஜெயா டி .வி என்பதற்கு பதில் விஜய் டி .வி என்று சொல்லிவிட்டு பின்பு சுதாரித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ... ( பேமண்ட் அவுட்டா ?!  )   

  • மதுரையில் நடந்த நிகழ்ச்சியை திரையில் காட்டிய போது சென்னையை விட அதிக கூட்டத்தையும் ,ஆரவாரத்தையும் காண முடிந்தது . மதுரையில் இசைபேழையை ஒரு ரசிகரே வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது ... ( பாசக்கார பயலுக

  • ஜெயா டி .வி யின் ராகமாலிகா குழுவினர் கமல்ஹாசனின் பழைய பாடல்களை பாடினார்கள் ... ( பொழுத ஓட்டனும்ல

  • ஜெயராம் மூன்றாம்பிறை படத்தின் கமல் - ஸ்ரீதேவி குரல்களை நன்றாக மிமிக்ரி செய்ததோடு தன் 25 வருட கால நட்புக்காக கமல் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே போர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததையையும் நன்றியோடு  நினைவு கூர்ந்தார்  ( ஆ..ஆ..ஆ ) 

  • பாடகர் கார்த்திக் போட்டு வைத்த காதல் திட்டத்தில் ஆரம்பித்து மேகம் கொட்டட்டும் வரை கமல் பாடல்களை பாடி நம்மை இசை மழையில் நனைத்தார் ... ( நல்ல வேலை உண்மையிலேயே மழை வரல )

  • கமல் கொன்னக்கோல் வாசிக்க சங்கர் மகாதேவன் பாடிய " உன்னை காணாமல் " பாடலை தரணி , லிங்குசாமி , ஏ .ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தனர் . கமல் குரலில் மாயா , மாயா என்ற வரிகள் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ... ( குரலுக்கு மட்டும் தனியா ஏதாவது காயகல்பம்  சாபிடுவாரோ ?!

  • " சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம் ஆனால் அவருக்கு இயக்குனர்கள் தயிர் சாதம் தான் வைத்தார்கள் , எனவே எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன் " என்று கமல் தானே படத்தை இயக்குவதற்கான காரணத்தை சொன்னதாக முருகதாஸ் ஒரு தகவலை சொன்னதோடு கமலுக்கேற்ற சமையலுடன் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லி ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார் ... ( உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  

  • படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் - எஸான் - லாய் மூவரையும் கமல் அறிமுகம் செய்ததோடு இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம்  என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

  • சங்கர் மகாதேவன் குரலில் " எதை கண்டு " பாடலை இயக்குனர்கள் பாரதிராஜா , கே.எஸ்.ரவிக்குமார் , வசந்த் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தார்கள் . ரவிக்குமார் கமலிடம் படங்களுக்கு இடையே ஏனிந்த இடைவெளி என்றும் நடு நடுவே  என்னை போன்ற இயக்குனர்களையும் வைத்து படம் பண்ணலாமே என்றும் ரசிகர்கள் கேட்பதாக சொல்லி அவர் கேட்டுக்கொண்டார் ... ( நல்லா வருவீங்க தம்பி )

  • பாரதிராஜா பேசும் போது முன்னணி  நடிகராக இருக்கும் போதே  கமல் 16 வயதினிலே படத்திற்காக கோமணம் கட்டிய துணிச்சலை பாராட்டியதோடு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே நடிகர் கமல் என்றும் புகழாரம் சூட்டினார் ... ( உடலும் ரசிகனுக்கு பணமும் ரசிகனுக்கு  )    

  • ஜெயராம் கமலிடம் நீங்க ஹாலிவுட்டுக்கு போகும் போது  எந்த நடிகைக்கு கிஸ் அடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு " நான் எச்ச பண்றதுகாகவா அங்க போறேன் " என்று சொல்லி கமல் காமெடி செய்தார்... ( பயபுள்ளைக திருந்த விட மாட்டேன்றாய்ங்களே

  • பிரபு , ராம்குமார் , விக்ரம் பிரபு மூவரும் மேடையேறிய போது பிரபு கமலை அண்ணே என்று அழைத்து பாசத்தை காட்டினார் ... ( சிவாஜி செத்துட்டாரா ?! எவன் சொன்னது ?  

  • படத்தின் கதாநாயகிகளான ஆண்ட்ரியா , பூஜா இருவரும் கமலுக்கு இடம் , வலது என அழகாக நின்று கொண்டிருந்தார்கள் . ஆண்ட்ரியா பாடியதை விட பூஜா தப்பு தப்பாக பேசிய கொஞ்சும் தமிழ் அழகாக இருந்தது ...                ( நைட் நேரத்துல ஆண்ட்ரியாவ  அரை கவுன்ல பாத்ததுல இருந்து தூக்கம் போச்சு  )  

  • விழாவின் முடிவில் பிரபலங்கள் உட்பட படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவரும்  மேடை ஏற்றப்பட்டார்கள் . இரண்டு பாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்தது மற்றும் ஸ்பீக்கரின் இரைச்சல் போன்ற சில குறைகளை தவிர இசை வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது ... ( இந்த தடவ பொங்கல் ஜனவரி 11 ல தான்)

4 December 2012

நீர்ப்பறவை - நீர்த்த பறவை ...


முதல் படமான தென்மேற்குபருவக்காற்று வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் தர்க்க ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளையும் , சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதினையும் இயக்குனர் சீனுராமசாமிக்கு பெற்றுத்தந்தது , ஆனால் இரண்டாவது படமான நீர்ப்பறவை இரண்டையுமே தக்கவைத்துக்கொள்ளாமல் போனது துரதிருஷ்டமே ...

இறந்து போய் தன் வீட்டிலேயே புதைக்கப்பட்ட கணவனை பற்றிய  போலீஸ் விசாரணையில் ஒரு தாயின்  ( நந்திதா தாஸ்ப்ளாஸ்பேக்கில் 25 வருடங்கள் முன்னோக்கி படம் விரிகிறது . குடிக்கு அடிமையான அருளப்பன்சாமி (  விஷ்ணு ) ,  தேவாலயத்தில் வளரும் பெண் எஸ்தர்
( சுனைனா ) இருவருக்குமிடையேயான காதல் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை ...

அடுத்தவர்களை ஏமாற்றி காசு வாங்கியாவது குடிக்கும் கதாபாத்திரத்தில் விஷ்ணு பெரிதாக கவரவில்லை . எதற்கு அவர் குடிக்கு அடிமையானார் என விளக்கப்படாததும் , இத்தனை வருடங்களாய் திருந்தாதவர் ஒரு பெண் தலையில் கை வைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டதும் திருந்த முற்படுவதும் அதரப்பழசாக இருப்பதால் மனதில் ஒட்டவில்லை ...


சுனைனாவை அப்படியே விட்டிருக்கலாம் ஏன் கருப்படித்தார்கள் என தெரியவில்லை . கவர்ந்திருக்க வேண்டிய இவரது கதாபாத்திரம் விஷ்ணுவுடனான ஏனோ தானோ காதலால் நம் கவனத்தை பெறவில்லை . கணவனை காணாமல் தேடும் இடத்தில மட்டும் மனசை லேசாக தொடுகிறார். இவருடைய வயதான கேரக்டருக்கு தேவையில்லாமல் நந்திதா தாஸை வீணடித்திருக்கிறார்கள் . விஷ்ணுவை ஒரு தலையாய் காதலிக்கும் பெண் சுனைனாவை விட அழகாக இருக்கிறார் ...

தாயாக நடித்திருக்கும் சரண்யா பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை . இன்றைய தமிழ் நடிகர்களுக்கு இருக்கும் யதார்த்த தாய் . மகன் குடிக்கு காசு கொடுப்பது இவர் கதாபாத்திரத்தின் மேல் மதிப்பை தருவதற்கு பதில் வெறுப்பை தருகிறது . படகு செய்யும் பாய் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி , தமிழ் வாத்தியார் ஜோசப் பாரதி ( குடிகார கதாபாத்திரத்துக்கு அந்த மகாகவி பெயரை வைக்க இயக்குனருக்கு  கூசவில்லையா ?! ) யாக தம்பிராமையா , நண்பனாக அட்டாக்பாண்டி , அப்பாவாக வருபவர் , பாதிரியார் வேஷத்தில் அழகம்பெருமாள் , மீனவராக அருள்தாஸ் என்று எல்லோரும் படத்திற்கு இயல்பாக பொருந்துகிறார்கள் .

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு ராமேஸ்வர கடல் பின்னணியை கண்முன்  நிறுத்துகிறது . " ரத்தக்கண்ணீர் " பாடலில் வரும் விஷ்ணுவின் சில்அவுட் சிறந்த ஒளிப்பதிவிற்க்கு ஒரு சின்ன டீஸ்பூன் . " பர பர " பாடலில் மட்டும் ரகுனந்தனின் இசை தெரிகிறது . வைரமுத்துவின் பாடல் வரிகளில் " தேவன் மகளே , ஆசீர்வாதம் , ஜெபிக்கவா , சிலுவைக்காடு " என பிரசங்க நெடி...


கடல் பின்னணி , மீனவர்களை பற்றிய சில தகவல்கள் , குடிக்கு அடிமையான கிறிஸ்துவரை இந்து  டாக்டர் திருத்துவது , குடியிலிருந்து மீண்ட பிறகு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு முஸ்லீம் உதவுவது போன்ற காட்சிகளில் சொல்லாமல் சொல்லப்பட்ட தேசிய ஒருமைப்பாடு போன்ற சில விஷயங்கள் மட்டுமே படத்தில் கவனிக்க வைக்கின்றன .

25 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது என்று வாயால் சொல்கிறார்களே தவிர அதை காட்சிகளில் காட்டுவதற்கு சுத்தமாக மெனக்கெடவில்லை . உதாரணத்திற்கு  ஒரு சீனில் 1985 என பொறிக்கப்பட்ட மசூதி காட்டப்படுகிறது , ஆனால் அதை பார்க்கும் போதே தற்போதைய நிலையில் அப்படியே படம் பிடித்ததால் 25 வருடங்களுக்கு முந்தையது என்று நன்றாகவே  தெரிகிறது. மேலும்  உடை,அலங்காரம் போன்றவற்றிக்கு கூட பெரிதாய் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை .

அது மட்டுமல்லாமல் தீவிரவாதம் , மீனவர் படுகொலை போன்ற நடப்பு சமாச்சாரங்கள் பற்றிய வசனங்கள் 25 வருடங்களுக்கு முன்னாள் பேசப்படுவது யதார்த்தமாக இல்லை . ஜெயமோகன் கூட இருந்தும் வசனங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை . கடலோரக்கவிதைகள் , இயற்கை போன்று கடல் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களில் காதல் சுனாமியை பார்த்த நமக்கு நீர்ப்பறவை ஒரு நீர்த்த பறவையாகவே கண்களுக்கு தெரிகிறது ...

ஸ்கோர் கார்ட் : 39 

3 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - நிறைவு...


வித்தியாசமான தலைப்பு , வசீகரமான ப்ரொமோ இவற்றோடு மட்டும் நின்று விடாமல் தன் முதல் படத்தையே தமிழ் சினிமாக்களின் பார்முலாக்களை உடைக்கும் படமாக தந்திருக்கிறார்  இயக்குனர் பாலாஜி தரணீதரன் . லோ பட்ஜெட்டாக இருந்தாலும் படம் ஹை இம்பாக்ட் கொடுக்கிறது ...

இரண்டு நாளில்  காதலித்த பெண்ணுடன் கல்யாணத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பிரேமிற்கு ( விஜய் சேதுபதி ) பின்னந்தலையில் , அதிலும் குறிப்பாக மெடுலா வில் அடிபட்டு விடுவதால் தற்காலிக நினைவுகளை இழந்து தனலட்சுமி ( காயத்ரி ) யின் காதல் உட்பட கடந்த ஒரு வருடங்களில் நடந்த எல்லாவற்றையும் மறந்து விடுகிறார் . பிரேமின் நண்பர்கள் பக்ஸ் ( பகவதி பெருமாள் ) , சரஸ் ( விக்னேஸ்வரன் ) , பஜ்ஜி ( ராஜ்குமார் ) மூவரும் நடந்த சம்பவத்தை மறைத்து பிரேமிற்கு எப்படி திருமணத்தை முடித்து வைக்கிறார்கள் என்பதை நீளமாக இருந்தாலும் நிறைவாக சொல்லியிருக்கிறார்கள் ...


இந்த வருடம் பீட்சா வை தொடர்ந்து விஜய் சேதுபதி  புகுந்து  விளையாடியிருக்கும் மற்றொரு படம் இது . பக்கத்து வீட்டு பையன் போல  பாந்தமாக  இருந்தாலும் மனிதர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன முகபாவங்களில் சிக்ஸர் அடிக்கிறார் . " என்ன ஆச்சு , கிரிக்கெட் விளையாண்டோம் " , " நீ சொன்னா பில்டிங்லருந்து குதிப்பேண்டா " என்று சொன்ன வசனங்களையே படம் நெடுக திரும்ப திரும்ப சொன்னாலும் நம்மை முடிந்தவரை சோர்வடையாமல் வைத்ததற்காகவே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ...

லீடிங் கேரக்டரை விஜய் சேதுபதி செய்தாலும் நண்பர்களாக நடித்திருக்கும் மற்ற மூவரும் உண்மையான ஹீரோக்களே . இவர்களுள் ஸ்கேன் , கெமிக்கல் ரியாக்ஷன் பற்றியெல்லாம் சீரியசான முகத்துடன் பேசி நம்மை சிரிக்க வைக்கும் பக்ஸ் முதலிடம் வகிக்கிறார் . இவரை போன்ற ஒருவரை நம் வாழ்நாளில் நிச்சயம் சந்தித்திருப்போம் அல்லது சந்தித்துக்கொண்டிருப்போம் என்பதே இந்த கேரக்டரின் பெரிய ப்ளஸ் . மற்ற இருவரும் மிக யதார்த்தமாக நடித்திருந்தாலும் ராஜ்குமாரின் முகபாவங்களில் மட்டும் சில இடங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது . படம் போகிற போக்கில் இந்த குறை பெரிதாக தெரியவில்லை .

இடைவேளைக்கு பிறகு இன்ட்ரோ ஆகியிருந்தாலும் காயத்ரி நம்மை கவர தவறவில்லை . குறிப்பாக ரிசப்ஷன் காட்சிகளில் இவர் நடிப்பு அருமை . பிரேமின் தந்தை , ஒன்று விட்ட அண்ணனாக  நடித்திருப்பவர்கள் , சலூன் கடை பையன் , டாக்டர் , மதன் சார் ( படத்தில் ) இப்படி துணை கதாபாத்திரங்கள் எல்லோருமே இயல்பாக நடித்து அசத்துகிறார்கள் ...


படத்தில் நால்வரின் அறிமுக பாடல் , ப்ரோமோ பாடல் என மொத்தம் இரண்டே பாடல்கள் தான் என்றாலும் இசையமைப்பாளர் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார் . சித்தார்த்தின் முதல் பாதி பின்னணி இசை ஏதோ திகில் படம் போல இருந்து வெறுப்பேற்றினாலும்  பின் பாதி ஓகே . படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் உணமையிலேயே நடந்த சம்பவன் தான் கதையின் கரு . அந்த ஒன்லைனை இவ்வளவு அழகாக , இயல்பாக சொன்ன விதம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது ...

சீரியசாக படத்தில் நடக்கும் விஷயங்கள் நம்மை விடாமல் சிரிக்க வைப்பதே படத்தின் ஹைலைட் . குறிப்பாக மதன் சார் ஒரு பெண்ணை பற்றி சொல்லிவிட்டு நடந்து போகும் போது கூட வந்தவர் அந்த பெண்ணின் பெர்சனாலிட்டியை பற்றி விசாரிப்பது வாய்ஸ் ஓவரில் கேட்பது , பக்ஸ் தனத்தை சமாளிக்க செல்போனில் தனியாக பேசுவது என்று நிறைய சீன்களை சொல்லிக்கொண்டே போகலாம் ...

படத்தின் நீளம் , சில இடங்களில் நெளிய வைக்கும் ரிப்பீட்டட் வசனங்கள்  , மிதமிஞ்சிய யதார்த்த சூழல் , ஒரு வருடத்தில் நடந்ததை மறப்பவன் எப்படி பத்து வருடங்களுக்கு முன் இறந்த சிவாஜியையும் , ஐந்து வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி படத்தையும் மறக்க முடியும்  , ஏன் வேறெந்த நரம்பியல் நிபுணரையும் நண்பர்கள் அணுகவில்லை என்பது போன்ற கேள்விகள் உட்பட சில குறைகள் படத்தில் நிறைய பக்கத்த காணோமோ என்கிற நினைப்பை ஏற்ப்படுத்தினாலும் ஏதோ நமக்கு தெரிந்த நாலு நண்பர்களை பார்த்து விட்டு வந்த உணர்வை அழுத்தமாக  பதிவு செய்த விதத்தில் படம் கொஞ்சமல்ல நிறைவாகவே  மனதில் பதிகிறது ...

ஸ்கோர் கார்ட் : 45


27 November 2012

லைஃப் ஆஃப் பை - LIFE OF PI ...


ஸ்கார் விருது வாங்கிய இயக்குனர் ஆங் லீ யின் அற்புதமான படைப்பு லைஃப் ஆஃப் பை . பாண்டிச்சேரியில் தொடங்கும் படம் பசிபிக் பெருங்கடலில் சுனாமி போல பார்ப்பவர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறது ...

பிஸ்சிங் படேல் ( எ ) பை ( இர்பான் கான் )கப்பல் விபத்தில் தன்  குடும்பத்தை இழந்ததையும் , லைப் ; போட்டில் தப்பித்துப் போகும் போது ஒரு வங்காளப் புலியிடம் சிக்கிக்கொண்டு  பல மாதங்கள் தனியாக நடுக்கடலில் போராடியதையும் தன் நண்பனிடம் விளக்குகிறான் . நாவலில் இருந்து தழுவப்பட்ட இந்த கதையை தத்ரூபமாக எடுத்து புலி மற்றும் பை யுடன் சேர்த்து நம்மையும் கடலில் பிரயாணப்பட வைத்ததே படத்தின் வெற்றி...

இர்பான் கான் பை கதாபாத்திரத்தில் இயல்பாக பொருந்துகிறார் . ஸ்லம் டாக் மில்லினியரை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . பை யின் தாயாக தபுவும் , தந்தையாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு . இளம் வயது பை யாக நடித்திருக்கும் சூரஜ் ஷர்மா பயம் , கோபம் , பரிவு , காதல் என எல்லா உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் . முதலில் புலிக்கு பயந்தாலும் போக போக புலியோடு சேர்த்து நம்மையும் தன் நடிப்பால் அரவணைக்கிறார் ...

   
படத்தின் மற்றொரு முக்கியமான கேரக்டர் ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும் வங்காள புலி . அழிந்து வரும் அரிதான இனங்களில் ஒன்றாகி விட்ட வங்காள புலி பை யை பிரியும் போது நமக்கும் ஏதோ நெருடுகிறது ... படத்தின் ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் , கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரத்திற்கு ஒரு படி மேலே நிற்கின்றன . பாண்டிச்சேரியை இவ்வளவு அழகாக வேறு எவரும் காட்டியிருக்க  முடியாது . டால்பின் , மங்கூஸ் என படத்தில் கிராபிக்ஸ் கலக்கல்கள் ஏராளம் . அட்வென்ட்சருடன் சேர்த்து கடவுளை பற்றிய கேள்விகளையும் ஆங்காங்கே தெளித்திருப்ப்து இயக்குனரின் புத்திசாலித்தனம் ...

பாண்டிச்சேரி பின்னணி , சில நிமிடங்களே வந்தாலும் கவனிக்க வைக்கும் பை - ஆனந்தி ( ஷ்ரவந்தி ) காதல் காட்சிகள் , புலியின் குணத்தை மகனுக்கு தந்தை புரிய வைக்கும் காட்சி , கழுதை புலி , குரங்கு , வரிக்குதிரை இவற்றுக்கிடையே நடக்கும் கூத்து , புலியையும் , அதே சமயம் அதனிடமிருந்து தன்னையும் காத்துக்கொள்ளும் பையின் போராட்டம் என படத்தின் நிறைய விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன ...

       
நீண்ட நாள் பட்டினியால் புலி , பை இருவரின் உடல்களையும் இஅலைக்க வைத்ததில் காட்டப்பட்ட லாஜிக் நேர்த்தி கடல் விபத்து சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் காட்டப்பட்டிருக்கலாம் . அந்த காட்சிகளில் ஏதோ அவசரம்
தெரிகிறது . கிராபிக்ஸ் , அட்வென்ட்சர் , பிரமாண்டம் என எல்லாமே ஆங்கிலப் படங்களுக்குரியவையாக இருந்தாலும் இந்திய பின்னணியும் , இரண்டு வெவேறு உயிரினங்களுகிடையேயான நேசம் , பிரிவு , வேறுபாடுகள் இவற்றை அழமாக பதிவு செய்த விதத்திலும் லைஃப் ஆஃப் ஒரு லைஃப் டைம் மூவியாக நம் மனதில் நெருக்கமாக பதிகிறது . நல்ல திரையரங்கில் , 3 டியில் குடும்பத்தோடு கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...


21 November 2012

அஜ்மல் கசாப் கதம் கதம் ...


26/11/2008 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது . பல இந்தியர்களின் உயிரை குடித்த அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவனான  அஜ்மல் கசாப் அதே நவம்பர் மாதமான இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான் ...

நம் நாட்டிற்க்கு எதிராக தீவிரவாதம் செய்த அயல் நாட்டவனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு  வருடங்கள் பிடித்திருக்கின்றன . அவன் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட பல கோடிகள் இனி அரசாங்கத்திற்கு மிச்சம் . கசாப்பின் தூக்கு தண்டனைக்கு எதிரான  கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து தண்டனையை சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது அரசு . அரசாங்கம் செய்த துணிச்சலான , மிக உருப்படியான காரியங்களுள் இது ஒன்று என அடித்து சொல்லலாம் ...

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துடையவர்கள் கூட  இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் மரண தண்டனையை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் . இந்த மரண தண்டனையால் இறந்தவர்கள் திரும்ப உயிருடன் வந்து விடுவார்களா என்றோ தீவிரவாதத்தை முற்றிலும்  ஒழித்து விட முடியுமா என்றோ கேள்வி கேட்கும் அறிவாளிகள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும் . போன உயிர் திரும்ப வராது தான் , ஆனால் இனிமேலும் உயிர்கள் போகாமல் தடுக்கலாம் . தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இது முடிவல்ல ஆரம்பமே ...

2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் தான் அங்கு அதன் பிறகு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் . நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோ  அல்லது  அதில் சம்பந்தப்பட்டவர்களை ஜாதி , இன , மதங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பதோ மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு சமம் ...

அஜ்மல் கசாப் ஒருவனை தூக்கில் போட்டதோடு நின்று விடாமல் அப்சல் குரு உட்பட இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றி   , நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்து மக்களை காப்பதிலும் அரசாங்கம் தன் கடமையை செவ்வென செய்யும் என அனைவரும் நம்புவோம் ...


போடா போடி - பொழுதுபோக்கு ...


நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்து விட்டு தீபாவளிக்கு வந்திருந்தாலும் விடிவி க்கு பிறகு விரல்வித்தைகள் காட்டாத சிம்புவை ரசிக்க வைத்திருக்கும் படம் போடா போடி . சிம்பு - வரலக்ஷ்மி ஜோடி படத்தின் பல குறைகளை மறக்கடிக்க  வைத்திருப்பது உண்மை . பெரிதாக எதையும் யோசிக்காமல் வெவ்வேறு மனநிலைகள் கொண்ட இருவரின் வாழ்க்கையை மட்டும் பொழுதுபோக்காக மெச்சூரிட்டியுடன் பதிவு செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் ...

லண்டனில் வசித்தாலும் கலாச்சார ரீதியாக அந்த வாழ்க்கையோடு ஒத்துப்போகாத அர்ஜுன் ( சிம்பு ), அதே கலாச்சாரத்தில் ஊறிப்போன நிஷா
( வரலக்ஷ்மி ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் , பின்பு ஒத்துவராமல் பிரிகிறார்கள் , கடைசியில் புரிந்து கொண்டு சேர்கிறார்கள் . இந்த ஒன் லைனை கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் சுவைபட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சிம்புவிற்கு இது அல்டிமேட் கேரக்டர் . படம் முழுவதும் வரலக்ஷ்மியையும் வைத்துக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் . ஆட்டம் , பாட்டத்தோடு சேர்த்து குழந்தை மேலிருக்கும் அன்பை சொல்லி அழும் இடத்தில் தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார் . தன் பழைய படங்களை  மேற்கோள் காட்டி சிம்பு பேசுவதை தவிர்த்திருந்தால் அவருடைய கேரக்டர் இன்னும் யதார்த்தமாக மனதில் பதிந்திருக்கும் ...


வரலட்சுமிக்கு இது முதல் படம் போல தெரியவில்லை , அந்த அளவிற்கு தன் மொத்த திறமையையும் காட்டி ( நடிப்ப மட்டும் தாங்க சொன்னேன் ! ) நடித்திருக்கிறார் . தயாரிப்பாளரின் பணப்பற்றாக்குறை வரு அணிந்திருக்கும் உடைகளில் நன்றாகவே தெரிகிறது.  அம்மணி முக்கால்வாசி படத்தில் வெறும் குட்டி  டவுசருடன் தான் வருகிறார் . படம் பல வருடங்கள் தயாரிப்பில் இருந்ததும் வருவின் உடல் எடையில் கூடுதலாகவே தெரிகிறது...

சிம்பு - கணேஷ் காம்பினேஷன் இந்த படத்திலும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . கணேஷ் பேசும் போதெல்லாம் கைதட்டுகிறார்கள் ... ஷோபனாவிற்கு கண்ணை உருட்டுவதை தவிர பெரிதாய் வேலையில்லை . இவர் கேரக்டரில் பெரிய அழுத்தமுமில்லை ... தரன் இசையில் " லவ் பண்லாம " , " அப்பன்மவனே " பாடல்கள் அருமை . ஆனால் அடிக்கொரு தடவை பாட்டை போடுவதை தவிர்த்திருக்கலாம் .


லண்டனில் வளர்ந்த பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு தமிழ்ப்பொண்ணு இப்படித்தான் இருக்கணும்  என்றெல்லாம் ஓவர் வசனம் பேசும் இடத்தில் சிம்பு கேரக்டர், மனதில் ஒட்டாத வருவின் சல்சா நடனம் மற்றும் அந்த போட்டியில் ஜெயிப்பதற்காக இருவரும் எடுக்கும் முயற்சி , ரசிக்க வைத்தாலும் அளவுக்கு மீறிய  அடல்ஸ் ஒன்லி மேட்டர்ஸ்  , அனைத்து தரப்பினரையும் கவராமல் போகும் கதைக்களம் போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் திருமணம் பற்றிய அட்வைஸ் எல்லாம் செய்யாமல் இருவரை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு ஒரு லவ் ஸ்டோரியை லைவாக போரடிக்காமல் சொன்ன விதத்திற்காகவே படத்தை பார்க்கலாம் .

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக பார்த்தால் போகிற போக்கில் தெளிக்கப்படும் கா(ம)மெடிகளை நிறையவே ரசிக்கலாம் . படத்தை கால தாமதம் இல்லாமல் ரிலீஸ் செய்து , ஒஸ்திக்கு கொடுத்த ஓவர் பில்ட் அப்பில் பாதியையாவது கொடுத்து ப்ரமோ செய்திருந்தால் படம் நிச்சயம் சிம்புவின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் :  41 


14 November 2012

துப்பாக்கி - ஏ. ஆர். 47...


மிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விஜய்க்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன் , வேலாயுதம் , நண்பன் வெற்றிகளை தொடர்ந்து  துப்பாக்கியிலும் ;சரவெடி வெடித்திருக்கிறார். வழக்கமாக விஜய் படங்களில் வரும் பஞ்ச் வசனங்கள் , குத்துப்பாட்டு , ஏய் , ஊய் என்று கத்தும் வில்லன்கள் ,  டாடா சுமோவில் வரும் அடியாட்கள் இவைகளெல்லாம் இல்லாமலேயே துப்பாக்கியை நன்றாக சுட வைத்திருக்கிறார் ஏ . ஆர் .முருகதாஸ் ...

விடுமுறைக்கு தன் குடும்பத்தை  பார்க்க மும்பைக்கு வரும் ஆர்மி மேன் ஜகதீஷ் ( விஜய் ) அங்கு தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிருப்பதை அறிகிறார் . தன் விடுமுறை முடிவதற்குள் குண்டுவெடிப்புகளையும் , அதற்கு காரணமானவனையும் எப்படி அழிக்கிறார் என்பதே கதை . ஆக்சனுக்கு நடுவில் அவ்வப்போது விஜய் ரிலாக்ஸ் செய்வதற்காக நிஷாவை ( காஜல் அகர்வால் ) லவ்வுகிறார் கம் கவ்வுகிறார் ...

ஆக்சன படத்தில் விஜய் அடக்கி வாசித்திருப்பது தான் புதுசே ஒழிய குறுந்தாடி தவிர கெட்டப்பில் விஜய்க்கு நோ சேன்ச். படம் முழுவதும் விஜய் துறுதுறுப்பாக இருப்பது பெரிய ப்ளஷ் . படத்தின் ஆரம்பத்திலும் , முடிவிலும் மட்டுமே  ராணுவ உடையில் வந்து விஜய் நம்மை பெருமூச்சு விடவைத்திருப்பது மிகப்பெரிய  ப்ளஷ் . மனிதர் ஆட்டம் , பாட்டத்தோடு ஹிந்தி , ஆங்கிலம் என்று மற்ற மொழிகளிலும் பேசி புகுந்து விளையாடியிருக்கிறார் .


விஜயுடன் சேர்த்து ரசிகர்களையும் ரிலாக்ஸ் ! செய்வதாய் நினைத்து கடுப்பேற்றுகிறார் மணிபர்ஸ் உதட்டழகி காஜல் அகர்வால் . கலகலவென்று அறிமுகம் ஆகும் காஜல் கேரக்டர் அதை தக்கவைத்துக் கொள்ளாமல் போனது  அவர் குற்றமல்ல . படத்திற்கு ஸ்பீட்  பிரேக்கர் போல இவர் வந்து போவது பெரிய குறை ...நண்பனில் கலக்கிய சத்யனுக்கு இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார் . பில்லா 2 வில் அஜித்திடம் அடி வாங்கிய வில்லன் வித்யுத் இதில் விஜயிடம் அடி வாங்குகிறார் அவ்வளவே . ஜெயராம் கொஞ்சம் அறுத்தாலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ...

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை . எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் , இயக்குனரின் விருப்பப்படி விட்டுவிட்டார் போல . ஹாரிஸ் " அண்டார்டிகா " , " கூகிள் " போன்ற தன் டெம்ப்ளேட் பாடல்களால் தாளம் போட வைக்கிறார் . மற்ற பாடல்கள் படத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல சலிப்பை தருகின்றன .  பின்னணி இசைக்காக கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார் என்று சொல்லலாம் ...

சாதாரணமான கதைக்கருவை சுவாரசியமாக்கும் திரைக்கதை , ரமணா , ஏழாம் அறிவு போல நீள , நீளமாக இல்லாமல் தேசப்பற்றை சுருக்கென்று ஏற்றும் பளிச் வசனங்கள் ,  எதிர்பாரா  நேரத்தில் வைக்கப்படும் ட்விஸ்ட் , அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் போன்றவை துப்பாக்கியை தூள்பாக்கி என்று சொல்ல வைக்கின்றன .


செல்போன் டவரை வைத்தே விஜய் எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனும்போது அதை விட்டுவிட்டு வில்லன் விஜயை தேடி அலைவது  திரைக்கதைக்கு உதவியிருந்தாலும் லாஜிக்கை பொறுத்தவரை பெரிய சொதப்பல் . படத்தின் நீளம் , விஜய் - காஜல் காதல் காட்சிகள் , " நம்ம பயலுக அமெரிக்காவே போனாலும் அண்ட்ராயர் தான் போடுவாங்க்ய " என்பது போல விஜய் - வித்யுத் இருவருக்குமிடையே நடக்கும் ஒண்டிக்கு ஒண்டி க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி (  அதிலும் சண்டை  என்ற பெயரில் விஜய் டான்ஸ் ஸ்டெப்ஸ் போடுவதெல்லாம் ஓவர் ) போன்ற குறைகள் துப்பாக்கியை தப்பாக்குகின்றன .

" ஒன் மேன் ஆர்மி " யாக விஜய் சுற்றி வந்தாலும் அவரை அன்டர்ப்ளே செய்யவிட்டு அனைவரையும் ரசிக்க வைத்த விதத்திலும் ,  மாஸ் ஹீரோவாக  இருந்தாலும் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தால் தன் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி ஹீரோக்கள் ரீச் ஆக முடியும் என்பதை நிரூபித்த விதத்திலும் ஏ . ஆர் . முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி - ஏ .ஆர் . 47...

ஸ்கோர் கார்ட் : 43 

9 November 2012

ஓர் புன்னகை ...!





ஆணாய் பிறந்து
அழகாய் வளர்ந்து 
அன்பில் திளைத்து
அறிவை பெற்று 
சேட்டைகள் செய்து 
முதல் காதல் பெற்று 
பொருள் தேடி 
தினம் உழன்று
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி
விருப்பமான மனைவியுடன்
அதில் குடி புகுந்து
மனைவியின் முறைப்பையும்
பொருட்படுத்தாமல்
கிறுக்கல்களை வலைத்தளத்தில்
பதிவாய் பதித்து
அதற்கும் வரும்
பின்னூட்டங்களால்
பரவசம் அடைந்து
சுலப தவணைகளில்
வேண்டியதை பெற்று
சினிமாவை சிலாகித்து
சண்டைகள் போட்டு
சறுக்கி விழுந்து
மீண்டும் எழுந்து
பரிசுகள் குவித்து
பாராட்டில் நனைந்து
நித்தம் வாழ்க்கையில்
கிடைக்கும்
நிம்மதிகள் எல்லாம்
மகளே
கன்னக்குழி விழ 
நீ பூக்கும்
ஓர் புன்னகைக்கு
ஈடாகுமா ?!













20 October 2012

பீட்சா - சாப்பிடலாம் ...


திகில் படங்கள் எனக்கு பிடிக்கும் , அதிலும் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த " ப்ளாக் & வைட் " என்னை கவர்ந்த க்யூட் குறும்படம் என்பதால் பீட்சாவிற்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் சென்றேன் . படம் பார்ப்பவர்கள் நிச்சயம் பீட்சாவில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் ...

பீட்சா டெலிவரி செய்யும் மைக்கேல் ( விஜய் சேதுபதி ) தன் லவ்வர் அனு
( ரம்யா நம்பீசன் ) வுடன் " போத்திக்கிட்டு படுத்தா என்ன படுத்துக்கிட்டு போத்தினா என்ன " என்கிற நினைப்பில் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் பாணியில் வசித்து வருகிறார் . பேய் , பூதம் , அமானுஷ்யங்களில் நம்பிக்கையுள்ள அனு மைக்கேலிடம் ஒரு நாள் அவற்றை நேரில் சந்திக்கும் தருணம் உனக்கும் வரும் என்கிறார் . அனு சொன்னது போல அந்த ஒரு நாளும் வருகிறது , அதன் பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள் ...


விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு மைல்கல் . மனிதர் பங்களாவிற்குள் தனியாளாக இருந்து கொண்டு பயப்படும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் .  காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது . குள்ளநரி கூட்டத்திற்கு பிறகு காணாமல் போய் விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட ரம்யா நம்பீசன் சிறிய இடைவெளிக்கு பிறகு பீட்சாவில் நடித்திருக்கிறார் . அம்மணியின் உடம்பு அவரது கேரக்டர் போலவே கொஞ்சம் அப் நார்மலாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார் ...

இரண்டு லீட் கேரக்டர்களை தவிர படத்தில் வரும் பிட்சா சாப் ஓனர் சண்முகமாக வரும் நரேன் , இரண்டு பிட்சா கடை ஊழியர்கள் , பேய் பங்களாவில் வரும் கணவன் - மனைவி என்று சின்ன சின்ன ரோல்களில் வருபவர்கள் கூட நம்மை கவர்கிறார்கள் , அதிலும் பேய்  பங்களாவில் குளியல் உடையுடன் முடியை துவட்டிக்கொண்டே வரும் பூஜா " பீட்சாவே ஆறிடும் " என்று விஜய் சேதுபதியிடம் சொல்லும் போது நம்மை சூடேற்றுகிறார் ...


படத்தின் ஒளிப்பதிவு உலகத்தரம் . லொக்கேசன்களை மாற்றாமல் நம்மை படத்தோடு ஒன்ற செய்வதற்கு , நடிப்பும்  திரைக்கதையும் போதாது , ஒளிப்பதிவும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் கோபி அமர்நாத் . ரொமாண்டிக் சாங்கில் இசை , ஒளிப்பதிவு , படம் பிடித்த விதம் எல்லாமே அருமை . திகில் படம் என்பதற்காக வெறும் இரைச்சலை இசையாக கொடுக்காமல் தரமாக பின்னணி இசையை தந்திருக்கிறார்  சந்தோஷ் நாராயண் . சில காட்சிகளில் இவர் இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றாமல் இல்லை ...

த்ரில்லர் வகை படங்கள் எடுப்பதென்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதத்தை கையாள்வது போன்றது . கொஞ்சம் பிசகினாலும் பார்ப்பவர்கள் கேலி செய்து சிரித்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது . பொதுவாக  நிறைய பேர் ஜாலி படத்தை பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்வதை போல பேய்  படத்தை பார்த்து பயந்து நடுங்கினேன் என்று சொல்வதற்கு விருப்பப்படுவதில்லை . தமிழ்  சினிமாவில் திகில் படங்களுக்கான ரசிகர்கள் குறைவு என்று கூட சொல்லலாம் .இது போன்ற   தடங்கல்கள் இருந்தும் தன் முதல் படத்தையே த்ரில்லர் வகை படமாக எடுத்ததற்கும் , அதில் தேவையில்லாமல்  பாடல்  , காமெடி , கிளாமர் போன்றவற்றை புகுத்தி எந்தவித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் இரண்டு லீட் கேரக்டர்கள் மற்றும் ஒன்றிரண்டு லொக்கேசன்களை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டதற்கும்  இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ...


அனு  கர்ப்பமானவுடன் " நாம ரெண்டு பேரும் கேர்லெஸா இருந்திட்டோமோ " என்று மைக்கேல் சொல்வது , மைக்கேல் நண்பர்களிடம் அனு  கர்ப்பமான விஷயத்தை பற்றி பேசும் போது அவர்கள் " வேணுமின்னா காண்டம் கம்பனி மேல கேஸ் போட்டுரலாம் " என்று சொல்லி கிண்டல் செய்வது போன்ற இடங்களில் வசனங்கள் க்யூட் ...


விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் பின்னர் கொஞ்ச நேரம் தொய்வாக நகர்கிறது . ரம்யா - விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் நன்றாக இருந்தாலும் யாருமில்லாத வீட்டில் இருவரும் திருமணம் செய்துகொள்வது , அவர்கள் அனாதை  ஆசிரம பின்னணி , பேய் பற்றி அவர்கள் பேசிக்கொள்வது போன்றவை பெரிதும் ரசிக்கும் படியில்லை ...

மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வரும் அனுவை ஏன் யாருமே பாத்ததில்லை ?, அப்படியே பார்த்திரா விட்டாலும் போலீசில் ஒரு போட்டோ கூடவா கேட்க மாட்டார்கள், பேய் வீட்டிலிருந்து யார் பீட்சாவிற்கு ஆர்டர் கொடுத்தார்கள் என்பதை  ஏன் முதலாளி கண்டுகொள்ளவேயில்லை , கடைசியில் அனு என்ன ஆனாள் ? போன்ற கேள்விகள் நம்மை குடைந்தாலும் இயக்குனர் நம்மை படத்தோடு என்கேஜ் செய்துவிடுவதால் நாம் அந்த ஏன்களை கொஞ்சம் எட்டப்போடலாம்...

டேஸ்டாக இருக்கும் பீட்சாவை  இன்னும் கொஞ்சம்  பாஸ்டாகவும் டெலிவரி செய்திருக்கலாமோ என்று தோன்றினாலும் வரிசையாக தாண்டவம் , மாற்றான் என்று தேடிப்  போய் பார்த்து மாறி மாறி நொந்து போவதற்கு நிச்சயம் பீட்சா - சாப்பிடலாம் ...

ஸ்கோர் கார்ட் : 46


14 October 2012

ஆதிபகவன் - அசத்தும் இசை ...


ப்பாவை போலவே தன் ஒவ்வொரு படங்களுக்கிடையேயும் வித்தியாசம் காட்ட முயல்பவர் யுவன்ஷங்கர்ராஜா , அதனால் தான் அவருக்கு
" பருத்திவீரன் " ,  " பில்லா " இரண்டுமே சாத்தியமாகிறது . ஐந்து வருடங்களுக்கு பிறகு அமீர் - யுவன் கூட்டணியில் வந்திருக்கிறான் ஆதிபகவன்... வழக்கம் போல யுவனுடன் கை கோர்க்கும் முத்துக்குமாருக்கு பதில் ஆதிபகவனில்  சினேகன் சேர்ந்திருக்கிறார் . நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் அறிவுமதியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் . ஒரு முழு நீள ஹிந்திப்பாடல் மற்றும் தீம் சாங் உட்பட ஆறு பாடல்களுடன் அசத்தலாய் இருக்கிறது இசை ... பாடல்களின் வரிசை இதோ :

1.அகடம் பகடம்...
   மோஹித் சௌஹான்
   பாடல் : மனோஜ்

    முழு நீள  ஹிந்திப்பாடல் . கேட்டவுடனேயே தாளம் போட  வைக்கிறது. இசைக்கு மொழி தேவையில்லை என்று நிரூபித்திருக்கும் பாடல் ...

2.பகவான் ராப் சாங் ...
   சத்யன்

     ராப் ஸ்டைல் தீம் சாங் . பின்ணணி இசையுடன் வரும் பகவான் ஹம்மிங் முணுமுணுக்க வைக்கிறது ...

3.ஐசலாம் ஐசலாம் ...
   மானசி ஸ்காட் / ராகுல் நம்பியார்
   பாடல் : சினேகன்

     மானசியின் மயக்கும் குரலில் வரும் பார்ட்டி சாங் . யுவன் தனக்கு பிடித்த தளத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார் ...

4.காற்றிலே நடந்தேனே ...
   உதித் நாராயண் / ஸ்வேதா பண்டிட்
   பாடல் : அறிவுமதி

     தனது பாடல்களில் ஆங்கிலத்தை கலக்காத அறிவுமதியின் அழகான வரிகள் , ஆனால் அதை உதித்தை விட்டு கொலை செய்திருக்க வேண்டாம் . உதித் அடித்தொண்டையில் பாடிய மற்ற பாடல்களை போலவே இதுவும் ஹிட் ஆகும் ...

5.ஒரு துளி விஷமாய் ...
   ஷரிப் சபரி / ஸ்ரேயா கோஷல்
   பாடல் : சினேகன்

     படத்தின் மெலடி டூயட் சாங் . இசைக்காகவும் , ஸ்ரேயாவின் குரலிற்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ...

6.யாவும் பொய்தானா...
   மதுஸ்ரீ
   பாடல் : சினேகன்

     கஜல் ஸ்டைலில் வரும் காதல் தாப பாடல் . பில்லா 2 வில் வரும் " இதயம் " பாடலை நினைவுபடுத்தும் கம்போசிங் .  பாடலில் கவிஞர் சினேகன் தெரிகிறார் ...
     

     
 
 

13 October 2012

மாற்றான் - மயக்கியிருப்பான் ...


சமீபத்தில் தான் சாருலதா வந்திருந்தாலும் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருப்பதும் , ஏற்கனவே இவரை வைத்து ஹிட் கொடுத்த கே.வி.ஆனந்த் படத்தை இயக்கியிருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன ... இடைவேளை வரை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால்  " மாற்றான் - ஏமாற்றான் " என்று சொல்லியிருக்க வேண்டிய படம் அதன் பிறகு ஜவ்வாக இழுத்ததால் " மாற்றான் - மயக்கியிருப்பான்  " என்று  சொல்ல வைத்துவிட்டது ...

மரபணு விஞ்ஞானி ராமச்சந்திரனின் ( சச்சின் கண்டேல்கர் ) சோதனை முயற்சியால் விமலன் - அகிலன்  ( சூர்யா ) இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களாக பிறக்கிறார்கள் , வளர்கிறார்கள் ... வெற்றிகரமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் அப்பாவின் எனர்ஜி ஆன் பால் பவுடரில் ஏதோ தவறிருப்பதாக விமலனுக்கு தெரிய வர , அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அவர் உயிர் துறக்கிறார் ... விமலன் விட்டதை அகிலன் தொடர்ந்து வெற்றி கண்டாரா என்பதை நீட்டி முழக்கி சில சீன்களில் ஆவ் என்று கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் ... 


இது போன்ற கதைகளை சூர்யாவை மனதில் வைத்தே செய்ய முடியும் என்பதே சூர்யாவின்  சக்சஸ் ... வேறு வேறு சீன்களில் டபுள் ஆக்டிங் செய்து விடலாம் , ஆனால் இடைவேளை வரை ஒன்றாக இருந்து கொண்டு இருவருக்குமிடையே வித்தியாசம் காண்பிப்பது என்பது மிகவும் கடினம் , அதை சிறப்பாக செய்திருக்கிறார் சூர்யா ... ஷாப்டான விமலனை அகிலன் கலாய்க்கும் இடங்கள் கல கல ... தியேட்டரில் காஜலுக்கு சூர்யா கிஸ் அடிக்கும் சீன்  உட்பட சில இடங்களில் சி.ஜி பல்லை இளிக்கிறது ... ரெட்டையர்களாக இருந்த போது ரசிக்க  வைத்த சூர்யா ஓன் மேன் ஆர்மியாக மாறிய பிறகு நம்மை கவராமல் போனது திரைக்கதையின் ஓட்டை ... 

" மோதி விளையாடு " , " பொம்மலாட்டம் " படங்களின் தோல்வியால் காணாமல் போயிருக்க வேண்டிய காஜல் அகர்வால் " மஹதீரா  " வெற்றியால் மீண்டு வந்திருக்கிறார்... வெறும் பாடல்களுக்காக  மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு ... உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும்  ஏற்றுவது கூடுதல் சிறப்பு ... 


கோடீஸ்வர விஞ்ஞானி தோற்றத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சச்சின் ... அதை விட கச்சிதமாக பின்னணி குரல் அவருக்கு பொருந்தியிருக்கிறது ... இது போன்ற ஹிந்தி நடிகர்களை தமிழில் வாழ வைத்துக்கொண்டிருப்பதே இந்த குரல்கள் தானே ... இவர் மேல் உண்டான சஸ்பென்சை இடைவேளை வரை தக்க வைத்திருந்தாலும் , அது உடைந்த பிறகு ஓவர் ரியாக்ட் செய்ய விட்டு கெடுத்து விட்டார்கள் ... இவருக்கும் , சூர்யாவிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சீன்கள் எல்லாம் 80 களின் உச்சம் ...  


படத்தில் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் , எடிட்டர் அந்தோணி , சி.ஜி சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகன் , ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் ஆகியோரது உழைப்பு அபாரமானது , அதிலும் தீம் பார்க் ராட்டினங்களுக்கு இடையே நடக்கும் சண்டைக்காட்சியை பாராட்ட வார்த்தைகளில்லை ... இவர்கள் இல்லாமல் இது போன்ற படம் சாத்தியமாகியிருக்காது , ஹான்ட்ஸ் ஆப் ... 

" கால் முளைத்த " , " தீயே தீயே " பாடல்களால் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசைக்கு ஹாரிஸ் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை ... முதல் பாதியில் வசனங்களிலும் , இயக்குனருடன் இணைந்து அமைத்த திரைக்கதையிலும் எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் - பாலகிருஷ்ணன் ) நன்றாக தெரிகிறார்கள் ... இரண்டாம் பாதி தான் சொல்லிக்கொள்ளும்படியில்லை ... 

மார்கெட் ஆகக் கூடிய கதை , சூர்யாவின் நடிப்பு , சஸ்பென்சுடன் நகரும் முதல் பாதி , டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்ஸ் இவற்றால் மாற்றான் மனதில் பதிகிறான் ... அதிலும் சூர்யாக்களுக்குள் நடக்கும் சண்டை , ராட்டின சண்டைக்காட்சியின்  முடிவில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு சூர்யாவை காப்பாற்ற மற்றொரு சூர்யா போராடும் காட்சி , இரண்டு சூர்யாக்களின்  குணாதிசயங்களையும் ஒரு பாடலிலேயே காட்டிய விதம் இவைகளெல்லாம் சிலிர்க்க வைக்கின்றன ... 


ஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் , என்ன தான் விஞ்ஞானியின் முயற்சி என்றாலும் ஒரே இதயத்தை வைத்துக்கொண்டு இருவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியுமா என்று நமக்கு தோன்றுகிற கேள்வி , எனர்ஜி ஆன் பால் பவுடரை ரஷ்யாவில் தொடர்ந்து ஏழு வருடங்கள் உபயோகித்தால் ஏற்படும் அவலங்களை பட்டியலிட்டு விட்டு இந்தியாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக அதை உபயோகப்படுத்துபவர்களுக்கு என்ன ஆனது என்பதை கூட திரைக்கதையில் காட்டாத அலட்சியம் , வில்லன் இங்கிருக்க துப்பறிகிறேன் பேர்வழி என்று சூர்யாவை வெளிநாட்டில் அலையவிட்ட திரைக்கதை , 

தன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் பென் டிரைவிர்க்காக எத்தனையோ கொலைகள் செய்யும்  ஒருவன் அதை ஏதோ லாண்டரி பில் வைப்பது போல சர்வ சாதாரணமாக ஆபீசில் வைப்பது , அதை எடுத்துக்கொண்டு உக்ரைன்  செல்லும் சூர்யா அந்த நாட்டு ராணுவ அதிகாரி தலையிலேயே துப்பாக்கியை வைத்துக் கொண்டு சென்டிமென்ட் டயலாக் பேசுவது உட்பட படத்தில் வரும் எக்கச்சக்க லாஜிக் சொதப்பல் சீன்கள் , நீண்டு கொண்டே போகும் க்ளைமேக்ஸ் இவைகளெல்லாம் மாற்றானை பார்த்து நம்மை ஏமாற வைக்கின்றன ... இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் ... 

ஸ்கோர் கார்ட் - 42 


7 October 2012

டி 20 - இறுதிப்போட்டி ...


செப் 18 இல் ஆரம்பித்த டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடர்  இன்று நடைபெறும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியோடு முடிவடைகிறது ... இலங்கை இறுதி வரை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா வை மிக அபாரமாக ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது டி 20 யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் போட்டி நடப்பது சாதகமாக இருந்தாலும் , க்ரிஸ் கெயில் , பிராவோ , பொல்லார்ட் போன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் ... இன்றைய ஆட்டம் மலிங்கா , மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் , மேற்கிந்திய தீவுகளின் மட்டையாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்.

2009 இல் டி 20 கோப்பையை தவறவிட்ட இலங்கை அணியும் , டி 20 இறுதி போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றிராத மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்த முறை உலக கோப்பைக்காக மிக கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை ... ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது துரதிருஷ்டமே ... ஒப்பனர்களின் ஆட்டம் , தோனியின் சில முடிவுகள் , சேவாக் - தோனி பிரச்சனை , எதிரணிகளை மிரட்டாத வேகப்பந்து வீச்சு போன்றவையும் இந்தியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாய் அமைந்ததையும் நாம் மறுக்க முடியாது ... டி 20 யை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரே தீர்வு இள ரத்தங்களே ...

ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்தியா 2007 க்கு பிறகு நடந்த மூன்று டி 20 உலக கோப்பைகளிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் ... தோனியை டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது ... தோனி  மட்டுமல்லாமல் ப்ளேச்சர் கோச்சாக நீடிப்பதும் தேவை தானா ? என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது ...

நமது அணி வெற்றி பெறாத சோகத்தை ஓரங்கட்டி விட்டு இன்று இரண்டு தீவுகளுக்கிடையே நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்தோமானால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம் ... 75 களில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த அணி பல வருடங்களாக  சறுக்கலில் இருந்து விட்டு  இப்போது தான் முன்னேறி வந்திருக்கிறது ... கிரீஸ் கெயில் தன்னம்பிக்கையோடு பேசுவதை பார்க்கும் போது அந்த அணி வெற்றி பெறும் என்பது போல தோன்றினாலும் நடப்பது டி 20 என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது ... நீங்கள் எந்த அணி வெற்றி பெறும் என நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும் ...


4 October 2012

நல்லதோர் வீணை குறும்படம் - 50000 ஹிட்ஸ் ...


" நல்லதோர் வீணை " குறும்படத்தை யூ டியூபில் அப்லோட் செய்து ஐந்து மாதங்களுக்குள் ஐம்பதாயிரம் ஹிட்ஸ்களை கடந்திருப்பதை பார்க்கும் போது  சமூக அக்கறையுள்ள நல்ல குறும்படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பது புலனாகிறது ... இதே போன்ற தரமான படங்களையே கொடுக்க வேண்டுமென்கிற அக்கறையையும் , பொறுப்புணர்வையும் இந்த ஆதரவு அதிகரித்திருக்கிறது ...

இந்த நேரத்தில் எனக்கு இது வரை ஆதரவளித்து வரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , யூ டியூபில் குறும்படத்தை கண்டுகளித்ததோடு தங்கள் கருத்துக்களின் மூலம் உற்சாகம் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் , சமூக வலைத்தளங்கள்  மூலம் என்னை உற்சாகப்படுத்திய அன்பர்களுக்கும் , எனது குறும்படம் பற்றிய விமர்சனம் மற்றும் தகவல்களை வெளியிட்ட மூன்றாம்கோணம் ,  தமிழ் மீடியா , தினமணி.காம் போன்ற வலைப்பத்திரிக்கைகளுக்கும் , குறிப்பாக குறும்படத்தை ஒளிபரப்பு செய்த ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு , இந்த குறும்படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ...

" நல்லதோர் வீணை " குறும்படத்தை கீழே பார்க்கவும் ...

30 September 2012

டி 20 - யுத்தம் ஆரம்பம் ...



ன்னும் சிறிது  நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் யுத்தம் ஆரம்பிக்க போகிறது ... இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம் , அந்த அளவிற்கு இரு நாடுகளில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாகவே இரு நாடுகளுக்கிடையேயான போட்டி எப்பொழுதும் இருக்கும் ...

இது வரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் ( 2 டி 20 , 5 50 ஓவர் )  பாகிஸ்தானுடன் ஆடியுள்ள இந்தியா ஒன்றில் கூட தோற்றதில்லை என்று வரலாறு சொன்னாலும் தற்போது பாகிஸ்தான் அணியினரின் தொடர் வெற்றியும் , சேவாக் - தோனி இடையேயான பனிப்போரும்  இந்தியா வெற்றி பெறுவது அவ்வளவு  எளிதல்ல  என்பதை தெளிவாக காட்டுகின்றன ... 

இன்று இந்திய அணி ஹர்பஜன் , சாவ்லாவை விடுத்து சேவாக் , பாலாஜி யுடன் களமிறங்குவதாக தோனி அறிவித்துள்ளார் ... பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமுமில்லை ... டாஸ்  ஜெயித்திருக்கும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்யப் போகிறது ... ஜெயிக்கப் போவது யார் ? மூன்றரை மணி நேரம் எல்லோரும் காத்திருப்போம் ... 

தாண்டவம் - தடுமாற்றம் ...


தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு விக்ரம் - இயக்குனர் விஜய் இருவரும் அதே டீமுடன் மீண்டும் தாண்டவத்தில் கை கோர்த்திருக்கிறார்கள் ... படம் வருவதற்கு முன்பே கதை என்னுது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி எழுப்பிய குற்றச்சாட்டும் , அதை தொடர்ந்து அவருக்கு நியாயம் வழங்க முடியவில்லை என்று அமீர் உட்பட எட்டு பேர் பதவி விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , படத்தை பார்த்த பிறகு இதுக்காகவா இப்படி அடிச்சுக்கிட்டாங்க என்கிற நினைப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது ...

2011 இல் லண்டனில் ஒரு குண்டு வெடிப்பு , அதை தொடர்ந்து வரிசையாக சில கொலைகள் , கொலைகளை துப்பறியும் வீரகத்தி பிள்ளை ( நாசர் ) பார்வையிழந்த கெனி ( விக்ரம் ) தான் இதற்கு காரணமென்று கண்டுபிடிக்கிறார் ... பிறகு பார்வையிழந்தவர் கெனி இல்லை , அவர் எக்ஸ் ரா ஆபீசர் சிவா என்பதையும் , எதற்கு கொலைகள் செய்தார் என்பதையும் எந்த வித ஆக்ரோஷமும் இல்லாமல் நீ .. ள .. தாண்டவமாய் சொல்லியிருக்கிறார்கள் ... கொலாட்ரல் , டேர் டெவில் போன்ற படங்களை நினைவு படுத்தும் கதை தான் என்றாலும் விஜய்க்கு இது ஒன்றும் புதிதில்லை என்பதால் விட்டு விடுவோம் ...


கண் பார்வையிழந்த கெனி , ரா ஆபிசர் சிவா என்று இரண்டு தோற்றத்தில் வரும் விக்ரம் உடல் மொழியாலும்  , உடற்கட்டாலும் நம்மை கவர்கிறார் , ஆனால் முகம் மட்டும் வயதை காட்டிக் கொடுக்கிறது ... இரண்டு , மூன்று அடிகளில் எதிரிகளை இவர் வீழ்த்தும் சண்டைக்காட்சிகள் அருமை ... அனுஷ்கா எனக்கு பிடித்த நடிகை , ஆனாலும் இந்த படத்தில் ஹோண்டா ஆக்டிவாவில் வரும் ஆன்டி  போல தழுக் , முழுக் என்று இருக்கிறார் ... இவர் நடிப்பதற்கு ஒன்றும் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை... டூயட்  காட்சிகளில் இளமை ததும்பவில்லை , மற்றவை ( சரி விடுங்க ) ...


எமி பார்வையிழந்த கெனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ... சமூக சேவை என்ற பெயரில் சர்ச்சில் இவருடன் சேர்ந்து போட்டோக்ராபர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன , மற்றபடி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை ... கொலை நடக்கும் இடங்களில் தானாய் வந்து மாட்டிக்கொள்ளும் டாக்ஸி டிரைவர் வேடத்தில் சந்தானம் ... நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் படத்தின் முடிவு முன்னமே தெரிந்து விட்டதோ என்னமோ மனிதர் டல்லாகவே இருக்கிறார் ...

துப்பறியும் இலங்கை தமிழர் வேடத்தில் வரும் நாசர் அந்த ஸ்லாங்கோடு ஒத்துப்போக முடிந்த வரை முயற்சித்திருக்கிறார் ... தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வை விக்ரமின் நண்பனாக இருந்து கொண்டே பணத்திற்காக வில்லனாக மாறுவதை போல காட்டியிருப்பது சலிப்பை தருவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை ... இவருக்கும் , விக்ரமிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி விறுவிறுப்பு ... விக்ரமின் அம்மாவாக சரண்யா , மாமாவாக எம்.எஸ்.,பாஸ்கர்  , சில சீன்களே வந்தாலும் " தப்பாச்சே " என்று சொல்லி சிரிக்க வைக்கும் தம்பி ராமையா , பாலாஜி , லக்ஷ்மிராய் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் ...

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ... விஜய் - ஜி.வி  கூட்டணி வழக்கம் போல கிளிக் ஆகியிருக்கிறது ... 25 வது படத்திற்காக ஜி.வி மெனக்கட்டிருப்பது " ஒரு பாதி கதவு " , " உயிரின் உயிரே " போன்ற மெலடிகளில் நன்றாகவே தெரிகிறது ...


பழி வாங்கும் கதை என்றாலும் வன்முறையையும் , வழக்கமான ஹீரோயிஷத்தையும் தவிர்த்திருப்பது , பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், மெதுவாக கொண்டு  சென்றாலும் முதல் பாதியில் முடிந்தவரை சஸ்பென்ஷை தக்க வைத்தது , விக்ரம் - அனுஷ்கா திருமண காட்சிகள் , கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒலி எழுப்பி அது ஏற்படுத்தும் எதிரலைகள் மூலம் ( எக்கோலொகேஷன் ) எதிரில் இருப்பவர்களை அடையாளம் காணும் முறையில் விக்ரம் பயிற்சி எடுப்பது போன்றவை தாண்டவத்தில் நம்மை லயிக்க வைக்கின்றன ...

முந்தைய படமான  தெய்வதிருமகள் - திருட்டு தேவதை  என்ற போதும்  திரைக்கதையாலும் , விக்ரம் - சாரா நடிப்பாலும் நம்மை ரசிக்க வைத்த விஜய் பெரிதும் கவராத கதை , மிக நீளமான திரைக்கதை , விக்ரம் நண்பனையே துரோகியாக இனம் கண்டு கொள்ளும் காட்சிகள் , அரைகுறையாய் கொடுக்கப்பட்ட த்ரில்லர் , ஆங்காங்கே மட்டும் மனதை தொடும் காதல் , ரசிக்க வைக்காத நகைச்சுவை  இவற்றால் தாண்டவத்தில் நிறையவே தடுமாறியிருப்பது நன்றாக தெரிகிறது...

ஸ்கோர் கார்ட் : 40  


23 September 2012

டி 20 - இந்தியா அபார வெற்றி ...


லங்கையில் நடந்து வரும் டி 20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது ... ஏற்கனவே இரண்டு அணிகளும் சூப்பர் 8 க்கு தகுதி பெற்று விட்ட போதிலும் அதற்கு முன்னோடியாக அமைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா நடப்பு டி 20 சேம்பியனை அபாரமாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ...

இந்திய அணியில் சேவாக் , ஜாகிர் , அஸ்வின் ஆகியோருக்கு ஒய்வு தரப்பட அதற்கு பதில் ஹர்பஜன் , சாவ்லா , திந்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர் ... டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் பிராட் இந்தியாவை பேட் செய்ய பணித்தார் ... துவக்க ஆட்டக்காரர்களாக கம்பீர் மற்று பதான் இறங்கினர் ... பதான் எட்டு ரன்களில் அவுட் ஆகி விட கம்பீர் - கோலி ஜோடி நிதானமாக ஆடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது ... கடைசியில் ரோஹித் சர்மா 50 ரன்களுக்கு மேல் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இந்தியா 170 ரன்களை எட்டுவதற்கு காரணமாக  அமைந்தார் ...

அடுத்து 171 ரன் இலக்கை நோக்கி ஆட வந்த இங்கிலாந்திற்கு முதல் ஓவரிலேயே விக்கட் எடுத்து பதான் அதிர்ச்சி கொடுத்தார் , அதை தொடர்ந்து ஹர்பஜன் - சாவ்லா ஜோடியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் 80 ரன்களுக்கு சுருண்டனர் ... இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச டி 20 ஸ்கோர் இதுவே ஆகும்... நான்கு ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கட்களை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கிற்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுக்கப்பட்டது ... அடுத்து நடக்கவிறுக்கும் சூப்பர் 8 போட்டிகளில் இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் இறங்கும் என்பதில் சந்தேகமேயில்லை ...

ஸ்கோர் : இந்தியா 170 / 4 ( ரோஹித் 52 * )
                     இங்கிலாந்து 80 ஆல் அவுட் ( ஹர்பஜன் 4 / 12 )


Related Posts Plugin for WordPress, Blogger...