27 July 2013

பட்டத்து யானை - PATTATTHUYANAI - பழைய யானை ...


முதல் மூன்று படங்களிலேயே தொடர் வெற்றியை கொடுத்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் விஷால் . இப்பொழுது தொடர் தோல்விகளால் தவித்துக் கொண்டிருப்பவரை பூபதி பாண்டியனின் பட்டத்து யானை தூக்கி விட்டதா ? பார்க்கலாம் ...

காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் கௌரவத்திடம் ( சந்தானம் ) வேலைக்கு சேரும் சரவணன் ( விஷால் ) அவரது பிசினசை காலி செய்து விட்டு திருச்சிக்கு கூட்டி செல்கிறார் . விஷால் அங்கு ஒரு பெண்ணை
( ஐஸ்வர்யா அர்ஜூன் ) லவ்வ சந்தானத்தை சந்தியில் விட்டு விட்டு ஐஸ்வர்யாவிற்க்காக வில்லன் கோஷ்டியை பின்னி பெடலெடுக்கிறார் . கடைசியில் வழக்கமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து சுபமாய் படத்தை முடிக்கிறார்கள் ...

விஷால் வழக்கம் போல தலைக்கு பதில் முகத்தில் எண்ணெய் வடிய வருகிறார். பார்த்தவுடன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் , அந்த பெண்ணிற்க்காக தனி ஆளாக ஊரையே அடிக்கிறார் , அதிலும் முதலில் தனியாக வரும் அடியாள் இவரிடம் இடது கன்னத்தில் அடி வாங்கி வலது பக்கம் பறந்து விழுகிறான் . வழக்கம் போல இவருக்கு ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் . இந்த வழக்கமான வழக்கங்களில் பொறுமையை சோதிக்கும் பஞ்ச்கள் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல் ...


ஹீரோயின் அறிமுகத்தின் போது புன்னகைத்துக் கொண்டே வரவேண்டுமென்று விதியோ என்னமோ ! . ஆனால் இதில் அதற்காக ஐஸ்வர்யா பஸ் ஏறுவதற்காக ஓடி வரும் போதும் இளித்துக் கொண்டே வருவது லூசோ என்று எண்ணத்தோன்றுகிறது . பள்ளிக்கூட மாணவியாக காட்டினாலும் முகத்தில் முதுமை தெரிகிறது ...

கிரி படத்தில் வடிவேலுவுக்கு என்ன வேடமோ அதே தான் சந்தானத்துக்கும் . இதில் பேக்கரிக்கு பதில் ஹோட்டல் . மொட்டை ராஜேந்திரனுடன் இவர் காம்பினேஷன் வழக்கம் போல கல கல . இவர் உடல் மொழியில் கவுண்டமணியின் இமிடேஷன் இதில் ஓவராகவே இருக்கிறது . பட்டத்துயானை முதல் பாதியில் இவரை வைத்து நன்றாகவே சவாரி செய்திருக்கிறது . ஜான் விஜய் மற்றும் அவரது அடியாட்கள் , மயில்சாமி போன்றோர் சிரிக்க வைக்கிறார்கள் . நண்டு ஜெகனை  இன்னும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது . அதே போல தடையர தாக்க வில் நல்ல அறிமுகம் கிடைத்த வில்லனை இதில் வீணடித்திருக்கிறார்கள் ...


தமன் இசையில் 20 - 20 பாடல் மட்டும் ஹம்மிங் செய்ய வைக்க மற்றதெல்லாம் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . பின்னணி இசைக்கு இசைஞானி , எம்.எஸ்.வி இருவரும் கை கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் டைட்டிலில் பெயர் சபேஷ் முரளி என்று வருகிறது . படத்தின் கதை இதற்கு முன் பூபதிபாண்டியன்   எடுத்த மலைக்கோட்டை யை நினைவுபடுத்தினாலும் கிரி வலம் வந்திருக்கிறார்கள் ...

திருச்சியில் தனியாக தவிக்கும் சந்தானத்தின் காமெடி , அது தவிர வில்லன் கோஷ்டியை வைத்து காமெடி செய்த விதம் , போவது தெரியாமல் போகும் முதல் பாதி , ஆக்சன் படங்களில் குறிப்பாக விஷால் படங்களில் வரும் வளவளா பஞ்ச் வசனங்களை தவிர்த்திருப்பது போன்றவை பட்டத்துயானையை பவனி வர வைக்கின்றன ...

கதை , லாஜிக் இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்க்கும் போது இந்த படத்திலும் ரசிக்கும் படியாக கமர்சியல் எலிமென்ட்ஸ் சரியாக பொருந்தியிருந்தாலும் தேவையேயில்லாமல் இரண்டு வில்லன் கோஷ்டி, இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் என்ற பெயரில் திணிக்கப்பட்ட எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாத ப்ளாஷ்பேக் , பெண்ணை பார்த்தவுடன் ரேப் செய்யும் வில்லன் , பழி வாங்கும் ஹீரோ , மலைக்கோட்டை , கிரி போன்ற படங்களை கலந்து கட்டிய கதை இவையெல்லாம் சந்(தா)ன காப்பு செய்தும் பட்டத்துயானையை பழைய யானையாகவே காட்டுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பூனைக்கு நாற்பது அதிகம்...!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.

Yaathoramani.blogspot.com said...

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
ஆயினும் மார்க் விஷயத்தில்
நானும் தனபாலன் கட்சிதான்

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
பூனைக்கு நாற்பது அதிகம்...!

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
நல்ல விமர்சனம்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ramani S said...
அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
ஆயினும் மார்க் விஷயத்தில்
நானும் தனபாலன் கட்சிதான்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...