28 September 2013

ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...

 
ந்த ஒரு படத்திற்கும் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை  ராஜா ராணி படத்திற்கு கிடைத்த ஒப்பனிங் மூலம் நன்றாகவே உணர முடிந்தது . ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லீக்கு இது முதல் படம் என்பதை நல்ல காஸ்டிங்கும் , ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பும் மறக்கடிக்கின்றன ...

காதலியை இழந்த ஜான் ( ஆர்யா ) , காதலனை இழந்த ரெஜினா ( நயன்தாரா) இருவரும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல்  திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவருக்கும் அடுத்தவரது பழைய காதல் வாழ்க்கை  பற்றி தெரிய வர அதை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா என்பது படத்தின் கேப்சனை பார்த்தாலே புரியும் ...
 
ஆர்யா வுக்கு  அதிகம் மெனக்கெடாத கேரக்டர் . கிளீன் ஷேவை விட கொஞ்சம் தாடியில் கூடுதல் அழகாக இருக்கிறார் . சந்தானத்துடனான இவரது காம்பினேஷன்  இதில் மீண்டும்  வொர்க் அவுட்  ஆகியிருக்கிறது . நீண்டநாட்களுக்கு பிறகு நயன்தாரா தனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . க்ளோஸ் அப் காட்சிகளில் முகம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் நடிப்பை  ரசிக்க முடிகிறது . எங்கேயும் எப்போதும் படத்தின் எக்ஸாகரேட்டட் வெர்சன் போல இருந்தாலும் நயனின் பழைய காதலனாக வந்து கிடைத்த அரை மணி நேரத்தில் மனதை அள்ளுகிறார் ஜெய் . விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தியேட்டரில் ஜெய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் . ஆனால் இவரது கதாபாத்திரமும் , அதற்கான முடிவும் தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ் ...
 
 
நயனின் தங்கை போல இருக்கும் நஸ்ரியா  நைட்டியுடன் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் . இந்த படத்திற்கு பிறகு ஆர்யா மேல் சக நடிகர்கள் மேலும் பொறாமைப்படுவார்கள் என்று நம்பலாம் . சந்தானம் இந்த படத்திற்கும் வழக்கம் போல கமர்சியல் நன்பெண்டா . நயனின் அப்பாவாக சத்யராஜ் நல்ல பொருத்தம் . ஜி.வி  ஹாரிஸ் போலவே அங்கங்கே சுட்டிருந்தாலும் பாடல்களை  ஹிட் செய்து விட்டார்  . ஜார்ஜின் ஒளிப்பதிவும் , ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் ...

சிம்பிளான ஒன்லைன் , காதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் உள்ள நேர்த்தி , போரடிக்காத திரைக்கதை , பொருத்தமான காஸ்டிங்  இவற்றின் மூலம் அட்லி குட்லி சொல்ல வைக்கிறார் . ரசிக்க வைத்தாலும் மனதில் ஒட்டாத ப்ளாஷ்பேக் காதல்கள் ,  சொல்லி வைத்தார்ப் போல பழைய காதலை கேட்டவுடன் இருவருக்கும் ஏற்படும் நாடகத்தனமான மனமாற்றம் , எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து விடுவதால் வரும் சலிப்பு இவையெல்லாம் ராஜா ராணி யை ஆள விடாமல் செய்கின்றன . குறிப்பாக ராஜா ராணி காதலில் உயிர்ப்பு  குறைவாக இருந்தாலும் பொழுது போக்கு அலங்காரத்திற்காக ஒரு முறை ரசிக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 42
 

27 September 2013

மோடி - MODI - மாற்றம் வருமா ? ...


டந்த மாதம் என்னுடைய பதிவில் மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ... என்கிற கேள்விக்கு எதிர்பார்த்தது போலவே அவரை பிரதம வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததன் மூலம் தக்க விடையளித்து பத்து நாட்கள் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அவரது தலைமையில் நேற்று திருச்சியில் முதல் மாநாடு பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது . முதலில் முரண்டு பிடித்த அத்வானி , சுஷ்மா இருவரும் இப்பொழுது ஒத்துப்போனது கட்சிக்குள் இருந்த சிறிய சலசலப்பையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாம் . மற்ற கட்சிகள் போல ஒரு குடும்பத்தை மட்டும் நம்பியிருந்தால் தலைமைப் பொறுப்புக்கு ஆளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்திருக்காது .என்ன செய்வது பி.ஜே.பி யில் அப்படியொரு சூழல் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துவதால் உண்டானதே இந்த சிக்கல் . இப்படி பல சிக்கல்களை கடந்து மோடி பிரதமர் மகுடம் சூட்டுவாரா ? அலசுவோம் ...

கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்டதன் மூலம் முதல் படியை கடந்திருக்கும் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பல கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டாவது படியை கடக்க வேண்டும் . இப்போதைக்கு அகாலி தள் மற்றும் சிவசேனா மட்டுமே 
நேரடியாக மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன . ஹரியானாவில் சவுதாலா மற்றும் ஓடிஷாவில் பட்நாயக் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து கொண்டு தானிருக்கின்றன . தென் இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் பி.ஜே.பி க்கு வலுவான கூட்டணி தானாகவே அமைந்து விடும் என்று ஓரளவு எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் 180 - 200 இடங்களை தனித்து கைப்பற்றும் கட்சி மத்தியில் பிராந்திய கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவார் சூசகமாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று தெளிவாகவே காட்டுகிறது ...

தென் இந்தியாவியில் தனித்து ஆட்சியமைத்த கர்நாடகாவை பி.ஜே.பி இழந்ததும் , மற்ற தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்காததும் அதற்கு பெருத்த பின்னடைவு . எடியூரப்பா கட்சிக்குள்  மீண்டும் இணையாமல் தனித்திருந்த படியே நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது ஓட்டு வங்கியை அதிகப்படுத்துமா அல்லது மோடியின் இமேஜை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பி.ஜே.பி தெலுங்கானாவை ஆதரித்ததால் தள்ளியிருந்த சந்திர பாபு நாயுடு இப்பொழுது நெருங்கி வருவது போல் தெரிகிறது . ஜெகன் மோகன் காங்கிரசை வீழ்த்த பி.ஜே.பி பக்கம் சாயலாம் அல்லது சி.பி.ஐ வழக்கை சமாளிக்க கைக்குள் அடங்கலாம் . தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் 40 லும் வெற்றியை எதிர்பார்க்கலாம் . ஆனால் முதல்வருக்கும் பிரதமர் கனவு இருப்பதால் அது சாத்தியமாகாதது போலவே படுகிறது . சோ வின் முயற்சி பலித்தால் ஏதாவது நல்லது நடக்கலாம் . அப்படி இல்லாத பட்சத்தில் வை.கோ , விஜயகாந்த் , ராமதாஸ் 
போன்றோர் கூட்டணிக்குள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது . கேரளாவை பொறுத்த வரை முன்னை விட கட்சி கொஞ்சம் வளர்ந்திருப்பதும்  , மோடியின் தலைமையும் மட்டுமே அதற்கு ஆறுதல் ... 

டிசம்பரில் நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் டில்லி  உட்பட மூன்றில் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வந்திருப்பது கட்சியினருக்கு தெம்பை கொடுத்திருக்கும் . தமிழ் நாட்டில் ஜூ .வி எடுத்த சர்வேயின் படி மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 52 சதவீதமும் , மன்மோகன் சிங்கிற்கு 6 சதவீதமும் கிடைத்திருப்பது மக்களின் மன ஓட்டத்தை பிரதிபளிக்கிறது . படித்த இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் மோடிக்கு ஆதரவும் , அவர் பிரதமாராக வர வேண்டும் என்ற வேட்கையும் இருப்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது . அதே போல மைனாரிட்டிக்கு அவர் எதிரானவர் என்பது போல பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் ...

ஏனெனில் எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் குறிப்பாக டில்லி யில் நடந்த சீக்கியர் இனப் படுகொலை மற்றும் அஸ்ஸாம் , குஜராத் மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்களை பற்றியும் , கலவரங்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக மறந்திருக்கலாம் , ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் திரும்ப திரும்ப கோத்ரா கலவரத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதே மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி . கடந்த ஒன்பது வருடங்களாக அவதியிலிருக்கும் மக்கள் மோடி வந்தால் மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள் . ஆனால் அப்படி மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரும் மோடி வருவாரா ? மாட்டாரா என்று ஆராய்வதை விட்டு விட்டு சொந்த் விருப்பு வெறுப்புகளை பார்க்காமல்அவருக்காக ஒட்டு போடுவார்களேயானால் நிச்சயம் 
மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் ...



 
Related Posts Plugin for WordPress, Blogger...