23 December 2015

தங்கமகன் - THANGAMAGAN - தங்கா மகன் ...


ரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும்  போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது ...

இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் ...

இத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா காலிலும் , மனைவி காலிலும் விழும் இடத்தில் தேசிய விருதை சும்மா வாங்கிவிடவில்லை என நிரூபிக்கிறார் . ஆனால் அவர் படத்தை பார்ப்பதற்கு அது மட்டுமே போதுமா ? யோசிக்க வேண்டும் ...

ஆங்கிலோ இந்திய பெண்ணாக எமி ஜாக்சனும் , அவருக்கு ஆண்ட்ரியாவின் குரலும் நன்றாகவே பொருந்துகின்றன . ஆனால் பிகினி போட்டு அழகு பார்க்க வேண்டிய பெண்ணை சுடிதாரில் அலைய விட்டு " நானும் ரவுடி தான் " படத்தில் வரும் காமாட்சி போல ஆக்கி விட்டார்கள் . அரை பீருக்கு போதையாகி இவர் தனுஷை அடிப்பதெல்லாம் படத்துக்கு கிடைத்த யூ செர்டிபிகேட் போல ஓவர் .  இவர்கள் இருவருக்குமான லவ் சீன்ஸ் தான் நம்மை முதல் பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கின்றன . அதற்கு சதீஷும் ஒரு காரணம் ...


சமந்தா போல மனைவி கிடைத்தால் எமி என்ன ஏஞ்செலினா வையே கழட்டி விடலாம் . தனுஷ் - சமந்தா இருவருக்குமான காட்சிகள் குறைவாக இருந்தாலும் கச்சிதம் . பொயட்டு தனுஷ் வரிகளில் அனிருத் இசையில் பாடல்கள் நல்ல மெலேடி . ஓட்டக்கருவாடு போல பாடல் இல்லாதது வருத்தமே . பி.ஜி யில்  பெரிசாக ஒன்றுமில்லை . குமரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் நாம் நாடகம் பார்க்கிறோம் என்கிற உணர்வை தவிர்க்கிறது ...

டீன் ஏஜ் காதல் , அப்பா சென்டிமென்ட் இவற்றை ஓவராக வழிய விடாமல் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் வேல்ராஜ் . அதே சாமர்த்தியம் படம் நெடுக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . குறிப்பாக இடைவேளைக்கு பிறகு
 " தமிழ்நாட்டுல தமிழ் தோக்காது " என்றெல்லாம் தனுஷ் பஞ்ச் பேசும் போது
" ஆமா ஆந்திரால தெலுங்கு தோக்காது , கேரளாவுல மலையாளம் தோக்காது"
என்று விசு போல நம்மை வசனம் பேச வைத்துவிடுகிறார்கள் . அர்னால்டை வில்லனா போடலாமா , அமீர்கான வில்லனா போடலாமானு மாமானரு யோசிச்சா மருமகனோ இன்னும் அமுல் பேபி மூஞ்சியா பாத்து வில்லனா போடறது என்ன சாரே ?! ...

கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடிக்கடி நடப்பது மறந்து விடுவது போல நம்மையும் விஜய் சேதுபதி மாதிரி " ஆமா படத்துக்கு வந்தோம் , அப்புறம் என்ன ஆச்சு " என்பது போல் சில இடங்களில் புலம்ப வைத்து விட்டார்கள் . கவர்மென்ட் குவாட்டர்ஸ் இல் குடியிருக்கும் தனுஷ் குடும்பத்தை அப்பா இறந்தவுடன் ஒருவர் வந்து வீட்ட காலி செஞ்சுருங்க என்று சொல்வதெல்லாம் என்ன லாஜிக்கோ ?! அவர்களுக்கே வெளிச்சம் . தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் கடந்த வருடம் வந்த வி.ஐ.பி வசூலை அள்ளியதோடு நன்றாகவும்  பேசப்பட்டது . ஆனால் இந்த வருடம் வந்திருக்கும் தங்கமகன் நம்மிடையே எந்த உரசலையும் ஏற்படுத்தாத விதத்தில் மனங்களில் தங்காமகன் ...


ரேட்டிங் :  2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40




28 November 2015

144 - தடங்கல் ...


டிகர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் ஓப்பனிங் இருப்பது போல தரமான படங்களை தயாரித்து வருவதால் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் அது இருக்கிறது . ஆனால் அவர் தயாரிப்பில் சிவா , அசோக் செல்வன் நடிப்பில் மணிகண்டன் ( எத்தனை மணிகண்டன் ?! ) இயக்கத்தில் வந்திருக்கும் 144 முந்தைய படங்களைப் போல நம்மைக் கவராமல் ஏமாற்றம் அளிக்கிறது ...

சண்டை சச்சரவால் 144  தடையில் இருக்கும் முண்டாசுப்பட்டி போன்ற கிராமத்தில் வசிக்கும் தேசு ( சிவா ) , மதன் ( அசோக்செல்வன் )
& கோ ராயப்பனிடம் ( மதுசூதனன் ) இருந்து தங்க பிஸ்கட்களை சூதாய் கவ்வ நினைப்பதே 144 . ஆனால் அந்த இரண்டு படங்கள் போல இல்லாமல் திரைக்கதையில் தத்தளிக்கிறது இந்த படம் ...

சிவா வுக்கு ஏற்ற கலகலப்பான திருடன் வேடம் .  தன் ஒன்லைனர்களால் ஆடியன்ஸைக் காப்பாற்றுகிறார் . இவரது எபிசோட்  சுஜாதாவின் வசந்தகாலக் குற்றங்கள் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது . இதனை டைட்டிலில் ஒப்புக்கொண்ட இயக்குனரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் . இதை சொல்லாமல் விட்டிருந்தால் நாவலைப் படிக்காத எத்தனையோ பேருக்கு விஷயம் தெரியாமலேயே போயிருக்கும் . அசோக் செல்வன் வழிய பேசும் மதுரை பாஷை ஒட்டவேயில்லை . வரலேன்னா விற்றுங்களே ? ஏன் மதுரைக்காரைங்களை வெறுப்பேத்துறீங்க ?! . அவருக்கு ஜோடியாக வருபவர் படம் லோ பட்ஜெட் என்பதை நிரூபிக்கிறார் . அகலமான கண்களுடன் ( கண்கள் மட்டுமா ?! ) வரும் ஓவியா சிவாகுக்கு ஏற்ற ஜோடி முண்டாசுப்படியில் பேசியே நம்மை கவர்ந்த ராமதாஸ் இதில் ஊமையாக வந்து கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார் ...


டாக்டரை  உதவிக்கு வைத்துக்கொண்டு வில்லத்தனம் செய்யும் உதயபானு மகேஸ்வரன் ரசிக்க வைத்தாலும் இவர் எதிரிகளுக்கு செய்யும் டார்ஜர்களில் அதிகம் பாதிக்கப்படுவது நாமே . ராயப்பனாக வரும் மது மற்றும் இன்ஸ்பெக்டராக வருபவரின் காம்பினேஷன் க்யூட் . சான் ரோல்டனின் இசையில் பூவே , விநாயகா பாடலகள் அருமை . ஆனால் பேமென்ட் பாக்கியோ ? என்பது போல இருக்கிறது அவர் பின்னணி இசை ...

தனது பாதுகாப்பை பற்றி மது பீத்தியடிக்கும் அதே  நேரத்தில் ராமதாஸ் உதவியுடன் சிவா தங்க பிஸ்கட்களை லபக்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . அதேபோல தங்கபிஸ்கட்களை  பாதுகாக்கும் வேலையாட்களும் கவர்கிறார்கள் . பொங்கல் சாப்பிடும் போது முந்திரி மாட்டுவதைப் போல உற்றுப்பார்த்தால் சில காமெடிகள் மாட்டுகின்றன . மற்றபடி ப்ளாக் காமெடி நிறைய இடங்களில் ப்ளாங்காகவே இருக்கிறது . காமெடி என்கிற பெயரில் பெரும்பாலும் மொக்கை போடுவதை தவிர்த்திருக்கலாம் . மொத்தத்தில் புது முயற்சிகளுக்கு கைகொடுத்து அதில் தொடர் வெற்றியும் பெற்று வரும் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு தடங்கலான திரைக்கதையால் இந்த 144 கைகொடுக்கவில்லை ...

ஸ்கோர் கார்ட் : 39 

ரேட்டிங் : 2.25 * / 5 * 





24 November 2015

காட்டுப்பசி - சிறுகதை ...


ன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே இருப்பது தெரியவில்லை . இந்த அத்துவானக் காட்டுக்குள் எப்போது வந்து மாட்டிக்கொண்டோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது . சிறுவனாய் இருக்கும் போது அம்மா , அப்பா இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டே நடந்தது நினைவுக்கு வருகிறது . அம்மாவுக்கு எப்போதும் சிரித்த முகம் . அப்பா அவ்வளவு கோவப்படும் போதும் அவளிடம் சின்னதாய் ஒரு புன்முறுவல் இருந்துகொண்டே இருப்பது ஆச்சர்யமாக இருக்கும் . நான் என்ன தப்பு செய்தாலும் அம்மா என்னை அப்பாவிடம் அடிவாங்க விட்டதேயில்லை . அந்த கோபமும் அம்மா மேல் அடியாக வந்திறங்கும் . இந்த இடத்திற்கு சுற்றுலா வருவதற்கு நான் தான் காரணமாக இருந்தேன் . எதிர்பாராத மழை வெள்ளத்தில் நான் அடித்துக்கொண்டு இங்கே வந்து சேர்ந்ததற்கும் சேர்த்து அம்மாவிற்கு நிறைய அடி விழுந்திருக்கும் .  இந்த காடும் , தனிமையும் பழகிவிட்டது . அப்பா என்னை மறந்திருப்பாரா ?  அவர்  ஒரு நாள் கூட என்னை பசியால்  வாட விட்டதில்லை . கோபப்பட்டாலும் எங்கும் கடன் கிடன் வாங்காமல் வீட்டிற்கு தேவையானதை செய்து கொண்டுதானிருந்தார் ...

ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருந்த நான் இங்கே எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன் . கிடைத்ததை தின்று , சின்ன விலங்குகளை கொன்று , பெரிய விலங்குகளிடம் இறையாகமால் தப்பித்து ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகவே கழிந்தது . பின் மெதுவாக இந்த காட்டு வாழ்க்கையும் பிடித்துவிட்டது  . பகலில் எங்கும் அமைதி , இரவில் பேரிரைச்சல் . அது இல்லையென்றால் இப்பொழுதெல்லாம் தூக்கம் வருவதேயில்லை . நிறைய இரவுகள் பசியோடு படுத்திருக்க வேண்டும் . எப்பொழுதாவது மனிதர்கள் தென்படும்போது தான்  உயிரே வரும் . அந்த சில நாட்கள் பசியில்லாமல் இருக்கலாம் . ஆனால் இந்த அத்துவானக் காட்டுக்குள் யாரும் அடிக்கடி வருவதில்லை . சில அரிய மூலிகைகளை எடுக்க , போட்டோ எடுக்க , இயற்கையை ரசிக்க , விலங்குகளை ஆராய்ச்சி செய்ய என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக அரசின் எச்சரிக்கையையும் மீறி சிலர் எப்போதாவது வருவார்கள் . அப்படி வரும் போது வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும் . மற்றபடி மரணப்பசியுடன் காலம் தள்ள வேண்டியதுதான் ...

ஏதோ சத்தம் கேட்கிறது . தூரத்தில் யாரோ வரும் சத்தம் . காலடி ஓசைகள்  பெரிதாக கேட்கின்றன . டார்ச் லைட் வைத்துக்கொண்டு ஒருவன் நடந்து வர பின்னால் ஒரு பெண் நடந்து வருகிறாள் . வருபவள் அழகாக இருந்தாள் , அதோடு கைகைளில் ஏதோ பை . நிச்சயம் ரெண்டு நாட்களுக்கு தேவையான உணவாக இருக்கும் . இருக்கட்டும் நல்லது . மரத்திலிருந்து நான் மெல்ல இறங்குகிறேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை . அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்கிறார்கள் . மனிதர்களை அடிக்கடி பார்க்காததால்  ஏதோ ஒரு பரபரப்பு , பயம் , அன்னியம் தொற்றிக்கொள்கிறது . இன்றும் அப்படி ஏதோ ஒரு உணர்வு  தள்ள ஒதுங்கி நின்றேன் . அதைப்போல சிலர் என்னைப்பார்தவுடன் அலறி விடுவதுண்டு . அதற்காகவே கூட நான் ஒதுங்கி நின்று கொள்வேன் . ..

அவர்கள் என்னமோ பேசிக்கொள்ள அவன் மட்டும் கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு ஓடைப்பக்கம் செல்கிறான் . அனேகமாக பறவைகளை படம் பிடிக்கப்  போகிறான் . நேரம் ஆகிறது அவன் வரவில்லை . அவள்  கவலையாகிறாள் . அவன் போன திசையில் நடக்கலாமா என யோசித்து அவள் பின்வாங்குவது தெரிகிறது . இதுதான் சரியான சந்தர்ப்பம் . அவளுக்கு பின் மெதுவாக செல்கிறேன் . மிக அருகில் போனதும் அவள் முடியிலிருந்து ஏதோ இதுவரை முகர்ந்திரத வாசனை . அவள் தோள்களில் என் கையை வைக்கிறேன் . என்னைப் பார்த்ததும் ஒரு அலறலுடன் லேசாக மேலே சாய்கிறாள் .  நினைத்தபடியே அவள் பை என் கைக்குள் மாட்டுகிறது . அத்தோடு சேர்த்து எனது உணவையும்  தூக்கிக்கொண்டு நான் வேகமாக  எனது இடத்திற்கு போகிறேன் . எடையைப் பார்த்தால்  நிச்சயம் இவள் நான்கு  நாட்களுக்கு மேல் தாங்குவாள் . அவளை கீழே கிடத்தியவுடன் எனது முன்பற்கள் என்னை விட வேகமாக அவள் கழுத்தை நோக்கி போவது போலிருந்தது ...

18 November 2015

அஜித் Vs விஜய் (5) - AJITH Vs VIJAY (5) - The Final Verdict ...


ஜித் Vs விஜய் இருவரில் யார் பெஸ்ட் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ! கேள்வியின் பதிலைக் காண ஆவலுடன் அனைவரும் காத்திருப்பீர்கள் . உங்களைப் போல காத்திருந்த எனக்கும் சேர்த்து இந்த பதிவில் மக்களின் தீர்ப்பு வருகிறது . இதுவரை 4 பதிவுகளையும் தொடர்ந்து படித்த , படித்ததோடு நிற்காமல் அதைப் பற்றிய கமெண்டும் அடித்த , அதோடு விடாமல்  அஜித் , விஜய் இருவரில் யாருக்கோ வாக்கையும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி . மீண்டும் சொல்கிறேன் . இது என்னமோ தமிழ் சினிமா நடிகர்களில் யார் பெஸ்ட் என்கிற வாக்கெடுப்பு அல்ல . அஜித் , விஜய் இருவருக்குமான வாக்கெடுப்பு மட்டுமே . இருவருமே இல்லை என்கிற ஆப்சனையும் சேர்த்திருக்கலாமே என்றும் சிலர் கேட்டிருந்தார்கள் . அதே போல் உங்களின் முடிவு என்ன என்றும் ஒரு நண்பர் கருத்திட்டிருந்தார் . மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனும் போது இந்த சாதாரண மனிதனுக்கும் அது பொருந்தாதா ? . இதோ யார் பெஸ்ட் அஜித் Vs விஜய் ...

யார் பெஸ்ட்





அஜித் தான் ஜெயிப்பார் என்று யூகித்திருந்தாலும் இந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது ஆச்சர்யம் . வேதாளம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அஜித் மேல் க்ரேஸ் அதிகமானதற்கான ஓர் காரணமாக இருந்தாலும் , அஜித் எந்த ஒரு வலைத்தளங்களிலும் இல்லாததும் , தன் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாததும் , குறிப்பாக தன் படத்தை மட்டும் பேச விட்டு கருத்து  சொல்கிறேன் பேர்வழி என்று வேறு எதையாவது சொல்லாததும் , பொதுவாக
சக நடிகர்களாலாயே  தல என்று அழைக்கப்பட்டும் அந்த கனத்தை தனது தலைக்குள் தள்ளாததும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக நான் கருதுகிறேன் . அதே போல அட்லி இயக்கத்தில் விஜய் படம் வந்து வெற்றியடைந்தால் இந்த நிலை மாறுமா ?. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு இதுதான் ரசிகர்களின்  ரிசல்ட் ...

அஜித் எந்த நிகழ்ச்சிக்கும் வராததால்  ஒரு மேடை போட்டு அங்கே தல ய பாராட்ட டி .ஆர் வந்திருந்தால் என்ன என்று ஒரு சின்ன கற்பனை ...

இவன் தல

பணத்துக்கு ஆட்ட மாட்டான் வால
அன்புக்கு முன்னால பூமால

எதிரிகளுக்கு இவன் காள 
நட்புக்கு கொடுப்பான் தோள 

உட்டுப்பாக்காத நூல
ஊத்திருவான் பால

இவன் பைக் ஓட்டுறது ஈ.சி.ஆர் சால
ஜெயிச்சாலும் இருப்பான் எப்பயும் போல

நம்பி பணம் போட்டவன் ஆக மாட்டான் திவால
இவன் படம் பாக்குறவனுக்கு போகும் கவல

இராவணனுக்கு பத்து தல
தமிழ்நாட்டுக்கு இவன் தான் ஒரே தல ! ...

( அட்டாக் புலி , அட்டகாச புலி என்கிற டி.ஆர் மாடுலேஷனிலேயே படிக்கவும் )




13 November 2015

அஜித் Vs விஜய் (4) - AJITH Vs VIJAY (4) - THE CONCLUSION ...


ந்த பதிவை படிப்பதற்கு முன்னால் இது  தொடர்பான முந்தைய மூன்று பதிவுகளையும் படித்து விட்டு வருவது நல்லது . அதே போல இந்த பதிவு அஜித் , விஜய் இருவரில் யார் சிறந்த நடிகர் என்பதற்கானது அல்ல . அந்த வகையில் பார்த்தால் இது விக்ரம் , சூர்யா ( இவர் நடிப்பு சமீபகாலமாக  ஒரே மாதிரியாக இருந்தாலும் ) , தனுஸ் ஆகியோருக்கான பதிவாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் மூவரை விட இன்றைய தேதியில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையும் , பிசினசையும் வைத்திருப்பது இவ்விருவர் மட்டுமே . இந்த தெளிவோடு பதிவை தொடரவும் ...

இதை எழுதும் அதே நேரத்தில் தீபாவளி அன்று ரிலீசான வேதாளத்தின் முதல் நாள் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 15.5 கோடி என்பது நிறைய பேருக்கு செய்திகள் வாயிலாக தெரிந்திருக்கும் . இதன் நம்பகத்தன்மையை ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் நிச்சயமாக பெரிய வித்தியாசம் இருக்காது . ஏனெனில் படம் தமிழகத்தில் மட்டும் 530 ஸ்க்ரீன்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் நாள் அதுவும் தீபாவளி என்பதால் சின்ன தியேட்டரிலேயே 4 ஷோக்களுக்கு குறைவாக இருக்காது . அதிலும் மாயாஜால்  போன்ற மல்டிப்ளெக்சுகளை கணக்கில் கொண்டால் குத்து மதிப்பாக 6 ஷோக்கள் வைத்துக்கொள்ளலாம் . இதை பெருக்கிப் பார்த்தல் மொத்தம் 3180 ஷோக்கள் வருகின்றன . தோராமயமாக ஒரு ஷோவை 500 பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . இதன் படி மொத்தம் 1590000 பேர் படத்தை முதல் நாள் பார்த்திருக்கிறார்கள் . டிக்கெட் விலை முதல் நாள் பெரிய ஹீரோ படத்துக்கு 120 க்கு குறைவாக நிறைய தியேட்டர்களில் இருக்காது . இருந்தாலும் ரூ .100 என்று  எடுத்துக்கொண்டால் மொத்தம் 15.9 கோடிகள் வருகிறது . இந்த படத்திற்கு அரசின் வரிச்சலுகை உண்டு என்பதால் மொத்தத்தையும் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் . ( என்ன ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு போய்க்கிட்டுருக்கு ! ) ...

இதை சொல்வதற்கு காரணம் எந்த ஒரு பெரிய ஸ்டார் படம் வந்தாலும் , குறிப்பாக அஜித் , விஜய் படம் வந்தால் அவர்களின் ரசிகர்கள் நெட்டில் அடித்துக்கொள்வது இந்த வசூலை வைத்துதான் . என்னை அறிந்தால் முதல் நாள் வசூலை புலி  முறியடித்தது என்று விஜய் ரசிகர்கள் சொன்னால் இப்போது வேதாளம் , விஜய் நடித்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை ( 12.5 கோடி ) முறியடித்து விட்டது என்று அஜித் ரசிகர்கள் சொல்கிறார்கள் . ஆனால் எந்த ஒரு படமும் முழுமையான் வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வசூல் மட்டும் போதாது . 20 - 20 மேட்சில் முதல் பத்து ஓவருக்கு 120 ரன்கள் எடுத்து ஆள் அவுட் போலத் தான் இதுவும் . இதற்கு தனிஒருவன் , பாபநாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . ஒப்பனிங்  குறைவாக இருந்தாலும் மவுத் பப்ளிசிட்டி மூலம் இரண்டு படங்களும் 50 நாட்களை கடந்து ஓடி நல்ல வசூலை குவித்தன . ( எல்லாம் குடும்பத்தோட போய் நம்ம எழுதுற 120 ரூவா மொய் தான் ) ...


சரி மேட்டருக்கு வருவோம் . படத்துக்கு மிக்சட் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அஜித்தின் வேதாளம் 100 கோடி வசூலை தாண்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஆனால் தல படம் லிங்கா , கத்தி படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டது  என்பதே நிதர்சனம் . அதிலும் உலகநாயகனின் படத்தோடு ரிலீசாகி இந்த சாதனையை படைத்திருப்பது சத்தியமாக எதிர்பார்த்திராத ஒன்று . என்ன தான் வசூலை குவித்திருந்தாலும்  அஜித்துக்கு இருக்கும் மாஸுக்கு வேதாளம் படமாக சரியான தீனி அல்ல என்பதே என் கருத்து ...


மங்காத்தா படம் முடிந்து வரும் போது அஜித்துக்கு இருக்கும் ஒபெனிங்கை பார்த்து விட்டு ஒரு சினிமா நண்பரிடம் பேசினேன் . அவரோ ரொம்ப கேசுவலாக இதெல்லாம் கொஞ்ச நாள்ல காணாமல் போயிடும் என்றார் . அதோடு ஷங்கர் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படங்கள்  வந்து விட்டால் அஜித்தை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் சொன்னார் . அவர் சொன்னதை ஈசியாக விட முடியாதற்கு காரணம் அவர் சினிமா வட்டாரத்தில் நல்ல தொடர்புள்ளவர் என்பதோடு கண்டிப்பாக விஜய் ரசிகர் இல்லை . ஆனால் அவர் சொன்னது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நான் ஆணித்தரமாக நம்பினேன் . அன்றிருந்த நம்பிக்கை பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அஜித் மேல் இருந்ததில்லை . எங்கள் பேச்சிலர் ரூமுக்கு வரும் நண்பன் பக்கா அஜித் ரசிகன் . அதிலும் சிட்டிசன் படத்தின்  " நான் தனி ஆள் இல்ல " என்ற வசனத்தை அவன் அஜித் போலவே பேசுவான் . அஜித் மேல் எந்த ஈடுபாடும் இல்லாத நாங்களோ அவனை ஓட்டுகிற ஓட்டில் ரூம் பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டான் . நாங்களும் " மாப்புள அத்திப்பட்டி மாதிரி அவனும் காணாம போயிட்டாண்டா " என்று சொல்லி சிரித்துக் கொள்வோம் ...

என் கல்லூரி காலங்களில் அஜித்தை விட விஜய்க்கு தான் கூடுதல் மாஸ் இருந்தது . அவரை போலவே ரிம்லெஸ் க்ளாஸ் , டிசர்ட் அதே ஸ்டைலுடன் நிறைய பேரை பார்க்க முடியும் . காதல் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த விஜய் மேல் பெண்களுக்கும் நிறைய கிரேஸ் இருந்தது , நானோ ஒன்ஸ்மோர் படம் முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் பார்க்கலாமா என்று கேட்ட நண்பனை செவுட்டில் அறையலமா என்று கேட்பது போல பார்த்தேன் .  ஆனால் என்னைத் தவிர அங்கிருந்த எல்லோரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தார்கள் . இதே நிலைமை தான் விஜய் நடிப்பில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த போதும் . இப்படி விஜய் , அஜித் இருவருமே தனிப்பட்ட முறையில் பெரிதாக கவர்ந்ததில்லை . அதே சமயம் வாலி படத்தை பார்த்த பிறகு இயக்குனராக வேண்டுமென்கிற வெறி அதிமாகி  எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்னை வந்தது இன்றும் நினைவிருக்கிறது . அது தனிக்கதை ...

இப்படி ஈக்குவலாக போய்க்கொண்டிருந்த ட்ராக் சொல்லப்போனால் அஜித்தை விட அதிக வெற்றிகளின் காரணமாக விஜயின் க்ராஃப் மேலே இருந்த நேரத்தில் பில்லா வின் வெற்றி ரஜினியின் ரசிகர்கள் பலரை அஜித் பக்கம் ஈர்த்தது . கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும் ,  அதற்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டியதும் பலரை புருவம் உயர்த்த செய்தது . இந்த சம்பவம் நடுநிலையாளர்கள் பலரை அஜித் பக்கம் கொண்டு போனது  . நிஜத்திலும் லார்ஜர் தென் லைஃப் ஹீரோ போல அஜித் பார்க்கப்பட்டார் . விஜய் போல பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரிதாக எதுவும் செய்யாத போதும் அஜித் மேல் உள்ள ஈர்ப்பு அடிமட்ட ரசிகர்களுக்கு குறையவில்லை ...


குடும்பத்தோடு பார்ப்பதற்கு விஜய் படங்கள் தான் மினிமம் கேரண்டி . அதில் பாட்டு , டான்ஸ் , காமெடி என்று சாமானியனை கவரும் அம்சங்கள் நிறையவே உண்டு . விஜய்யிடம் எப்போதும் ஒரு துறுதுறுப்பு இருந்து கொண்டே இருக்கும் . அஜித் தை விட மூன்று வயதே( 41 )  சின்னவராக இருந்தாலும்  பார்ப்பதற்கு இன்னும் சின்னப்பையன் போல இருப்பது விஜய்க்கு ப்ளஸ் . அதனால் தான் ஏகன் படத்தில் கல்லூரிக்கு போன அஜித்தை அவர் ரசிகர்களே கிண்டல் செய்த போதும் விஜயை காவலனில் யாரும் கிண்டல் செய்ததில்லை . பலரால் கிண்டல் செய்யப்பட்ட வேலாயுதம் , புலி போன்ற படங்கள் கூட 60 , 70 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கின்றன ...

கிட்டத்தட்ட இருவருமே சம பலத்தோடு இருப்பது போல பட்டாலும் விஜய்யின் 50 வது படமான சுறா சுருட்டி வாரிக்கொள்ள அஜித்தின் 50 வது படமான மங்காத்தா சக்கை போடு போட்டது . அஜித்துக்கு இந்த வெற்றி மற்றுமொரு திருப்புமுனை . விஜய் ரசிகர்கள் அஜித்தின் மிகப்பெரிய ஹிட்டான மங்காத்தா, ஆரம்பம் இரண்டுமே அர்ஜுன் மற்றும் ஆர்யா இருந்ததால் அஜித்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது என்றும் சொல்கிறார்கள் . இது ஒரு சப்பை காரணம் போல் பட்டாலும் விஜய் சோலோ ஹீரோ வாக நடித்த துப்பாக்கி , கத்தி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதையும் மறுக்க முடியாது . கத்தி , துப்பாக்கி இரண்டுமே விஜய் எனும் ஹீரோவையும் தாண்டி  படமாகவும் நல்ல படங்கள் . வேதாளத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்க முடியாது . ஆனாலும் அந்த படங்களை தாண்டி வேதாளம் வசூலைக் குவித்ததைத்  தான் அஜித் தின் பலம் என்கிறார்கள் . அதாவது விஜய் ஒரு படம் ஹிட் கொடுக்க கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாமுமே கை கொடுக்க வேண்டியிருக்கிறது , அதாவது அவர் மெனெக்கெட வேண்டியிருக்கிறது . ஆனால் தல ஸ்க்ரீனில் நின்னாலே போதும் படம் ஹிட் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது . இது ஆரோக்கியமான விஷயமாக இல்லாமல் போனாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான ஸ்க்ரீன் ப்ரெசென்சில் அஜித் முன்னே நிற்கிறார் . அதனால் தான் சக ஹீரோக்களே தல தல என்று அஜித்தை கொண்டாடுகிறார்கள் ...

இரண்டு ஹீரோக்களையும் இவ்வளவு  நேரம் அலசினாலும் இறுதி முடிவை மக்கள் கையிலே விட்டு விடுகிறேன் . மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு . இந்த பதிவுக்கு கீழ் யார் பெஸ்ட் என்கிற தலைப்பில் அஜித் , விஜய் இருவரின் பெயரும் இருக்கும் . நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த புள்ளியை அழுத்தவும் . வருகிற 18 ஆம் தேதியோடு வாக்கெடுப்பு முடிவடையும் . இன்னும் ஐந்து நாட்களே இருகின்றன . யார் பெஸ்ட் ?...
தேர்ந்தெடுப்பதற்கு முன் கீழே உள்ள முந்தைய பதிவுகளையும் படிக்கவும் ...


அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...




11 November 2015

வேதாளம் - VEDHALAM - வியாபாரம் ...


வீரம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா வுடன் அஜித் சேர்ந்திருக்கும் மற்றுமொரு மாஸ் படம் வேதாளம் . நார்மலாகவே நல்ல ஒப்பனிங் கிடைக்கும் அஜித்துக்கு இது தீபாவளி ரிலீஸ் என்பதால் உலகநாயகன் படத்தையே ஓரங்கட்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . ஸ்டோரியை நம்பாமல் அஜித்தின் தெறி மாஷை மட்டும் நம்பி வந்திருக்கும் படம் நம்மை திருப்திப்படுத்துமா ? பார்க்கலாம் ...

கொல்கொத்தாவிற்கு தங்கை தமிழ் ( லக்ஷ்மிமேனன் ) உடன் வந்து செட்டில் ஆகும் கணேஷ் ( அஜித்குமார் ) தங்கை மேல் பயங்கர பாசத்தோடு படு பாந்தமாக காரோடு வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார் . தங்கை செண்டிமெண்டுக்கு நடுநடு வே இண்டர்நேஷனல் தாதாவின்
( ராகுல்தேவ் ) தம்பிகளை கண்ணாமூச்சி ரே ரே என்று அன்பாக ஆட்டத்துக்கு அழைத்து போட்டுத்தள்ளுகிறார் . அமுல்பேபி போல இருப்பவர் ஏனிப்படி குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு அட்ராசிட்டி செய்கிறார் என்பதை இண்டர்வெலில் பெரிய ஜெர்க் கொடுத்து பிறகு  ஸ்லோவாக சொல்லி முடிப்பதே வேதாளம் ...

அஜித்துக்கு ரசிகர் மன்றத்தை கலைத்தும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது கடவுள் வரம் . மனுஷன் நிச்சயம் அவரை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை  . அமைதியாக  வரும் கனேசனாகவும் , ஆக்சன் அடாவடி  வேதாளமாகவும் பின்னி பெடலெடுக்கிறார் . அப்படியிப்படி தொங்கும் வேதாளத்தை தூக்கி நிறுத்துவது இவரே . அதேசமயம் சிரிக்கும் போது  ரசிக்க வைப்பவர் சில சீன்களில் சீரியசாக பேசும் போதும் நமக்கு சிரிப்பு வருவதை தவிர்த்திருக்கலாம் . இவரை சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குனர் கொஞ்சம் கதை , திரைக்கதைக்கும் மெனக்கட்டிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும் . வீரம் படத்தில் இருந்த க்ரிப் கூட இதில் ஏனோ மிஸ்ஸிங் ...


லக்ஷ்மிமேனன் ஹீரோயின் இல்லையே தவிர அதுக்கும் மேலான ரோல் . தங்கையாக அஜித்துடன் இவர் கெமிஸ்ட்ரி சிம்ப்ளி சூப்பர் . அஜித் அடிபட்டவுடன் நன்றாகவே துடிக்கிறார் . பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்கள் ரெண்டு டூயட்டாவது வருவார்கள் . அதில் ஒரு குத்தாட்டம் கண்டிப்பாக இருக்கும் . இந்த படத்தில் பாவம் ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பு  கூட இல்லை . சூரி வடிவேலுவை காப்பியடிப்படிதை நிறுத்தினால் தேவலை . சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கும் லூட்டிகளை விட ஐந்து நிமிடமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன் . பெரிய பில்டப்புடன் அறிமுகமாகும் வில்லன் ஃபாரினிலுருந்து வந்து வழக்கம் போல ஹீரோவிடம் அடிபட்டு சாகிறார் . ஃப்ளாஷ்பேக் பெரிதாக கவராவிட்டாலும் தம்பிராமையாவின் நடிப்பு கச்சிதம் ...

அனிருத் இசையில் ஆலுமா டோலுமா ஆட வைத்தால் ரவிசங்கர் குரலில் உயிர் நதி உருக வைக்கிறது . மற்றபடி பி,ஜி நிறைய இடங்களில் வீரம் படத்தை நினைவுபடுத்துகிறது . அஜித் , விஜய் என்றல்ல எந்த ஒரு மசாலா படத்துக்கும் லாஜிக் பார்ப்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் . அதையெல்லாம் பப்ஸ் சாப்பிட்டுவிட்டு கையை உதறுவது போல விட்டுவிட வேண்டும் . இந்த படத்தில் மாஸ் ஹீரோவை சரியாக பயன்படுத்திய சிவா சீன்களையும் இன்னும் மாஸாக அமைத்திருந்தால் படம் வேறொரு லெவெலில் இருந்திருக்கும் . குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக்கும் , அதை தொடர்ந்து வரும் ப்ளாஷ்பேக்கும்  பத்து  சவரன்  சங்கிலியை இரவில்  தொலைத்து விட்டு பகலில் சாவகாசமாக தேடுவது போல இருக்கிறது ...

வில்லன் கூடாரத்துக்குள் இருந்து தங்கையை அஜித் புத்திசாலித்தனமாக மீட்பது  , கடைசி வரை தன்னுடைய அதிரடி முகத்தை தங்கைக்கு காட்டாதது போன்றவை பாட்ஷா , ஏய் வகையறா  டெம்ப்ளேட் கதைக்குள்ளும் கவனிக்க வைக்கின்றன . ரஜினி , விஜய் என்று மாஸ் ஹீரோக்கள் தங்கச்சி பாசம் படம் பண்ணும் போது தலயும் பண்ணிட்டு போட்டுமே ! . கண்டைனரில் பெண்களை கடத்துவது , தம்பியை கொன்றவனை பிடிக்க வில்லன் ஏதோ ஒசாமா பின் லேடனை பிடிப்பது போல ஸீன் போடுவதெல்லாம் நம்மை தியேட்டரை விட்டு தெறிக்க வைக்கின்றன . முழுக்க முழுக்க அஜித் தை  நம்பி பழைய முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியிருந்தாலும் சேதாரம் குறைவாக இருப்பதால் வியாபாரத்தில் பிரச்சனை  இருக்காது ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.75 * / 5 * 

10 November 2015

தூங்காவனம் - THOONGAVANAM - தூள் வனம் ...


பொதுவாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பைர் ஆகி அல்லது சுட்டு இங்கே தனது கதை , திரைக்கதையில் அவ்வைசண்முகி , தெனாலி , பஞ்சதந்திரம் என்று படமெடுத்து ஹிட் ஆக்கும் உலகநாயகன் முதன்முறையாக ஒரு ஃப்ரெஞ்ச் படத்தை ( Sleepless night ) வாங்கி திரைக்கதை அமைத்து ! தன் உதவி இயக்குனர் ராஜேஸ் ம செல்வா வை வைத்து இயக்கியிருக்கிறார் . இதே போல நேர்மையாக அவர் நிறைய நல்ல படங்களை வாங்கி இங்கே தரமாக ரீ மேக்கினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது..

ஒரு நாள் இரவில் காப் & மாஃபியா கேங் இடையே நடக்கும் மோதலே தூங்காவனம் . மாஃபியா விடமிருந்து திவாகர் ( கமல்ஹாசன் ) போதைப்பொருளை கடத்த பதிலுக்கு விட்டல் ராவ் ( பிரகாஷ்ராஜ் ) கமலின் மகனை கடத்திவிடுகிறார் . கடத்திய போதைப்பொருளும் கை நழுவிப் போய் விட மகனை கமல் மீட்டாரா ? என்பதை தனது வேகமான திரைக்கதையால் படு ஸ்டைலிஷாக சொல்லியிருக்கிறார் கமல் ...


பாபநாசம் படத்திற்கு பிறகு அதே போல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வித் எமோஷனல் டச் படம் கமலுக்கு கிடைத்தது பார்ப்பவர்களுக்கு விருந்து . அவர் எங்கும் வானத்தில் எகிறிக் குதித்து யாரையும் அடிக்கவில்லை ( அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும் ) , மகனை மீட்பேன் என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசவில்லை ஆனால் படம் முழுவதும் ஒரு ஹீரோயிசத்தை நிலை நாட்டியிருப்பது கமல் எனும் லெஜென்டால் மட்டுமே முடியும் . கோபம் , வீரம், சோகம் என நிறைய உணர்சிகளை அவர் கண்களாலேயே காட்டியிருப்பது கிளாசிக் . ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்காமல் ஆடியன்ஸ் மேல் நம்பிக்கை வைத்து திரைக்கதை அமைத்திருப்பது கமலின் மெச்சூரிட்டி ...

கமலை சேஸ்  செய்யும் காப் ரோலில் த்ரிஷா படு ஃபிட் . சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் பிரகாஷ் ராஜ் , அவரது உதவியாளராக வந்து கிடைக்கும் கேப்பில் சிரிக்க வைக்கும் குரு சோமசுந்தரம் , காப் திரவியமாக கிஷோர் , கமலின் கொலீக் மணியாக யூகி சேது , சின்ன ரோலில் வந்தாலும் கவனிக்க வைக்கும் சாம்ஸ் மற்றும் சம்பத் , ஜெகன் , ஆஷா என சின்ன படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்திலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் நம்மை ஒன்ற வைக்கிறார்கள் . கமலின் மகனாக வரும் அப்துல்லா , பப்பில் ஏதோ பிராண்டி வாங்கி அடிப்பது போல மவுத் கிஸ் அடிக்கும் மது ஷாலினி என இருவருமே ப்ளஸ் ...

முதல் சீனிலேயே கதைக்குள் சென்று விடும் படம் இடைவேளை வரை விறுவிறுப்புடன் அதே நேரம் சஸ்பென்ஸ் வைக்க தவறாமல் செல்கிறது இடைவேளைக்குப் பின் கொஞ்சம் வேகம் குறைவது போல் பட்டாலும் நம் கண்களை திரையில் இருந்து எடுக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் கமல்.
சம்பவ இடத்திற்கு சென்று கமல் , யூகி சேது நடந்ததை விசாரிக்கும் ஸீன் , , நிமிஷ கதிக்குள் எல்லோரையும் அடித்துவிட்டு கமல் தப்பிக்கும் ஸீன் ,, கமல் - த்ரிஷா அண்ட் கமல் - கிஷோர் சண்டை போட்டுக்கொள்ளும் ஸீன் என படத்தில் நிறையவே மாஸ்டர் பீஸ்கள் . சானு ர்கீஷின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்கின்றன ...


படம் முழுவதுமே பெரும்பாலும் ஒரு நாள் இரவு ஹோட்டலில் நடந்தாலும் பார் , ரெஸ்டாரன்ட் , பப் என வரும் ரிப்பீட்டட் லொகேஷன்ஸ் கொஞ்சம் சலிப்பை தருவதை மறுப்பதற்கில்லை . கமல் எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார் என்பது யாவரும் அறிந்ததே . ஆனால் ஒரு சீனில் டாய்லெட்டில் கக்கா போய்க்கொண்டிருப்பவன் மேல் விழுந்து கமல் ஓடுவார் . அதற்கு அடுத்த ஷாட்டில் தண்ணீர் விடாததால் அப்படியே கிடக்கும் கக்கா வை கூட காட்டும் அளவிற்கு நேர்த்தியாக இருப்பார் ( தேவையா ?! ) என எதிர்பார்க்கவில்லை .

உத்தமவில்லன் ஒடாததால் கமலுக்கு தயாரிப்பாளராக இந்த படம் முக்கியமான படம் . அப்படியிருக்க மனுஷன் போன வெள்ளிக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யாமல் எதுக்கு தேவையில்லாமல் வேதாளத்துடன் தீபாவளிக்கு வரிந்து கட்டுகிறார் என்று ஓர் ஆதங்கம் இருந்தது . வேதாளத்தை விட மிக குறைவான ஒப்பணிங்கே படத்துக்கு கிடைத்திருப்பதோடு நிறைய தியேட்டர்களில் வேதாள பிரம்மாண்டத்துக்கு முன் ஏதோ புது பட ஹீரோ போஸ்டர் போல கமல் படம் இருந்ததை பார்த்த போது  50 வருடத்துக்கு மேல் சினிமா அனுபவம் , பல வெற்றிகள் , விருதுகள் , உலக அளவிலான ரசிகர்கள் இதெல்லாம் பொய்யா ? வெறும் நடிப்பா என புதிய பறவை சிவாஜி ரேஞ்சுக்கு அந்த ஆதங்கம் கொஞ்சம் அதிகமானது . ஆனால் படத்தை பார்த்த பிறகு கமல் தன்  மேல் மட்டுமல்ல தனது ரசிகர்களின் ரசனை  மேலும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது புரிகிறது  . மொத்தத்தில் வழக்கமான காப் கதையாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம் தூள் வனம் ...

ஸ்கோர் கார்ட் : 44

ரேட்டிங்   : 3.5* / 5* 

( படம் முடிந்த பிறகு வரும் " நீயே உனக்கு ராஜா " பாடல் ஹைலைட் )




5 November 2015

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...




விஜய் 

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பதால் சிறு வயதிலேயே அவருடைய படங்களில் தலை காட்டினார் விஜய் . 1992 இல் தந்தை இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு சரியாக ஓடா விட்டாலும் ஆக்ரோஷமான இளைஞனாக நடித்து முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் . பிறகு அப்பாவின் படத்தில் தொடர்ந்து நடித்தவருக்கு மூன்றாவது படமான ரசிகன் தனி ஹீரோவாக முதல் கமார்சியல் ஹிட் . தந்தையின் நிழலில் பயணத்தை தொடங்கியிருந்தாலும் தனக்கென்று தமிழ் சினிமாவில் தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இந்த இளைய தளபதி ...

அதன் பிறகு அஜித் உடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே உட்பட சொல்லிக்கொள்ளும் படியாக எந்த படமும் இல்லாத நேரத்தில் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக , பாசில் இயக்கத்தில் , இசைஞானி இசையில் வந்த காதலுக்கு மரியாதை என அடுத்தடுத்து ஹிட்கள் பெண்களுக்கிடையே இவரை லவ்வபிள் பாயாக மாற்றியது. அதுவும் இவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்களும் ( இதை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய் என்று மறக்காமல் போட்டுவிடுவார்கள் ) நடனமும் இளைஞர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அம்மா ஷோபா பாடகி என்பதாலோ என்னமோ இவருடைய படங்களில் பாடல்களுக்கு என்றுமே விஜய் தனிக்கவனம் செலுத்துவார் . பிறகு லவ் டுடே , ஒன்ஸ் மோர் என்று தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்தவருக்கு மீண்டும்  நேருக்கு நேர் மூலம் அஜித்துடன் சேரும் வாய்ப்பு கிடைத்தும் அஜித் விலகிக் கொண்டதால் சூர்யா வின் அறிமுகம் ரசிகர்களுக்கு கிடைத்தது ...

ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெற்றிகள் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டதோடு தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக மாறிக் கொண்டிருந்த விஜய் மேல் யார் கண் பட்டதோ கே.எஸ்.ரவிகுமார் , பாசில் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களான மின்சாரகண்ணா , கண்ணுக்குள் நிலவு இரண்டுமே தோல்வியை தழுவின . எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 இல் வந்த குஷி மீண்டும் அவரை குஷிப்படுத்தியது . இப்படி அஜித் போல விஜய்க்கும் வெற்றி , தோல்விகள் மாறி மாறி வந்தாலும் 2001 - 2003 வரை ஷாஜஹான் , தமிழன் என தொடர் தோல்விகள் விஜயை வதைக்க ஆரம்பித்தன . தோல்விகளால் துவண்டிருந்தவரை மலை போல நிமிர்த்தியது புதுமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை . பக்கா மாஸ் ஹீரோவாக விஜயை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது இந்தப் படம் எனலாம்  . அதன் பிறகு கில்லி , போக்கிரி என நிறைய மெகா ஹிட்கள் வசூலை அள்ளிக் குவித்தன ...

விஜய் நடித்த கில்லி ,  போக்கிரி என ரீமேக் படங்கள் பெரிய ஹிட் அடித்தாலும் தெலுகு நடிகர் மகேஷ்பாபு வை பார்த்து அப்படியே உல்டா அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தன . அஜித் துக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் சக்சஸ் என்றால் விஜயக்கோ அழகிய தமிழ் மகன் , வில்லு ஏன் லேட்டஸ்ட் புலி உட்பட மூன்றுமே ஃப்ளாப்புகள் . கதையை தவிர இரண்டு கேரக்டர்களுக்குமே எந்தவொரு வித்தியாசத்தையும் காட்ட விஜய் முற்படாததும் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது . பொதுவாக விஜய்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல ஈசியாக இருந்ததில்லை ...

விஜய்க்கு மிருக தோஷமோ என்னமோ குருவி , 50 வது படமான சுறா , பெரிய பில்ட் அப்புடன் வந்த புலி என எல்லாமே தோல்வி அடைந்ததோடு நெட்டிசன்களால் கழுவி , கழுவி ஊற்றப்பட்டன . இருப்பினும் ரஜினிக்கு பிறகு படத்தை எடுப்பவருக்கும் , வாங்குபவருக்கும் மினிமம் கேரண்டி யை கொடுக்கும் படியான ஸேஃப் பெட்டாகவே விஜய் படங்கள் அமைந்தன . குடும்பத்துடன் பார்க்கும் படியாக இவர் படங்கள் இருப்பதும்  , எம்.ஜி.ஆர் போல தன் மேல் நெகடிவ் ஸேட் விழாமல் ஒரு கிளீன் இமேஜை இவர் ஸ்க்ரீனில் மெய்ண்டைன் பண்ணுவதும் முக்கிய காரணமாக  இருக்கலாம் . அரசியல் ஆசையால்  இவர் படங்கள் சர்ச்சைக்கு உள்ளானாலும் தனது ஆக்சன் , டேன்ஸ் , காமெடி என்று காசு கொடுத்து தியேட்டருக்கு  வரும் பாமர ரசிகனை இவரது படங்கள் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை எனலாம் ...

அறிமுகம்       :  நாளைய தீர்ப்பு 
முதல் ஹிட்  :   ரசிகன் 
ப்ரேகிங் பாயிண்ட் :  பூவே உனக்காக 
தளபதி  அவதாரம்         :  திருமலை 
அறிமுக இயக்குனர் :  எஸ்.ஏ.சந்திரசேகர் 
பேவரட் இயக்குனர்  :  அப்போது எஸ்.ஏ.சி , இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் 
100 க்ரோர் கிளப் :  துப்பாக்கி , கத்தி 
அடுத்த ரிலீஸ் : அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் 

அடுத்த பதிவில் அஜித் Vs விஜய் யார் பெஸ்ட் ? ...

23 October 2015

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...



அஜித் 

மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும்  இவரை வைத்திருக்கிறது ...


சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு  20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  .  சிவாஜிகமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...

22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே .   ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம்   அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா  போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...                   

சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார்  இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...  

முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது  , விளம்பர படங்களில் நடிக்காதது  , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு  போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான்  நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...


அறிமுகம்       :  அமராவதி  
முதல் ஹிட்  :  ஆசை 
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி 
தல அவதாரம்         : தினா 
அறிமுக இயக்குனர் : செல்வா 
பேவரட் இயக்குனர்  : சரண் ,  இப்போது சிறுத்தை சிவா 
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம் 
அடுத்த ரிலீஸ் : வேதாளம் 

அடுத்த பதிவில் விஜய்  ...



நானும் ROWDY தான் - NRD - நம்பி பார்க்கலாம் ...


பொதுவாக வெற்றிப் படங்களை இரண்டு வகைக்குள் அடக்கலாம் . ஒன்று படம்  பார்த்து முடித்த பின்னும் காட்சிகளின் பாதிப்பு சில காலம் தொடர்வது, இரண்டு படம் பார்க்கும் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் என்ஜாய் செய்து விட்டு வெளியே வந்தவுடன் மறந்து விடுவது . நானும் ரவுடி தான் இதில் இரண்டாம் வகை ...

சிறு வயதிலிருந்தே ரவுடியாக வேண்டுமென்கிற கொள்கையில் ! இருக்கும் பாண்டு பாண்டி ( விஜய் சேதுபதி ) க்கு ஒரு சோதனை . காதலி காதம்பரி
( நயன்தாரா ) யின் பெற்றோர்களை கொன்ற நிஜ ரவுடி கிள்ளிவளவனை
( பார்த்திபன் ) கொல்ல வேண்டும் . இந்த ஆஸ் யூசுவல் ரிவென்ஜ் ஸ்டோரியை படு காமெடியாக சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் ...

இ.ஆ.பா.கு விற்கு பிறகு வெற்றியை தேடி அலைந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த படம் நல்ல தீர்வு . போலீஸ் செலக்சனில் முன்னாள் ஒடுபவனிடம் போலீசை விட ரவுடி தான் பெருசு என்று ப்ரைன் வாஷ் செய்யும் ஆரம்ப காட்சியிலிருந்து தொடங்கி விடுகிறது அவர் ராவுடி . இவரது கண்களே நன்றாக பேசும் போது படபடவென உதடுகள் பேசுவதை தவிர்த்திருக்கலாமோ?! . இந்த வருடத்தின் நாயகி நயன்தாரா தான் என்பதில் சந்தேகமே இல்லை . மாயா வை தொடர்ந்து மற்றொருமொரு மைண்ட் ப்ளோயிங் பெர்ஃபார்மன்ஸ் . காது கேட்காத பெண் காதம்பரி ! யாக நடித்ததோடு சொந்தக்குரலிலும் முதன்முறையாக பேசி நடித்திருக்கிறார் . இனிமே இவங்களே தொடர்ந்து டப்பிங் பேசலாம் . அப்பா இறந்தது தெரிந்தவுடன் ரோட்டில் அழுது கொண்டே நயன் போகும் ஸீன் காமடிப் படத்திலும் லேசாக கலங்க வைக்கிறது . இன்டர்வெல் ப்ளாக்கில் வரும் லிப் டு லிப் பேசும் ஸீன்  தேவையா ?! . என்று கேட்க வைத்தாலும் வித்தியாசம் ...


லீட் பேர்  தவிர சூயிங்கம் மென்று கொண்டே சேட்டையாக பேசும் பார்த்திபன், கிடைக்கிற கேப்பில் காமெடி கடா வெட்டும் ஆர்.ஜே .பாலாஜி , " மொதல்ல அந்த பொண்ணு பேசுறத நிப்பாட்ட சொல்லுங்கப்பா " என்று புலம்பும் ஆனந்தராஜ் , பிள்ளைக்காக பார்த்து மார்க் போடுங்க என்று கெஞ்சும் போலீஸ்காரம்மாவாக ராதிகா இவர்களோடு மன்சூர்அலிகான் , மொட்டை ராஜேந்திரன் , ராகுலாக  வரும் பெரியவர் என எல்லோருமே தங்கள் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் ...

ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை பளிச்பளிச் என்று காட்டுகிறது . முதலில் தான்  ஹீரோவாக நடிக்கவிருந்ததாலோ என்னவோ அனிருத் தின் இசை இந்தப் படத்தில் கூடுதல் தெறி யாக இருக்கிறது . பாடல்களை இயக்குனர் சரியான விதத்தில் பயன்படுத்தியதும் சூப்பர் . காது கேட்காத ஹீரோயின் , காதலனின் உதவியோடு பெற்றோர்களை கொன்றவனை பழிவாங்கும் கதைக்கு எங்குமே செண்டிமெண்டையோ , ஹீரோயிசத்தையோ புகுத்தாமல் தான் எடுத்துக்கொண்ட கண்டெண்டிற்கு ஏற்றபடி ஃப்ரெஸ்ஸாக இயக்குனர் சொன்ன விதத்திற்காக இந்த நானும் ரவுடி யை நம்பி பார்க்கலாம்  ...

ஸ்கோர் கார்ட் :  43

ரேட்டிங் :    3.5 * / 5 *


21 October 2015

10 எண்றதுக்குள்ள - 10 E - வேகமா எண்ணியிருக்கலாம் ...


கோலிசோடா ஹிட் டுக்கு பிறகு  இயக்குனர் விஜய்மில்டன் - ஐ ஹிட்டடித்த கையோடு நடிகர் சீயான் விக்ரம் இருவரும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இணைந்திருக்கும் படம் 10 எண்றதுக்குள்ள . இவை தவிர படத்தின் எதிர்பார்ப்பு எகிறியதற்கு மற்றொரு காரணம் இளைஞர்களின் தற்போதைய சென்சேஸன்  சமந்தா . இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பை விக்ரம் - சமந்தா காம்பினேஷனை வைத்து ஓரளவு மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று சொல்லலாம் ...

சொன்ன டயத்துக்கு எதையும் டெலிவரி செய்யக்கூடிய  ஃபாஸ்ட் டிரைவர் ஹீரோ விக்ரமுக்கு  ( படத்தில் அவருக்கே பெயரே இல்லை  )  முசெளரி க்கு காரை கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் வருகிறது . காருக்குள் அவருக்கு தெரியாமல் இருப்பது ஹீரோயின் ஷகீலா ( நோ டென்ஷன் அது சமந்தாவோட பேரு ) . பிறகு என்ன நடந்திருக்கும் என்கிற  கடைசி பெஞ்ச் ஆடியன்ஸ் வரை தெரிந்த கதையை ட்விஸ்டோடு சேர்த்து ஸ்பீட் ப்ரேக்கரும் வைத்து சொல்லியிருக்கிறார்கள் ...

படத்துக்கு நிறைய மெனக்கெட்ட விக்ரம் அதுக்கு மேல என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காமல் கேசுவலாக செய்திருக்கும் படம் . படத்தில் லேசி போல காணப்பட்டாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறார் . சமந்தாவிடம் இவர் மாட்டிக்கொண்டு படும்பாடு சுவாரசியம் . சமந்தாவுக்கு விக்ரமுக்கு ஈக்குவலாக ஏன் கொஞ்சம் தூக்கலாகவே வெயிட்டான ரோல் . டிரைவிங் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கிற லூட்டி தனியாக காமெடியன் இல்லாத குறையை தீர்க்கிறது . முதலில் கண்ணாடி போட்டுக்கொண்டு அப்பாவி போல இருப்பவரிடம் போகப்போக கண்ணாடியையும் காணோம் , அப்பாவித்தனத்தையும் காணோம் . ஒருவேளை கண்ணாடியோடு சேர்த்து அதுவும் தொலைந்து விட்டதோ என்னமோ ?! ...


படத்தின் சர்ப்ரைஸ் எளிமென்ட் சீரியஸ் டானாக வந்து சிரிப்பு காட்டும் பசுபதி. முன்டாசுப்பட்டி மூலம் நம்மை கவர்ந்த ராமதாசை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் . ஹிந்திக்கார மைதாமாவு வில்லன்கள் படத்தின் கதைக்கு பொருத்தம் . சார்மி குத்தாட்டம் போடும் அயிட்டம் சாங் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் . விக்ரமின் ஒபெனிங் ஸீன் உட்பட படத்தின் சி.ஜி கவுத்தினாலும் பாஸ்கரனின் ஒளிப்பதிவும் , மாஸ்டர் விஜயனின் சண்டைக்காட்சிகளும் படத்தை காப்பாற்றுகின்றன . டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியில்லை ...

ஒரு பெண்ணை இந்தியாவின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு கொண்டு செல்லும் பையா டைப் கதை . அதில் எதற்கு ஹீரோயின் கடத்தப்படுகிறாள் என்கிற ட்விஸ்டை கலந்து கதையெனும் காரை ஓட்டியிருக்கிறார்கள் . கடைசியில் அதற்கு சொல்லப்படும் காரணம் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டாலும் பெரிதாக ஒட்டவில்லை . முசெளரி க்கு போன பிறகு ஏதோ இங்கிருக்கும் முசிறிக்கு போவது போல டிக்கெட் எடுத்து சமந்தாவை பஸ் ஏற்றி விடுகிறார் விக்ரம் . இப்படி படத்தில் லாஜிக் எனும் வஸ்துவை தங்கள் தேவைக்கேற்ப பின்பக்கம் ஸ்டெப்னி போல மாட்டியிருக்கிறார்கள் ...

ஒரு ஸீன் வந்தாலும் விக்ரம் - தங்கை ஸீன் உருக்கம் .  வழக்கமான கதைக்கு  உத்ராகண்ட் வில்லன்கள் சமந்தாவை ஏன் கடத்துகிறார்கள் ? சமந்தாவுக்கு என்ன ஆகும் ? , விக்ரம் எப்படி காப்பாற்றுவார்?  என்று  க்யூரியாசிட்டி யை  ஸ்க்ரீன் ப்ளே யில் கொடுக்கத் தவறவில்லை  இயக்குனர் விஜய்மில்டன் . அதேசமயம் விக்ரம் - சமந்தா காம்பினேஷனில் ரோட் ட்ராவல் கதையை யோசித்து 10 எண்றதுக்குள்ள என்று கேட்சியாக தலைப்பிட்டவர்கள் ஒன்னு ... ஒன்னேமுக்கால் என்று நீட்டி முழக்காமல் டைட்டிலுக்கேற்ப  கொஞ்சம் வேகமாக எண்ணியிருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5 * / 5 *




20 October 2015

அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...




சினிமாவில் பார்க்கும் ஹீரோக்களை படம் முடிந்தவுடன் மறந்துவிடாமல் மனதோடு வைத்து பூஜிக்கும் பழக்கம் இன்று நேற்று என்றல்ல பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா , எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல் இந்த வரிசையில் இன்று பாப்புலராக ரசிகர்களிடையே ஆராதிக்கப்படும் அதே சமயம் எதிர் குழுவினரால் கழுவி கழுவி ஊற்றப்படும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் . இவர்களுக்கு பிறகு தனுஷ் - சிம்பு என்றொரு அணி தோன்றினாலும் இன்றளவும் அஜித் - விஜய் இருவருமே கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார்கள் ...

ஏற்கனவே எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் சிலேடையாக அடுத்த ஹீரோவை தங்கள் ஹீரோ தாக்கும் போது அந்த பக்க ரசிகர்கள் ஆத்திரப்படுவதை பார்த்து ஆரவாரம் செய்தார்கள் . உதாரணத்துக்கு தினா படத்துக்கு பின் தல என்று ரசிகர்களால் அஜித் அறியப்படுவது அனைவரும் அறிந்ததே . ஒரு படத்தில் ( புதிய கீதை என நினைக்கிறேன் ) விஜய் ' யாருடா உன் தல " என்று ஒரு அடியாளை பார்த்து கேட்டது அஜித் ரசிகர்களை சூடாக்கியது . அஜித் படங்களில் கூட இது போன்ற உதாரணங்களை சொல்லலாம் ., சமீபமாக என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை பார்த்து " டாக்டரா நானா " என்று அஜித் தலையாட்டிய போதும் , சண்டைக்காட்சிக்கு முன்  அருன்விஜயை பார்த்து " என்னடா ஸ்பீச்சா கொடுக்கற " என்று கேட்ட போதும் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள் . விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதும் , அவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு கல்லூரியில் ஸ்பீச் கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?! . இப்படி அரசல் புரசலாக அவர்களுக்கிடையேயும் , நேரடியாக ரசிகர்களுக்கிடையேயும் இருந்த சண்டை சமீபத்தில் புலி ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகியிருக்கிறது...

புலி எதிர்பார்த்த அளவுக்கு போகாதது மட்டுமல்ல குருவி , சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல்  செய்யும் அளவுக்கு அமைந்துவிட்டது . படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் போஸ்டரில் விஜய் படத்தை சின்னதாக்கி ஒத்தக்கண்ணன் படத்தை பெரிதாக போடும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் இறங்கியும் , அது குழந்தைகளுக்கான படம் என்று பின்னர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தும் குழந்தைகளே அதை நம்ப மறுத்துவிட்டார்கள் . அதோடு சேர்த்து ஒப்பனிங்  சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க அவரோ அவன் காலை பிடித்துக் கொண்டு " நீங்க வேதாளம் , நாங்க பாதளம் " என்று டயலாக் பேசியது விஜய் படத்துக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. தலைப்பிடப்படாமல் இருந்த தல படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்தது கோ இன்சிடன்டா இல்லை புலியின் காட்சியமைப்புகளை தெரிந்து கொண்டு வைக்கப்பட்ட  ப்ளாண்ட்  இன்சிடண்டா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் புலி படத்தையும் , விஜயை யும் ஓவராக கலாய்க்க விஜய் ரசிகர்கள் கமிஷனர் ஆபீசுக்கு சென்று கம்ப்ளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டது ...


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலேயே ஒருவரது படம் ரிலீசானால் மற்றொருவரின் ரசிகருக்கு அடி உதை  என்பது எழுத்தப்படாத விதியாக இருந்தது . அதே கதை தான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கும் . ஆனால் நிலைமை கை மீறிப் போகும் போது  அவர்கள் தலையிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்கள் . இன்றோ தல - தளபதி இருவரின் ரசிகர்களின் தலை மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறது . இப்படி இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பதோடு ஒரு படத்தின் மூலம் கிட்டத்தட்ட  100 கோடி  க்கு பிசினசையும் கொடுக்கும் அஜித் - விஜய் இருவரைப் பற்றிய அலசல் அடுத்த பதிவில் ...




10 October 2015

தெருக்கூத்து - கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ?! ...


டந்த சில மாதங்களாகவே பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் செய்தி அக்டோபர் 18 ல் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் . கடந்த 15 வருடங்களாகவே தேர்தலே இல்லாமல் நடிகர் சங்கத் தலைவர் பதிவியை தக்க வைத்துக்கொண்டிருந்த சரத்குமாருக்கும் , 29 வருடங்களாக செயலாளர் பதவியில் இருக்கும் ராதாரவிக்கும் " பாண்டவர் அணி " என்று அழைக்கப்படும் விஷால் , கார்த்தி , நாசர் , பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் இந்த ஐவரால்
( பாஞ்சாலி யாருன்னெல்லாம் குசும்பா கேட்கக்கூடாது ) சில வருடங்களாக குடைச்சல் கொடுக்கப்பட்டு இன்று சரத்துக்கு எதிராக நாசரும் , ராதாரவிக்கு எதிராக விஷாலும் தேர்தலில் நிற்கும் அளவிற்கு மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்கிறது ...

நடிகர் சங்கத்தை இடித்து அங்கே எஸ்பிஐ சினிமாஸ் வருவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே பூச்சி முருகன் என்பவர் கேஸ் போட்டு கட்டிடம் கட்டுவதற்கு ஸ்டே வாங்கியிருந்தார் . இந்த முறைகேடு சம்பந்தமாக விஷால் , எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுப்பான பதில்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்தவர்கள் தனி டீம் அமைத்து இன்று ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க முனைத்திருக்கிரார்கள் . முதலில் இவர்களை பெரிதுபடுத்தத சரத்குமார் & கோ இப்பொழுது கமல்ஹாசனின் ஆதரவோடு சத்யராஜ் உட்பட பல சீனியர்களின் ஆதரவும் கிடைத்திருப்பதால் நிறையவே டென்சன் ஆகியிருக்கிறார்கள் . கட்டிடம் கட்டும் விஷயத்தில் முறைகேடு நடந்ததா ? இல்லையா என்று யாருக்கும் தெரியாது . ஆனாலும் விஷால் & கோ வினர் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் . மறு தரப்பினரோ பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்த பிறகு தான் தீர்மானம் போடப்பட்டது என்கிறார்கள் . உண்மையில் நடிகர் சங்க இடத்தின் மேல் அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் கோடி கோடி யாக தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அள்ளிக் கொடுக்க வேண்டாம் , கிள்ளிக் கொடுத்திருந்தாலே இந்த பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்திருக்குமே ?! அது அனைத்து நடிகர்களுக்குமே வெளிச்சம் ! ...

பொதுவாகவே எந்த ஒரு சங்கத்தும் குறிப்பிட்ட  ஆண்டு இடைவெளியில் ஜனநாயக முறையில் தேர்தல்  நடத்தப்பட்டு நிர்பவாகிகள் தேர்ந்தேடுக்கப்படுவதே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் . அப்படி இல்லாமல் ஒரே ஆட்களே ( மாமன் , மச்சானாக இல்லாமல் போனாலும் ) நீண்ட வருடகளுக்கு பொறுப்பில் இருப்பது நிச்சயம் இது போன்ற பிளவுக்கு ஒரு நாள் இல்லை நாள் வழிவகுக்கும் . அது தான் இப்போது நடந்திருக்கிறது . ஆர்யா , விஷ்ணு , விக்ராந்த் , சாந்தனு என்று இளவட்டங்கள் விஷாலுக்கு பின்னால் வரிந்து கட்ட , சிம்பு , தனுஷ் போன்ற சீனியர் இளவட்டங்கள் சரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் .  சிம்பு சரத் அணியினர் சார்பில் போட்டியிட , கார்த்தி விஷால் சார்பில் போட்டியிடுகிறார் . ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் ஆதரவை விஷால் அணியினர் கோரினால் , சின்னத்திரையினர் ஆதரவை ராதிகா சரத்குமார் வைத்திருக்கிறார் .  இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல விஷாலை அவன் , இவன் என்று வசை பாடுகிறார் வாலு நடிகர் . நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே பிரஸ் மீட்டில் விஷாலை கழுவி கழுவி ஊற்றுகிறார் சிம்பு . சரத்குமார் ஒரு படி மேலே சென்று விஷால் மேல் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கே போட்டுவிட்டார் . விஷாலோ எதையும் சந்திக்க தயார் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் . லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நினைவு தின விழாவைக் கூட இவர்கள் அரசியல் விட்டுவைக்கவில்லை . இப்படி நிஜ அரசியல் தேர்தலை கூட மிஞ்சி விடும் போலிருக்கிறது இவர்கள் சண்டை ...

முதலில் கூடுதல் பலத்திலிருந்த சரத் & கோ விஷால் சிலம்பலுக்கு  செவி சாய்க்காமல் தானிருந்தனர் . பிறகு உலகநாயகனின் நேரடி ஆதரவு அவர்களை நிலைகுலைய செய்தது . சூப்பர்ஸ்டார் மண்டபத்தில் வைத்து விஷால் அணியினர் கூட்டம் நடத்தியிருப்பது அவரின் மறைமுக ஆதரவாக மற்ற அணியினர் பார்க்கிறார்கள் . இப்படி ஒரு பக்கம் ஆதரவு கூடி வருவதை கண்ட சரத் அணியினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை மறுத்துவிட்டார் விஷால் . இன்னும் தல ஆதரவு யாருக்கு என்று தெளிவாக தெரியவில்லை . ஆனால் இளையதளபதி புரட்சிதளபதி க்கு எதிராகத் தான் இருப்பார் போலத் தெரிகிறது . அரசியல் ஆசையில் இருக்கும் அவருக்கு கலைஞர் ஆட்சியில் மேடையிலேயே கேள்வி கேட்டு கெத்து காட்டிய தல போல சீனியர்களுடன் நிஜ ஸ்டண்ட்  அடித்து வரும் விஷாலின் வளர்ச்சி வெறுப்பேற்றியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் ....

இந்த இரண்டு அணியினரின் சண்டை ஒரு புறம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை மாற்றி தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் மற்றும் ஒரு தமிழர் தான் சங்கத்தின் உயர் பதவிக்கு வரவேண்டுமென்றும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் மற்றொரு அணியினர் . இது போன்ற இன , மொழி பேதங்களை கலைஞர்களுக்குள் புகுத்துவது சரியில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் தமிழர் யாரும் எந்த பதவியிலும் நிற்க முடியாது என்று அவர்கள் சொல்கிற செய்தியையும் மறுக்க முடியாது . புலி படம் ஃப்ளாப்பா , ஹிட்டா என்று இணையதளங்களில் நடக்கும் சண்டையை விஞ்சி நிற்கும் இந்த தேர்தல் பரபரப்புக்கு அக்டோபர் 18 க்கு பிறகு விடை தெரியும் . தேர்தல் முடிந்து நல்ல மாற்றம் ஏற்பட்டால் நல்லது தான் . எது எப்படியோ ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் . இங்கே கூத்தாடிகள் ரெண்டுபட்டிருப்பது ஊருக்கு கொண்டாட்டமோ இல்லையோ மீடியாக்களுக்கு நல்ல கொண்டாட்டம் . இதைப்பற்றி தினமொரு பேட்டி , செய்தி  என்று பரபரப்பாக்க இயங்கிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள் ...



2 October 2015

புலி - PULI - பலி ...


ஜினிக்கு அடுத்தபடியாக குழந்தைகளால் அதிகம் ரசிக்கப்படும் மாஸ்  ஹீரோ விஜய் , முதல் படம் தவிர ஹிட் கொடுக்காத ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன்  இருவரும் குழந்தைகளுக்கான படமாக புலியை கொடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் பெரியவர்களின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கலாம்...

வேதாளங்களின் ( அஜித் இல்லைங்கோ ! ) கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மருதீரன் ( விஜய் ) , வேதாளங்களால் கடத்தப்பட்ட தன் காதலி பவளவள்ளி (ஸ்ருதிஹாசன் ) யையையும் , அடிமைப்பட்ட தனது  கிராமத்தையும் எப்படி மீட்கிறார் என்பதே கடைசி வரை எப்படா பாயும் என்று நம்மை நோகடித்த புலியின் கதை ...

தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் இது போன்ற ஃபேண்டசி டைப் படத்துக்கு ஓகே சொன்னதற்கு பாராட்டுக்கள் . ஆனால் அதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாரோ என்னமோ ! கொஞ்சம் நடிங்க பாஸ் ! . ஸ்ருதி யோடு அவருக்கு என்ன பிரச்சனையோ ?! எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசுகிறார் . அப்பா புலியாக ஃப்ளாஷ்பேக்கில் சீரியசான  குரல் மாடுலேஷனில் அவர் பேசும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது . பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுக்கான படத்தை தனது ரசிகர்கள் நிராகரித்து விடுவார்களோ என்கிற பயத்தில் நடப்பு அரசியல் , " நான் ஆளப்பிறந்தவன் இல்ல , மக்களுக்காக வாழப்பிறந்தவன் " என்றெல்லாம் டயலாக் பேசவிட்டு அப்பா புலியை சாகடித்து விடுகிறர்கள் . பரிதாபம் வரவேண்டிய இந்த இடத்தில் புலி மேக்கப் புடன் ஒரு மாதிரி பேசும் விஜயை பார்த்து நமக்கு பயம் வருகிறது . கத்தி , துப்பாக்கி என்று ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தவர் மேல் யார் கண் பட்டதோ ?! . குருவி , சுறா வரிசையில் புலி யை பார்த்தால் விஜய்க்கு மிருக தோஷமா ?! . கொடுமை என்னவென்றால் அந்த சுறாவையே நிறைய இடங்களில் தின்று விட்டது புலி . இளைய தளபதி யின் பழைய படத்தை பார்த்த ஃபீலிங் ...


ஐ.பி.எல் மேட்ச் நடுவில் ஆடும் சீர் லீடர் வேலை தான் ஸ்ருதி ஹாசனுக்கு . இலியானாவுக்கு அடுத்து அதிகம் இடுப்பை ஆட்டியவர் இவராகத்தான் இருப்பார் . இவருக்கு யாராவது டப்பிங் கொடுத்தால் தேவல ! . விஜயிடம்
" இப்படிக்கூடவா காதுல சொல்லுவாங்க " னு ஒரு டயலாக் பேசுகிறார் . என்னடா ஏதாவது பலான ஜோக் தான் விஜய் சொல்லிட்டாரோ னு பாத்தா , அது "காதுல " இல்லேங்கின்னா " காதல " அதத் தான் அந்த அம்மணி அப்புடி சொல்றாங்கோ ! . ஸ்ருதியின் இடைக்கு ஒய்வு கொடுத்து இடைவேளைக்குப் பின் அந்த வேலையை எடுத்துக்கொல்கிறார் சாரி கொள்கிறார் ஹன்சிகா மோத்வானி . ஸ்ரீதேவி க்குல்லாம் வயதே ஏறாதா ?! வேதாளமாக அதீத மேக்கப்புடன் சில இடங்களில் பயமுறுத்தினாலும் நார்மாலாக நைஸ் டு வாட்ச். பெரிய ஹீரோ என்றவுடன் நடிக்க டப்பென்று ஒப்புக்கொண்டிருப்பார்  நந்திதா . கமல் , மணிரத்னம் படங்களிலாவது ஏதோ டயலாக் கொடுத்திருப்பார்கள் போல ! பாவம் ஒரு பாட்டுக்கு வரும் டேன்சர் அளவிற்கு கூட நந்திதா ஸ்க்ரீனில் இல்லை ...

அடிக்கடி வரும் பாடல்களை பொதுவாக ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லாலம் . ஆனால் இந்த படத்தில் ஸ்பீடே  இல்லாததால் அப்படி சொல்ல முடியவில்லை . விஜய் சூப்பரா டேன்ஸ் ஆடுறத நாங்க சன் மியூஸிக் லையே பாத்துட்டு போறோம் . அதுக்காக இப்புடியா !? . மற்றபடி
 " ஜிங்கிலியா  " தாளம் போட வைத்தால் விஜய் குரலில் " ஏண்டி ஏண்டி " மெஷ்மெரிசம் செய்கிறது . படத்தின் ஹைலைட் நடராசன் எ நட்டுவின் ஒளிப்பதிவு . சும்மா நச்சுன்னு இருக்கு . சிஜி சில இடங்களில் பல்லிளித்தாலும் நிறைய இடங்களில் சூப்பர் . ஆர்ட் டைரக்ஷன் அமர்க்களம் ...


சக்சஸ்  ஹீரோ விஜய் , ஸ்ரீதேவி , சுதீப் என பெரிய நடிகர் பட்டாளாம் , 100 கோடியை தாண்டிய பட்ஜெட் இப்படி கிடைத்த மிக பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்டாலும் பரவாயில்லை சிதைத்து விட்டார் சிம்புதேவன் . பரிசலில் வரும் ராஜவம்ச குழந்தை , கொடுங்கோல் ஆட்சி , அந்த ராஜ்யத்துக்குள் செல்லும் ஹீரோ என பாகுபலி டைப் கதை தான் புலி . ஆனால் திரைக்கதை ?!. 100 கோடிக்கு மேல் இயக்குனரை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் சுஜாதா வின்  " திரைக்கதை எழுதுவது எப்படி " என்கிற 100 ரூபா புத்தகத்தை முதலில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் . பதுங்கவும் இல்லாமல் , பாயவும் இல்லாமல் ஒரே ஃப்ளாட்டாக இருக்கிறது புலியின் திரைக்கதை . 150 வயது ஆமை , ஒத்தைக் கண்ணன் , தவளை போன்ற சில சுவாரசியங்களும் படத்தில் உண்டு . ஹன்சிகா வை கருஞ்சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் சீன் , விஜய் தன்னை வேதாளம்  என்று நிரூபிக்கும் சீன் போன்ற  ஒன்றிரண்டை ரசிக்கலாம் ...

வேதாளத்திடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற விஜய் ஓடி வரும் ஒப்பெநிங் சீனில் புலி வேதாளத்தை ( அஜித் ?! ) துவட்டி எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கத்த அவரோ வேதாளத்தின் காலை இறுகப்பிடித்து ஊரை காப்பாற்றுகிறார் . ஹீரோவின் பயந்த கேரக்டருக்கு ஏற்றபடி இந்த ஸீன்  இருந்தாலும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் அடங்கிப் போகிறார்கள். வேதாளம் பிரபு வை  கொன்று விட்டு ஸ்ருதி யை கடத்திப் போவதை ஸீனாக வைக்காமல் செய்தி போல் நரேன் சொல்வதைக் கேட்டு விஜய் ஆவேசமாக போவது ஏதோ " ஆடித்தள்ளுபடி முடியப்போகுதாம்மா அதுக்குள்ளே சேலை எடுத்தரலாம் " என்று போவதைப் போல இருக்கிறது . ஒரு இலையைக் காட்டி சங்கிலி முருகன் வேதாளம் கதையை சொல்லி முடிப்பதற்குள் நாம் முருங்கை மரமே ஏறி விடுவோம் . பொதுவாக பாட்டுக்கு வெளியே போகிறவர்களை பார்த்திருப்போம் . இதில் வெளியில் போனவர்கள் பாட்டுக்கு உள்ளே வருகிறார்கள் ...

படம் என்ன அவ்வளவு மொக்கையா ? அப்படின்னா நீங்க அஜித் ரசிகரா ?1 என்று சிலர் கேட்கலாம் . ஆழ்வார் , ஆஞ்சநேயா போன்ற அஜித் படங்களாலும் பாதிக்கப்பட்ட அபலைத் தமிழர்களில் நானும் ஒருவன் தான் . விவரம் தெரியாத குழந்தைகளுக்கு படம் பிடிக்கலாம் . அவர்கள் சந்தோஷத்துக்காக படத்துக்கு போகிற பெரியவர்கள் ஷாப்பிங் போகும் போது ப்ளே ஏரியாவில் குழந்தைகளை விட்டு விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது போல விலகி நிற்பது நலம் . பிரம்மாண்டத்தால் பாகுபலி யுடன் ஒப்பிடப்பட்ட புலி வரிசையாக வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த விஜய்க்கு திருஷ்டி கழிப்பதை போல ரசிகர்களுக்கும் சேர்த்து போடப்பட்ட பலி ...

ஸ்கோர் கார்ட் : 37 

ரேட்டிங்      : 2* / 5*


25 September 2015

கிருமி - KIRUMI - SLIP BETWEEN A CUP AND LIP ...


புதுமுக இயக்குனர் அனுசரண் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனோடு இணைந்து கதையை உருவாக்கியிருப்பதும் , எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை வெளியிட்டிருப்பதும் சின்ன பட்ஜெட் படம் கிருமி க்கு ஓரளவு எதிர்பார்ப்பை கொடுத்திருந்தன . படம் அதை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம் ...

கல்யாணமாகி குழந்தை இருந்தும் வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கதிர்
( கதிர் ) குடும்ப நண்பரான போலீஸ் இன்பார்மர்  பிரபாகர் ( சார்லி ) மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியனிடம் ( டேவிட் ) எடுபுடியாக சேருகிறார் . சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல கதிர் செய்யும் ஒரு செயல் அவனை புரட்டிப்போடுவதே கதை  . சுருக்கமாக சொன்னால் வெட்டிப்பயல் கதிர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவமே கிருமி ...

மதயானைக்கூட்டம் மூலம் அறிமுகமான கதிர் தான் ஹீரோ . அடுத்தடுத்து அவமானப்பட்டு துனுக்கிடும் இடங்களில் கவனிக்க வைக்கிறார் . இவரது கேரக்டர் ரொம்ப கேசுவலாக இருப்பது ஒ.கே . ஆனால் அதை சுற்றி நண்பர்களுடன் அரட்டை , பாட்டு என நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சம் சீக்கிரமே கதைக்குள் வந்திருக்கலாமோ என தோன்றுகிறது . இந்த கேசுவல் அப்ரோச் கதிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தை நமக்கு கொடுக்கவில்லை . அதனால் தானோ என்னமோ க்ளைமேக்ஸ் இயல்பாக இருந்தாலும் முழு ஈடுப்பாட்டுடன் ஓட்ட முடியவில்லை ...


சார்லி இயல்பான நடிப்பால் பிரபாகர் கேரக்டரை மேலும் மெருகேற்றியிருக்கிறார் . இவரை வைத்து இடைவேளையில் கொடுக்கும் ட்விஸ்ட் சூப்பர் . மனைவியாக ரேஷ்மி மேனன் நல்ல தேர்வு . ஆனால் இயல்பான படத்துக்கு இவர் மேக்கப் கொஞ்சம் உறுத்தல் . சீரியல் ஆர்டிஸ்டாக இருந்த  டேவிட் டுக்கு இந்த படம் நல்ல வாய்ப்பு . சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . வாழ்த்துக்கள் . மாரிமுத்து , யோகிபாபு எல்லோருமே படம் என்பதை மறக்கடித்தது இயல்பாகவே வந்து போகிறார்கள்.  கே இசையில் பி.ஜி மிரட்டுகிறது . ஆனால் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு தேவையா ? அதுவும் அஞ்சு ? நிச்சயம்  இயக்குனர் யோசித்திருக்க வேண்டும் . அருள் வின்சென்ட் ஒளிபதிவு இருட்டிலேயே நடக்கும் நிறைய சீன்களுக்கு வெளிச்சம் ...

புதுசான கதைக்களன் , அதற்கேற்ற டீட்டைளிங் , ரியலிஸ்டிக் அப்ரோச் , இயல்பான நடிப்பு என்று படத்திற்கு நிறைய ப்ளஸ் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் பாடல்கள் , கதிரை சுற்றியே நடக்கும் கதையில் அவனை போலவே நம்மையும் கேசுவலாக்கும் திரைக்கதை போன்ற குறைகளை   " வாளை சுழட்டும் வாழ்க்கை தலை குனிந்தால் தப்பில்லை " என்று கானா பாலாவின் குரலில் வரும் ஒபனிங் சாங்குக்கு ஏற்ப  நாமும் மன்னித்து விடலாம் . சினிமாத்தனம் இல்லாத நல்ல கதை இருந்தும் அதை எக்சிக்யுட் செய்த விதத்தில் கொஞ்சம் இடிப்பதால் கிருமி - ஸ்லிப் பெட்வீன் எ கப் அண்ட் லிப் ...

ஸ்கோர் கார்ட்  : 42

ரேட்டிங்               : 3* / 5* 


24 September 2015

மாயா - MAYA - மெச்சூர்ட் அட்டெம்ப்ட் ...


வணி  போய் புரட்டாசி என மாதம் மாறினாலும் தமிழ் சினிமாவில் தற்போது மாறாமல் ஓடிக்கொண்டிருப்பது பேய் சீசன் . அந்த வரிசையில் வந்திருந்தாலும் லீட் ரோலில் நயன்தாரா , நல்ல பப்ளிசிட்டி என்று வழக்கமான பேய் படங்களை விட வித்தியாசம் காட்டி எதிர்பார்ப்பை கொடுத்திருந்தாள் மாயா ...

மாயா பேய் படம் தான் ஆனால் பேயை காட்டி பயமுறுத்தும் படம் அல்ல . மாறாக பேயானவளை நோக்கி படத்தின் முக்கிய கேரக்டரை பயணிக்க வைக்கும் படம் . கைக்குழந்தையுடன் பெரிய ஹீரோயினாகும் கனவில் போராடும் அப்சரா ( நயன்தாரா ) , பத்திரிக்கையில் ஆர்டிஸ்டாக இருக்கும் வசந்த் ( ஆரி ) இருவரையும்  தனி ட்ராக்கில் பயணிக்க வைத்து மாயவனம் எனும் அமானுஷ்ய இடத்தில் இணைக்கும் திரைக்கதையே மாயா ...
நயன்தாரா க்கு நிச்சயம் இந்த படம் மைல்கல் . படத்தின் ஒபனிங்குக்கு மட்டுமல்ல படத்தையே சிங்கிள் ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் . ஆரி எபிசோட் மாறி மாறி வந்தாலும் படத்தின் மையப்புள்ளியாக இருக்கிறார் நயன் . ஆரி தேவைக்கேற்ப நடித்திருந்தும் நயன் டாமினேஷனில் ஆரி ,, சாரி . மைம் கோபி , அம்சத்  மற்றும் சில சின்ன கேரக்டர்களை வைத்துக்கொண்டு படத்தை செம்மையாக நகர்த்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு டாப் அண்ட் வைல்ட் ஆங்கிள்களில் நம்மை மிரட்டுகிறது . சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் , ரான் யோகனின் இசையும் படத்திற்கு பலம் ...


பீட்சா பாணியில் கதைக்குள் கதை வகையறா படம் மாயா . ஆடியன்சை அடுத்தது என்ன என்று யோசிக்க வைக்கும் திரைக்கதையே படத்துக்கு பலம் , சில இடங்களில் பலவீனம் . முதல் பாதியில் மாயா பற்றி சொல்லப்படும் செய்திகளும் , இரண்டு ட்ராக் திரைக்கதையும் நம்மை படத்தோடு ஒன்ற செய்கின்றன . இடைவேளைக்கு பிறகு நமக்கு விஷயம் பிடிபட்டவுடன் கொஞ்சம் படம் நீளும் போது  கடைசியில என்ன தாண்டா சொல்ல வரீங்க என்பது  போன்ற அயர்ச்சி வருவதை மறுப்பதற்கில்லை  ...

10 - 20 நிமிடங்கள் படத்தின் அளவை குறைத்து  வேகத்தை கூட்டியிருந்தால் முன் வரிசையில்  சிலர் தூங்குவதை தவிர்த்திருக்கலாம் . பேய்ப்பட  ஃபார்முலாவுக்குள் சிக்காமல் சீரியசாக போகும் கதையில் வரும் வைர மோதிர மேட்டர் ஆர்டினரி . நயன்தாரவுக்கு பணம் கொடுத்தவன் கதி கடைசில என்ன பாஸ் ?. படத்தை பார்த்து பயந்தேன் என்று சொல்பவர்கள் நிச்சயம் இதய நல மருத்துவரை அணுகுவது நலம் . படத்தில் ஹாரர் என்பதை விட திரைக்கதையில் இருந்த த்ரில்லே படத்துக்கு தில். திகிலால் நம்மை பெரிதாக மிரட்டாவிட்டாலும் காமெடி , மைதா மாவு பூசிய பேய் , சாமியார் என்றெல்லாம் வதைக்காமல் சொல்ல வந்ததை இயக்குனர் அஷ்வின் சரவணன் முதல் படத்திலேயே மெச்சூர்டாக சொன்ன விதத்தில் பேசப்படுவாள் இந்த மாயா ...

ஸ்கோர் கார்ட் : 43

ரேட்டிங்              : 3.25* / 5 *  




23 September 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...


முதல் படமான டார்லிங் சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய்  அதையே  கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா வில் நடித்து விட்டார் ஜி.வி என நினைக்கிறேன் . அடல்ட் செக்ஸ் பேஸ் மூவி தமிழுக்கு போல்டாக பட்டாலும் படத்தில் காமெடி என்கிற பெயரில் காம நெடி மட்டுமே தூக்கலாக இருக்கிறது ...

வெர்ஜின் பையன் ஜீவா ( ஜி.வி.பிரகாஷ்குமார் ) தனது சிறு வயது தோழிகள் தீபிகா ( ஆனந்தி ) , அதிதி ( மனிஷா யாதவ் ) இருவரையும் லவ் பண்ணி கடைசி வரை கன்னி கழியாமல் இருந்து பல்பு வாங்குவதே கதை . வழக்கமான காதல் தோல்வி ஹீரோ புலம்பலை செக்ஸ் , டபுள் மீனிங் ஜோக்குகளை சேர்த்து அடுத்த கியருக்கு தாவியிருக்கிறார்கள் ...

ஆரம்ப காலங்களில் தனுஷை இமிடேட் செய்தது  இருக்கிறது ஜி.வி.யின் தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜ் . முதல் படத்திற்கு இந்த பட நடிப்பு தேவலாம் என்றாலும் இன்னும் லாட்ஸ் டு கோ . எப்பவுமே மூஞ்சில விரக்தியா ?  கொஞ்சம் வெரைட்டியும் காட்டுங்க பாஸ் ! . இரண்டு ஹீரோயின்களில் ஆனந்தி பெரிய விழிகளில் அழகாய் பேசுகிறார் . க்ளைமேக்சில் இவர் ஏற்கனவே அடிபட்ட மேட்டரை உடைக்கும் போது நமக்கே " என்னமா இப்புடி பண்ணிட்டியேம்மா " என்று ஜி.வி மேல் வருத்தம் வரத்தான் செய்கிறது . மாங்கு மாங்கென்று குடிக்கும் பெண்ணாக மனிஷா . நான் ஏன் குடிக்கக்கூடாது என்று ஜி.வி யை இவர் மடக்கும் சீன் சூப்பர் . கிளாமரா டவுசரோட நடிக்குற பொண்ணுக்கு கொஞ்சம் மூஞ்சியோட சேத்து மத்த இடத்துக்கும் மேக்கப் போட்டா தேவல ! . ஜோதிகா ஜம்மென்று 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இது போன்ற படங்கள் சிம்ரனுக்கு தேவையா ?! . வி.டி.வி கணேஷ் பெரிசாக இம்ப்ரெஸ் செய்யவில்லை ...


அடல்ட் கன்டென்ட் படம் தமிழில் எடுப்பதில் தப்பில்லை  . செக்ஸ் மேட்டரை ஆன் பெண் வித்தியாசம் இல்லாமல் பேசியது பாவமில்லை . ஒரு மெச்சூர்ட் படமாக இல்லாமல் காமெடி யாக கொடுத்ததிலும் ஏமாற்றமில்லை . ஆனால் அதையே ஸ்ட்ராங்காக இல்லாமல்  நிறைய தனி தனி அடல்ஸ் ஒன்லி சீன்களை எடுத்து பிட் பிட் டாக ஓட்ட வைத்தது போல படம் இருப்பதே குறை . ஏ சர்டிபிகேட் படத்துக்கு சின்ன பசங்கள வச்சு எதுக்கு இத்தன சீனு ? படத்துல ஹீரோ விர்ஜின் ?! ஆனா பொண்ணுங்க விர்ஜினா கிடக்குறது டைனோசர் காலத்துலேயே முடிஞ்சிருச்சு என்று வி டி.வி கணேஷ் டயலாக் விடுவது மட்டும் எந்த ஊரு நியாயங்கோ ?! ...

சரக்கை வாங்கிக் கொடுத்து விட்டு சைட் டிஷுக்கு தன் கன்னத்தை காட்டும் ஒரு ஹீரோயின் , சரக்கடித்து விட்டு வரும் ஹீரோ வை ட்ரங்கஅன்ட் டிரைவ் ஸ்டடியாக இருக்காது என்பதால் தொட விடாமல் ஏய்க்கும் மற்றொரு ஹீரோயின் என்று இதுவரை ஹீரோயின்ளை அப்பாவிகளாக அல்லது லூசுகளாக மட்டும் காட்டி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் டெர்ரெர்ராக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் . ஆனாலும் கடைசியில் பெண்களை மட்டும் ஹீரோவை வைத்து திட்ட விடுவதில் ஆதிக்கிடம் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே . ஒரு காலத்தில் இலை மறை காய் மறையாக இருந்த செக்ஸ் சமாச்சாரம் செல்போன் வருகையால் தெருச்சரக்காகி விட்ட இந்த காலத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்கிற டைட்டிலுக்கு பதில் ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் என்று வைத்திருக்கலாம் . அதற்கேற்ப படம் விடலை (ஹி ஹி ) பசங்களையும் , குடும்பஸ்தனாகியும் கள்ளத்தனமாக பலான சிடி பார்க்கும்
( என்ன தான் பிட் போடாவிட்டாலும் ) விட்ட பசங்களையும் கவரும் . குடும்ப குத்துவிளக்குகள் அந்த பட போஸ்டர் பக்கம் கூட செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 39

ஸ்கோர் கார்ட் : 2.25*/5*

பின்குறிப்பு : ( படத்தை எதிர்த்து மாதர் சங்கங்கள் கேஸ்  போடுதோ இல்லையோ த்ரிஷா , நயன்தாரா ரெண்டு பேரும் போடாம இருந்தா சரி ) 

பத்த வச்சுட்டியே பர ட்ட ! 

12 September 2015

யட்சன் - YATCHAN - வழிப்போக்கன் ...


புள் ஹீரோ சப்ஜெக்டுகளை வைத்து ஹிட் கொடுப்பதில் வல்லவரான விஷ்ணுவர்தன் தன்னுடைய ஃபேவரட் ஹீரோ ஆர்யா  , தம்பி கிருஷ்ணா இருவரையும் இணைத்து இயக்கிருக்கும் படம் யட்சன் . சுபாவின் க்ரைம் கதை , நல்ல டெக்னிகள் டீம் என்று முந்தைய படங்களைப் போலவே ஹிட் அடிப்பதற்கு நிறைய வாயப்புகள் இருந்தும் அதை வீணாக்கியிருக்கிறார்கள் அல்லது இழந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்...

தூத்துக்குடியில் கொலை செய்து விட்டு சென்னைக்கு தப்பி வரும் சின்ன ரவுடி சின்னா ( ஆர்யா ) , பெரிய நடிகனாக வேண்டுமென்கிற வெறியில் சென்னைக்கு வரும் கார்த்திக் ( கிருஷ்ணா ) இருவரும் ஒரு புள்ளியில் இடம் மாறும் போது நடக்கும் திருப்பங்களே யட்சன் . கேட்கும் போது விறுவிறுப்பாக இருக்கும் கதையை கிரிஸ்பாக கொண்டு போகாமல் ப்ளாக் காமெடியை புகுத்தி கொஞ்சம் இழுஇழுப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் ...

அறிந்தும் அறியாமலும் படத்தின் குட்டி போல ஒரு கேரக்டர் ஆர்யாவுக்கு . சக நடிகரான அஜித்தை தல தல என்று கொண்டாடும் ரசிகனாக வரும் ஆர்யா அலட்டிக் கொள்ளாமல் அழகாக நடித்திருக்கிறார் . ரவுடிகளுக்கு மத்தியில் அவர் லவ்வை ப்ரொபோஸ் செய்யும் விதமே அழகு . கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் கற்றது களவு , கழுகு போன்ற படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர் கிருஷ்ணா . தன் அண்ணனாக இருந்தாலும் முதன் முறை பெரிய இயக்குனருடன் கை கோர்த்திருக்கிறார் . ஆடிஷனில் நடித்துக் காட்டும் சீனில் ஸ்கோர் செய்யும் கிருஷ்ணா படத்தில் நடிகனாக பெயர் வாங்க நிறைய ஸ்கோப் இருந்தும் நழுவ விட்டிருக்கிறார் . அவர் வசன உச்சரிப்புகளையும் , முக பாவங்களையும்  கரக்ட் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ...


தீபா சன்னிதி  , சுவாதி ரெட்டி இருவரில் இரண்டாமவர் கவர்கிறார் . தெத்துப்பல் தெரிய சிரிக்கும் அழகிலும் , லவ்வரின் அப்பாவை கலாய்க்கும் இடத்திலும் ஸ்வாதி பழனி பஞ்சாம்ருதம் . தன்னை கொல்ல வந்தவனை கூட காதலிக்கும் மிகப் பெரிய மனசு ( மனசு மட்டுமா !? ) தீபா சன்னிதிக்கு . வில்லனாக அதில் ஹுசைன் லிப் மூவ்மேண்டில் இடித்தாலும் " நான் என்ன சொன்னேன் " என்று மாறி மாறி கேட்கும் இடத்தில் கைதட்டல் வாங்குகிறார் . இவர் கேரக்டரில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் டேஸ்டி . வழக்கம் போல ஓவர் ஆக்டிங் செய்தாலும் படம் தொய்வடையும் போது அண்ணன் போல இருந்து காப்பாற்றுகிறார் தம்பி ராமையா .

ஆர்.ஜே பாலாஜியின்   குரல் மற்றும் ஹியுமர் சென்ஸ் படத்துக்கு பலம் . ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆனது பலவீனம் . பொன்வண்ணன் சீர்யசான கேரக்டரா ? இல்லை காமடியனா என்பதில் இயக்குனருக்கே குழப்பம் போல . அஜய் ரத்னம் மேல் என்ன கோபமோ ?! . கமிஷனராக இருந்தவரை இன்ஸ்பெக்டர் ஆக்கி விட்டார்கள் . சென்ராயன் , பைவ் ஸ்டார் கிருஷ்ணா , ஒய்.ஜி , எஸ்.ஜே சூர்யா என்று படத்தில் நிறைய காஸ்டிங் பட் எக்செப்ட் எஸ்.ஜே நாட் மச் இம்ப்ரெசிங் .  யுவனின் இசையில் பாடல்கள் சூப்பர் . ஆனால் அவர் குரலில் வந்த " கொஞ்சலாய் " , " இன்னும் என்ன " என்று இரண்டு மெலடிகளையும் ஒன்றை ஆர்.ஜே பாலாஜிக்கு கொடுத்தும் , மற்றொன்றை குத்துப் பாட்டுக்கு நடுவில் வைத்தும் வீணடித்திருக்கிரார்கள் . அயிட்டம் சாங்குக்கு ஆர்த்தியை ஆட வைத்தது அமேசிங் ...

ஆர்யா , கிருஷ்ணா இடம் மாறும் சீன் ( அது கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா ? ) , வில்லன் கேரக்டரின் ட்விஸ்ட் , அட போட வைக்கும் சில ப்ளாக் காமெடிகள் , விஷ்ணு - யுவன் கூட்டணி என படத்திற்கு நிறைய ப்ளஸ்கள் . திடுக் திடுக் திரைக்கதை அமைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் நம்மை ஒன்ற வைக்காமல் பயணிக்கும் படம் , சீரியசாக இருந்திருக்க வேண்டிய படம் ஓவர் காமெடி முயற்சிகளால் சிலாக்கியாகி போனது போன்றவை பெரிய மைனஸ் . ஒரு படத்தின் வெற்றிக்கு  திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தனி ஒருவன் . அதே சுபா யட்சனில் இருந்தும் எந்த மேஜிக்கும் நிகழாதது துரதிருஷ்டம் . க்ரைமுக்கும் , காமெடிக்கும் நடுவில் தள்ளாடி , இயக்குனரின் முந்தைய படங்கள் அளவுக்கு இம்பேக்டை ஏற்படுத்தாத இந்த  யட்சன் ஒரு வழிப்போக்கன்  ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங்              : 2.5* / 5* 


8 September 2015

பாயும் புலி - PAAYUM PULI - ஃபார்முலா புலி ...

 


பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் சரத்குமார்  & கோ வை எதிர்த்து நடிகர் விஷால் நிஜத்திலேயே பாய்ந்து கொண்டிருக்கும் வேளையில் வந்திருக்கிறது பாயும் புலி . ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு  புலி பாயாமல் போனது ஏமாற்றமே  ...

மதுரையில் பிசினஸ்மேன்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல் எஸ்ஐ ஒருவரை கொன்று விட , ரகசிய என்கவுன்டரில் அவரகளை கொன்று பழி தீர்க்கிறார் ஏ.எஸ்.பி ஜெயசீலன் ( விஷால் ) . ஆனாலும் அவர்களின் பணம் பறிக்கும் படலம் தொடர , அந்த கும்பலின் உண்மையான தலைவனை கண்டறியும் புலி ( விஷால் ) அதிர்ச்சியானாலும் பாய்ந்து வேட்டையாடுவதே பாயும் புலி ...

சத்யம் , வெடி போல விஷாலுக்கு மற்றுமொரு ஏ.எஸ்.பி வேடம் . தன் உயரத்துக்கு ஏற்ற வேஷத்தில் நன்றாகவே செட் ஆகிறார் விஷால் . பஞ்ச் டயலாக் பேசாமல் எதிரிகளுக்கு பஞ்ச் மட்டுமே கொடுக்கும் விஷால் ஆறுதல்.பெண்கள் ஏதேதோ சாதனைகள் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ரோட்டை கூட க்ராஸ் செய்ய பயப்படும் ஹீரோயினாக காஜல் அகர்வால் . இவரை பார்த்த மாத்திரத்திலேயே விஷால் லவ்வ மறக்காமல் டூயட்டுக்கு வந்து போகிறார் . விஷாலின் அண்ணனாக முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நல்ல தேர்வு . இவருடைய கேரக்டர் ட்விஸ்ட் கொடுத்தாலும் டீட்டைளிங் புதுசாக இல்லாதது சறுக்கல் . வடிவேலுக்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் மீண்டும் தோற்றிருக்கிறார் சூரி ...


" மதுரக்காரி " , " சிலுக்கு மரமே " போன்ற பாடல்களில் ஹம்  செய்ய வைக்கும் இமான்  பி.ஜி க்கு பெரிதாக மெனக்கெடவில்லை . பாடல்கள் நடுநடுவே திணிக்கப்பட்டது போலிருப்பதை தவிர்த்திருக்கலாம் . டாப் ஆங்கிள் ஷாட்களில் வெல்டன் சொல்ல வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் . இந்த முறையும் பிரபல டெக்னீஷியன்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் ...

வழக்கமான  பழி வாங்கும் கதையையே நான் மகான் அல்ல , பாண்டியநாடு படங்களில்  ரசிக்கும் படி கொடுத்திருப்பார் சுசீந்திரன் . அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இடைவேளை வரை பதுங்கும் புலி பின் வேகமாக பாயத்தான் செய்கிறது . படம் ஆங்காங்கே கிளிஷேக்கலாக இருந்தாலும் க்ளைமேக்சில் இயக்குனர் தெரிகிறார் . நேர்மையான போலீஸ் ஹீரோ , தன் சுய லாபத்துக்காக பெத்த அப்பனையே கொல்லத் தயங்காத வில்லன் , சக போலீஸ்காரனை கொல்லும்  வில்லன் கும்பல் என சமீபத்தில் வெளிவந்த தனி ஒருவனுக்கும் பாயும் புலிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் தனித்து நிற்கிறான் தனி ஒருவன். மற்றபடி மசாலா வாடை இல்லாவிட்டாலும் ஐந்து பாட்டு , ஃபைட் , சென்டிமென்ட் , காமெடி ட்ராக் என்று சினிமாவின் வியாபாரத்தை  நம்பி வந்திருக்கும்  இந்த பாயும் புலி ஃபார்முலா புலி ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங் : 2.75* / 5* 




30 August 2015

தனி ஒருவன் - THANIORUVAN - தலைவன் ...


ஜெயம் ரவிக்கு இந்த குருப்பெயர்ச்சி நன்றாக வொர்கவுட் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன் . ஒரே வருடத்தில் மூன்று  படம் , அதிலும் இதுவரை  அவர் நடித்த படங்களிலேயே தனித்து நிற்கிறான் இந்த தனி  ஒருவன் . ஜெயம் ரவியை வைத்து ரீமேக் மட்டுமே செய்து கொண்டிருந்த மோகன்ராஜா ( முன்னர் ஜெயம் ராஜா ) தனது தம்பிக்கு முதன்முறை ஆகச்சிறந்த சொந்த கதையை தேர்வு செய்து அதை எழுத்தாளர்கள் சுபா வோடு சேர்ந்து திரைக்கதையாக்கி முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியை அட்டகாசமாக நடிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் ...

தனது  வழியில் குறுக்கிடும் வில்லன்களை மட்டும் துவம்சம் செய்யும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு நிகரான எதிரியை டார்க்கெட் செய்து தானாகவே சென்று அடிக்கிறான் இந்த தனி ஒருவன் . ஐபிஎஸ் போஸ்டிங்குக்கு முன்னரே சக பேட்ச் மேட்களுடன் சேர்ந்து இரவில் குற்றவாளிகளை பிடிக்கும் மித்ரன் ( ஜெயம் ரவி ) எல்லா குற்றங்களுக்கும்  மூலமான சித்தார்த் அபிமன்யு ( அரவிந்த்சாமி ) வை  தேடிப்பிடித்து களையறுப்பதே கதை ...

படத்தின் டைட்டிலே அரவிந்த்சாமிக்கு தானோ என்பது போல படமே அவரின் சிறு வயதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது . மங்காத்தா அஜித்துக்கு பிறகு இந்த அளவு நெகடிவ் கேரக்டருக்கு ரசிகர்களிடையே அவ்வளவு  வரவேற்பு . அஜித் போல ரசிகர் பட்டாளம் எல்லாம் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு கைதட்டல் கிடைக்க காரணம் அந்த கேரக்டரின் வடிவமைப்பும் , அதை தனது  அசால்டான நடிப்பால் அனாயசமாக செய்த அரவிந்த் சாமியும் . இந்த படத்திற்காக உடல் இளைத்து செம மேன்லியாக  இருக்கிறார் ரோஜா நாயகன் . இந்த படம் அரவிந்த்சாமிக்கு ஒரு மைல்கல் ...

ஜெயம்ரவி நிமிர்ந்து நில் மூலம் கவனிக்க வைத்தவர் தனி ஒருவனில் அதையும் தாண்டி மித்ரனாகவே மாறி ரசிக்க வைக்கிறார் . தோற்று விட்டோம் என்று கோபப்படும் இடத்திலும் , நண்பன் சாவை நேரில் பார்த்து கலங்கும் இடத்திலும் ஜெயம் ரவியிடம் தேர்ந்த நடிப்பு . சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து விட்டு டகால்டி செய்யாமல் படத்தோடு வரும் முக்கியமான ரோலில் நயன்தாரா . க்ளோசப் காட்சிகள் அம்மணியின் வயதை காட்டுகிறது . அரவிந்த்சாமியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா தனியாக காமெடி ட்ராக் இல்லாமல் திரைக்கதையோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார் . முதலமைச்சராக நாசர் , நண்பனாக கணேஷ் வெங்கட்ராமன் எல்லோருமே சரியான தேர்வு ...


ராம்ஜி யின் ஒளிப்பதிவு இருட்டுப் பக்கங்கள் நிறைந்த படத்துக்கு நல்ல வெளிச்சம் . ஹிப் ஹாப் தமிழா இசையில் காதல்  கிரிக்கெட் , தனி ஒருவன் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றான் . படத்திற்கு பிஜி ப்ளஸ். க்ரைம் நாவல் போன்ற விறுவிறுப்பை திரைக்கதையில் இயக்குனரோடு இணைந்து சுபா கொடுத்திருக்கிறார்கள் . அதிலும் அடுத்தடுத்த சீன்களுக்கான சிங்கிங் சூப்பர் . " மைனாரிட் டி  அரசு " போன்ற வசனங்கள் வரி விலக்குக்காக யாரையோ திருப்திப்படுத்த வைக்கப்பட்டதோ ?! ...

காக்க காக்க , என்னை அறிந்தால் ஸ்டைலில் நல்ல காப் , கொடூரமான வில்லன் மோதல் தான் கதை . ஆனால் போரடிக்காமல் , ட்ராக் மாறாமால் நிறைய யோசித்து புது புது சீன்களை வைத்த விதத்தில் நம்மை கட்டிப்போடுகிறான் தனி ஒருவன் . எல்லோரும் ட்ரைனிங் கில் இருக்கும் போது ஜெயம் ரவி மட்டும் சீனியர் போல ஆர்டர் போடுவது ஏன் ? , இவர்கள் செய்யும் இரவு வேலைகளை எந்த போலீசும் கண்டு கொள்ளாதது ஏன் ? , அரவிந்த் சாமியின் குற்றங்களில் முதலமைச்சர் நாசரின் பங்கு என்ன ? பல்லாயிரம் கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வரும் ஏன்ஜெலினா வுக்கு எதற்கு இவ்வளவு குறைவான பாதுகாப்பு ? மருந்து மாபியா அரவிந்தசாமிக்கு ஒரு கார் ட்ரைவர் கூடவா இல்லை ? கோர்ட்டில் வீடியோ ஆதாரத்தை எடிட் செய்து கொடுக்கும் ஜெயம் ரவிக்கு அதுவே ஆப்பாகி விடாதா ? போன்ற கேள்விகளை நமது ஆறாம் அறிவு எழுப்பினாலும் இரண்டேமுக்கால் மணி நேரம் நம்மை வேறெதையும் யோசிக்க விடாமல் மெஸ்மெரிசம் செய்து கூட்டத்தை கூட்டும் இந்த தனி ஒருவன் - தலைவன் ...

ஸ்கோர் கார்ட் : 45


ரேட்டிங் : 3.75* / 5*





Related Posts Plugin for WordPress, Blogger...