27 January 2015

தொட்டால் தொடரும் - THOTTAL THODARUM - மைல்ட் டச் ...


டத்தை பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது . இருந்தாலும்  பிரபல பதிவர் என்பதையும் தாண்டி 2013 பதிவர் சந்திப்பின் பயனாக தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரிந்தவரான கேபிள் சங்கரின் படத்தை விமர்சிக்கலாமா ? வேண்டாமா என்பதில் சின்ன தயக்கம் . கடைசியில் தனது பட்டவர்த்தமான விமர்சனங்களின் மூலம் பல இயக்குனர்களின் படங்களை கிழித்துக் காயப் போட்டவரின் முதல் படத்தை விமர்சிக்காமால் விட்டு விட்டால் அது காலச்சொல் ஆகிவிடாதா ?! . இனி ...

ஒரு அமைச்சர் ( பிரமிட் நடராஜன் ) சாலை விபத்தில் இறப்பதிலிருந்து தொடங்குகிறது படம் . அது கொலையா ? விபத்தா ? என்று போலீஸ் விசாரணை செய்யும் த்ரில்லர்  ட்ராக் ஒரு புறம் . ஐ.டி கம்பெனி எச்.ஆர் சிவா
( தமன்குமார் ) , கால் சென்டர் சேல்ஸ் கேர்ள் மது ( அருந்ததி ) இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே செல்போனில் லவ்விக்கொள்ளும் ரொமாண்டிக் ட்ராக் மறுபுறம் என இடைவேளை வரை செல்லும் படம் கொலைகளை விபத்து போல திட்டமிட்டு செய்யும் கொலைகார கும்பலிடம் வழிய சென்று மது மாட்டிக்கொண்டவுடன் நேர்கோட்டில் பயணிக்கிறது ...

ஐ,டி யில் வேலை செய்பவராக கனகச்சித பொருத்தம் தமன் . இவருக்கு சொந்த குரலா ? டப்பிங்கா என்று தெரியவில்லை . ஆனால் வாய்ஸ் கம்பீரம் . மற்றபடி பெரிதாக மெனக்கெடாமல் அளவாக நடித்திருக்கிறார் தமன்குமார் . இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படம் அருந்ததிக்கு நல்ல ப்ரேக் . இவரை சுற்றியே நடக்கும் கதையில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார் . முகம் கொஞ்சம் முத்தலாக இருப்பதாலோ என்னமோ சோகக் காட்சிகள் கை கொடுக்கும் அளவிற்கு இவருக்கு காதல் காட்சிகள் கை கொடுக்கவில்லை . இவருடைய கேரக்டர் ஸ்கெட்சில் இருக்கும் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...


" அடுத்தடுத்து பஞ்ச் சொல்ல  நான் என்ன சந்தானமா ? " என்று கேட்டாலும்
" பொண்ணுங்க கார் மாதிரி , இருக்குறவனுக்கு செலவு , இல்லாதவனுக்கு கனவு " , " கடலை போடுறது கருவாடு மாதிரி , ஊரெல்லாம் நாறினாலும் போடுறவனுக்கு மட்டும் மணக்கும் " என்று படம் நெடுக பஞ்ச்களை அள்ளித் தெரிக்கிறார் பாலாஜி . முதலில் ரசிக்கும் படியாக இருந்தாலும் முதல் பாதி முழுவதையும் இவர் தோள்களில் சுமத்தியிருப்பது ஓவர் டோஸ் . கேபிளுடன் சேர்ந்து கார்க்கி எழுதியிருக்கும் வசனங்கள் க்யூட்டாக இருந்தாலும் சந்தானத்திடம் இருக்கும் டைமிங் பாலாஜிக்கு மிஸ் ஆவதால் நல்ல வசனங்கள் கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவது துரதிருஷ்டம் . " கேட்குறது பெர்சனல் லோன் , அதுக்கு ஏன் அபிசியலா பேசணும் " என்று பாலாஜி போனில் கலாய்ப்பதை உதாரணமாக சொல்லலாம் ...

பி.சி சிவனின் இசையில் " பாஸு  பாஸு " , " பெண்ணே பெண்ணே " பாடல்கள் ரம்யம் . சேசிங் சீன்களில் மட்டும் பின்னணி இசையை கவனிக்க வைக்கிறார் . ஈ.சி.ஆர் ரோடுகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்கின் டாப் ஆங்கிள் ஷாட் கவர்கிறது . எடிட்டிங்கில் சாய் அருண் தூங்கி விட்டாரா இல்லை இயக்குனர் தூங்கி விட்டாரா என்று தெரியவில்லை ...

தன் முதல் படத்திற்கு நாவல் போல இன்ட்ரெஷ்டிங்கான இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு கை குலுக்கலாம் . அதே போல ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டாக கொடுத்தமைக்கும் சபாஷ் . பேஷ் புக் , ட்விட்டர் காலத்தில் பார்க்காமலேயே போனில் காதல் செய்யும் காட்சிகளை முடிந்தவரை நம்பும்படியாகவே எடுத்திருக்கிறார் கேபிள் . காதல் ப்ளாட் பழசாக இருந்தாலும் காட்சிகளை ப்ரெஸ்ஸாக வைத்தமைக்கு பாராட்டுக்கள் ...


பாலாஜியின் ஓவர் டோஸ் வசனங்கள் , ஹீரோயினின் சித்தி எபிசோட் , தம்பி ஆக்ஸிடெண்டுக்கு பணம் தேவைப்படுவது என்று நிறைய பழைய நெடி அடித்தாலும் இன்டர்வெல் ப்ளாக்கில் சரியாக ட்விஸ்ட் வைக்கும் கேபிள் அதன் பிறகு அதை தக்க வைக்காமல் தடுமாறியிருக்கிறார் . அதிலும் வில்லனை கண்டுபிடிக்க போகும் இடத்தில் கட்டிங்கை பார்த்தவுடன் கை நடுங்கும் குடிமகனைப் போல ரூமை போட்டவுடன் ஜல்சா வுக்கு ரெடியாகும் ஹீரோயின் எல்லாம் " என்னம்மா இப்படீ பண்ணுறீங்கலேம்மா " ...

கொலையை விபத்து போல செய்யும் வின்சென்ட் ஹீரோயினை நேரடியாக துரத்துவது சொதப்பல் . அதிலும் க்ளைமேக்ஸில் காரை துரத்திக் கொண்டு அவர் பைக்கில் போவதெல்லாம் ஹை வே காமெடி . படத்தை முடித்திருப்பதிலும் அவசர கதி தெரிகிறது . இந்த படத்திற்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே கேபிள் தான் . அதிகம் பரிச்சியமில்லாதவர்கள் நடித்திருக்கும் படத்திற்கு பிரபல ப்ளாகரான கேபிளும் , அவருடைய கதையும் ப்ளஸ் . அதே  சமயம் அவருக்காக எதிர்பார்ப்புடன் வருபவர்களை ஏமாற்றும் வகையில் ஆவெரேஜாக படம் இருப்பது மைனஸ் . எந்த படமாக இருந்தாலும் அதன் நிறை குறையை நேர்த்தியாக அலசி ஆராய்ந்து  அழுத்தமான எழுத்துக்களால் கவரும் கேபிள் சங்கர் தனது முதல் படமான தொட்டால் தொடரும் மூலம் நம்மை மைல்டாகவே டச் செய்கிறார் . இருப்பினும் முதல் படத்தையே குடும்பத்துடன் பார்க்கும் படியான டீசண்ட் டச்சுடன் கொடுத்ததால் அவருடைய பணி தொடர வாழ்த்துக்கள் ...

ஸ்கோர் கார்ட் : 40 


15 January 2015

ஐ - AI - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...


துவரை தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் யாகத் தான் இருக்கும் . யூ டியூபில் டீசர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை கண்டு களித்திருப்பது அதற்கு ஒரு சான்று . பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் , பிரமாத நடிகர் விக்ரம் இருவரும் அந்நியன் வெற்றிக்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து மிக பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கொடுத்திருக்கும் ஐ ரிலீசுக்கு முன்னரே பலரின் ஐ பாலை உருட்டியதென்னமோ உண்மை . ஆனால் இப்படி இத்தன பில்ட் அப்புடன் வந்திருக்கும் படம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சாரி ...

மிஸ்டர் மெட்ராஸ் ஏரிக்கரை லிங்கேசன் ( விக்ரம் ) பிரபல மாடலிங் தியா
( எமி )  மேல் பைத்தியமாக இருக்கிறார் . பைத்தியம் என்றால் அவர் ஆடில் நடித்த ப்ரா , பேண்டீஸ் வாங்குமளவுக்கு பைத்தியம் . ஒரு கட்டத்தில் தியாவுடன் ஜோடி சேர்ந்து மாடலிங் செய்யும் சந்தர்ப்பம் லிங்கேசனுக்கு வர அவர் பிரபல மாடல் லீ யாகி விடுகிறார் . ஆனால் அதுவே அவர் வாழ்க்கைக்கு வினையாகி விடுகிறது . அப்படி என்ன ஆனது  என்பதே 3.10 மணி நேர ஐ படம் ...

விக்ரம் நடிப்பில் மட்டுமல்ல மார்க்கெட்டிலும் சிவாஜி , கமல் வரிசையில் வந்திருக்க வேண்டியவர் . ஆனால் துரதிருஷ்டவசமாக  அவர் வழுக்கி விட அஜித் , விஜய் போன்ற அவரை விட இளம் நடிகர்கள் அந்த இடத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள் . 48 வயதிலும் இந்த படத்துக்காக விக்ரம் எடுத்துக் கொண்ட சிரத்தையை இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அடித்து சொல்லலாம் . 86 கிலோவிற்கு உடலை ஏற்றி 56 கிலோவிற்கு குறைப்பதெல்லாம் நிஜத்திலும் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் . சென்னை பாஸை பேசும் பாடி பில்டர் லிங்கேசனாக , பிரபல மாடல் லீயாக , கூன் விழுந்த குரூபியாக என எல்லாமுமாக படத்தில் வியாபித்திருக்கும் விக்ரமின் நடிப்புக்கு ஒரு மாஸ்டர் பீஸ் . ஆனால் இந்த யானையின் நடிப்பு பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கதை சோளப்பொரியாகிப் போனது சொதப்பல் ...


இண்டர்நேஷனல் மாடலாக எமி எக்கச்சக்க பொருத்தம் . ஆனால் இவரிடம் உள்ள சதையளவுக்கு கூட படத்தில் கதையில்லையே என்பது தான் வருத்தம்.\
படம் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் இருந்தாலும் இவர் உடையில் மட்டும் தயாரிப்பாளர் காட்டியதென்னமோ சுணக்கம் . ( என்ன எழுத்து டி.ஆர் மாதிரி ஆயிருச்சு ! ) . லிங்கேசனிடம் காதலிப்பதாக பொய் சொல்லி விட்டு குற்ற உணர்ச்சியில் துடிக்கும் இடங்களில் எமி பொண்ணு நல்லாவே நட்சுக்குது !. இருவரின் பிஸிக் மட்டுமல்ல கெமிஸ்ட்ரியும் நல்லாவே இருக்கு ...

சந்தானம்  வழக்கம் போல சகட்டுமேனிக்கு எல்லோரையும் கலாய்த்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் .  கூட்டமாக வரும் வில்லன்களில் ராம்குமார் , திருநங்கையாக நடித்திருப்பவர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் .
" மெரசலாயிட்டேன் " , " என்னோடு நீ " பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏ க்ளாஸ் ரஹ்மான் . பி.சி யின் ஒளிப்பதிவு உலகத்தரம் . அனல் அரசு வின் சண்டைக்காட்சிகள் குறிப்பாக ஜிம்முக்குள் நடக்கும் சண்டை நம்மை நகரவிடாமல் ஜாம் செய்கிறது . ஒரு பாடலுக்கும் யாரையும் தம்மடிக்க போக விடாமல் ஷங்கரின் க்ரியேடிவ் பிரம்மாண்டம் கட்டிப் போடுகிறது . குறிப்பாக " மெர்சல் " பாடலில் எமி செல்போன் , பைக் என்று ஒவ்வொன்றாக உருமாறுவதும் , " ஐலா " பாடல் முழுவதும் வரும் சின்ன சின்ன ஆட் கான்செப்டுகளும் ஷங்கர் டச் ...

ஆஸ் யூசுவல் லொக்கேஷன் , க்ராபிக்ஸ் இரண்டிலும் பின்னியெடுக்கிறார் இயக்குனர் . முதல் சீனிலேயே எமியை கடத்தி கதைக்குள் (!) போய் விடுவது சாமர்த்தியம் . கரென்ட் , ப்ளாஷ்பேக் என நகரும் ஐ படம் சைனாவுக்குள் நுழையும் வரை இன்ட்ரெஸ்டிங்காகவே செல்கிறது . திருநங்கையை இந்த அளவுக்கு ஒட்டியிருப்பது அய்யே ! . ஹீரோ எதற்கு இப்படி ஆனான் என்று முழுசாக தெரியவரும் போது  தான் ஐ ஹைலி டிஸப்பாய்ன்டிங்  ! . இந்தியனில் கமல் , அந்நியனில் விக்ரம் இருவரின் நடிப்பையும் தாண்டி ஷங்கரின்  கதை , அதை சொல்லும் விதம் இரண்டும் நம்மை வசீகரிக்கும் . ஆனால் இந்த படத்தில் அந்த ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் ...


ஷங்கர் வழக்கமான சமூக அக்கறை பாணி படங்களை விட்டுவிட்டு ரொமாண்டிக் த்ரில்லர் வகையறாவுக்கு வந்ததை பாராட்டலாம் . ஆனால் கொஞ்சம் வீக்கான கதைக்கு இன்னும் வீக்கான திரைக்கதை அவர் பழைய பாணிக்கு திரும்புவதே தேவலை என்று சொல்ல வைக்கிறது . டூ பீஸ் மாடல் எமி , கோ மாடல் ஜானுடன் அட்ஜஸ்ட் செய்யாததால் ஏற்படும் பிரச்சனை  , லீயுடனான பழைய காதலால் எமிக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று அம்மா புலம்புவது , அதிலும் சின்ன குழந்தை கூட கண்டுபிடித்து விடும் மேட்டரை ட்விஸ்ட் என்ற நினைப்பில் சொருகியிருப்பதையெல்லாம் பார்த்தால் ஷங்கர் & கோ வின் கற்பனை வறட்சி பிரம்மாண்டமாக தெரிகிறது ...

சுருக்கமாக சொன்னால் இன்டர்நெட் , மியூசிக் என எல்லா சிறப்பம்சங்களுடன் பார்ப்பதற்கு அழகாக  இருக்கும்  அல்ட்ரா  மாடல் செல்போன் " ஹலோ " என்று இரண்டு வார்த்தை பேசுவதற்குள் சார்ஜ் போனால் எப்படியிருக்குமோ கிட்டத்தட்ட அதுவே . இருப்பினும் பொங்கல் விடுமுறை , விக்ரமின் நடிப்பு , டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் , படத்திற்கான ப்ரொமோ , எல்லாவற்றையும் விட மொக்கை என்று ஒதுக்கிவிட முடியாத படியான படம் இவையெல்லாம் ஐ யை காப்பாற்றக்கடவது . இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டராக வருகிறார் . அந்த பாணியில் சொல்வதானால் - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...

ஸ்கோர் கார்ட் : 42 

( பி.கு : விக்ரம் என்னும் நடிப்பு ராட்ஸனுக்காகவே இந்த மார்க்


11 January 2015

பி.கே - PK - IS IT O.K ?! ...


பெரும்பாலும் ஹிந்திப் படங்களை பெரிதும் விரும்பி பார்க்காத  எனக்கு அமீர்கான் படங்களில் மேல் மட்டும் ஈர்ப்பு உண்டு . அவருடைய ஒவ்வொரு படத்திலும் நம்மை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு அழுத்தமான மேட்டர் இருக்கும் . அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் பி.கே வும் விதிவிலக்கல்ல . முதலில் வேற்று கிரக வாசியான அமீர்கான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்தே நம்மை கவனிக்க வைக்கும் படம் முடியும்  வரை நகர விடாமல் கட்டிப் போடுகிறது .  ஒவ்வொரு மதத்தை பற்றியும் , கடவுளைப் பற்றியும் , அதன் பெயரால் நடக்கும் பிரிவினை பற்றியும் அமீர்கான் குழந்தைத்தனமாக கேட்கும் ஒவொரு கேள்விகளும் சாட்டையடி . ஒரு கட்டத்துக்கு மேல் கடவுள் நம்மை படைத்தார் என்பதை விட நாம் தான் நமக்கு ஏற்றபடி டிசைன் டிசைனாக கடவுளை படைத்திருக்கிறோம் என்று கடவுள் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்களையே யோசிக்க வைப்பதே படத்தின் வெற்றி . அனுக்ஷா வின் ஜெர்மனிய காதலும் , பிரிதலும் அழகான ஹைக்கூ . ஆனால் க்ளைமேக்ஷில் இருவரும் சேர்வதும் , எல்லோரும்  அழுவதும் நம்மூர் விகரமன் ஸ்டைல் வழக்கமான சினிமா .  மொத்தத்தில் பி.கே கருத்து முலாம் பூசப்பட்ட ஜாலியான ரசிக்கக்கூடிய படம் ...

ஆனாலும் இது ரங்க் தே பசந்தி , 3 இடியட்ஸ் அளவிற்கு என்னை பாதிக்காததற்கு இரண்டே காரணங்கள் . 1. இந்து மதத்தில் கடவுளின் பெயரால் காசு பார்க்கும் சாமியார்கள் , அவர்களின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் , கடவுள் , மதம் இரண்டையும் வைத்து நடக்கும் சண்டைகள் , அரசியல்  இப்படி ஏற்கனவே பார்த்து பழகிப் போன ப்ளாட் . 2. படத்தை பார்த்தவர்கள் ஆஹா , ஓஹோ என்கிறார்கள் , இன்னும் பி.கே பார்க்கவில்லையா என்று குசலம் விசாரிக்கிறார்கள் , அமீர்கானின் தையிரியத்தை பாராட்டுகிறார்கள் நிச்சயம்  பி.கே பாராட்டப்பட வேண்டிய படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு இதில் வித்தியாசமாய் ஒன்றுமில்லை ..;

எல்லா மதங்களிலும் நல்ல நம்பிக்கைகளுக்கு ஈடாக மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன . மத நம்பிக்கைகளை வைத்து வியாபாரம்  நடத்தும் சாமியார்கள் , அரசியல்வாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் . அத்தோடு கடவுளின் பெயரை சொல்லி குழந்தைகள் , பெண்கள் ஏன் தங்கள் மதத்தினரையே கூட கொல்லும் தீவிரவாதிகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள் . ஆனாலும் வழக்கம் போல பி.கே படம் இந்து மதத்தினரின் பல கடவுள் வழிபாடு , போலி சாமியார்களின் ஏமாற்று வேலைகள் இதைத்தான் அதிகம் அலசுகிறது . ஒன்றிரண்டு சீன்கள் ஊறுகாய் போல மற்ற மதத்தினரைப் பற்றி வருகிறது . இந்தியாவில் இந்து மதத்தை கிண்டல் செய்து எவ்வளவோ படங்களை பார்த்தாகி விட்டது . இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள் இருப்பதால் அந்த மதத்தின் நன்மை , தீமைகள் அனைவரும் அறிந்ததே . அப்படியிருக்க இதில்  வித்தியாசம் என்ன இருக்கிறது ? .  அதே நேரம் இந்து மதத்தை போல  மற்ற மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகள் ,   மூளைசலவை செய்து மதமாற்றம் செய்யப்படும் அப்பாவி மக்கள் , மதமாற்றத்துக்காக இந்தியாவில் கொட்டப்படும்  அந்நிய முதலீடு , அடுத்தடுத்த அந்நிய படையெடுப்புகளால் படிப்படியாக அழிக்கப்பட்ட நமது கலாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து அமீர்கான் & கோ டீடைல்டாக ஒரு படம் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . மேலும் கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கும் , பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கும் பெயர் போன தமிழகத்தில் பி.கே பாணி படம் பழக்கப்பட்ட ஒன்று  .

குறிப்பாக சொன்னால் மணிவண்ணனை ஹீரோவாக வைத்து , வேலு பிரபாகரன் இயக்கத்தில் கடவுள் என்றொரு படம் தமிழில் வந்தது . நிறைய பேர் பார்த்திருக்க  மாட்டார்கள் , பார்த்தவர்களும் மறந்திருக்கலாம் . அந்த படத்தில் மணிவண்ணன் கடவுளாக நடித்திருப்பார் . பூமிக்கு வரும் அவர் தன்  பெயரால் நடக்கும் சாதி கலவரங்கள் , மூடநம்பிக்கைகள் இவற்றை பொறுக்க முடியாமல் அதற்கு எதிராக அவரே களத்தில்  இறங்குவார் . கடைசியில் கடவுளே மக்களால் கொல்லப்படுவது போல படம் முடியும் . இந்த படத்தில் இருந்து மணிவண்ணன் கடவுளாக வருவதை  எடுத்துவிட்டு , அமீர்கானை வேற்றுகிரக வாசியாக்கி புத்திசாலித்தனமான திரைக்கதையையும் , மார்கெட்டிங்கையும் இணைத்து விட்டால் பி.கே . இரண்டும் ஒரே ப்ளாட் என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடே தவிர  நிச்சயம் இரண்டு படங்களுக்கானதல்ல . அப்படி  செய்தால் அதை விட அபத்தம் வேறுதுவும் இருக்காது .  இருப்பினும் பி.கே வில் புதுசாக எதுவுமில்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு ...

பி.கே ஜாலியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் தானே தவிர இதில் அமீர்கானின் தைரியத்தையோ , வித்தியாசமான சிந்தனையையோ பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை . இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளை மறுக்கும் நாத்திக கொள்கைகளுக்கு மூல நதியான சார்வாகம் , கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கு வேரான லோகாயுதம் போன்ற தத்துவங்கள் வேரூன்றி இருந்திருக்கின்றன . மேலும் தெருவுக்கு தெரு கடவுளாக ஆராதிக்கப்படும் ராமனையும் , கிருஷ்ணனையும் கிண்டல் செய்து பட்டிமன்றம் நடத்தும் தைரியமும் , அதை ரசித்து அதிலிருக்கும் உண்மைகளை சீர் தூக்கிப் பார்க்கும் பெருந்தன்மையும் காலங்காலமாக இந்துக்களுக்கு இருக்கிறது . எனவே இதில் அமீர்கான் & ராஜு இராணியின் தையிரியத்தை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை ...

இதே அமீர்கான் அவர் மதத்திலேயே உள்ள மூட நம்பிக்கைகளை கிண்டல் , கேலி செய்து கேள்வி கேட்டு படம் எடுத்திருந்தால் அவர் தைரியத்துக்கு பெரிய சல்யூட் அடித்திருக்கலாம் .   ஏன் இந்த படத்திலேயே வரும்  குண்டு வெடிப்பு சம்பவத்தை வெறும் பாசிங் சீனாக காட்டாமல் அதற்கு  காரணமானவர்களைப்  பற்றிய  உண்மையான விவாதங்களை முன் வைத்திருந்தால் அமீர் & கோ வுக்கு கை குலுக்கியிருக்கலாம் . இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் சினிமா கேரியர் எஞ்சியிருக்கும் அமீர் கானால் அப்படியொரு ரிஸ்க் எடுக்க முடியுமா ? பிரான்சில் கார்ட்டூன் வரைந்ததற்கே அந்த கதி என்னும் போது படம் எடுத்தால் ? . புத்தகம் எழுதியதற்காக சொந்த நாட்டுக்கே திரும்ப முடியாமல் நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின் , சல்மான் ருஷ்டி இவர்கள் கதையெல்லாம் அமீர் கானுக்கு தெரியாதா என்ன ?உண்மையை உரக்க சொல்லும் தையிரியமான படத்தை அமீர்கான் என்றல்ல யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும் பார்க்கலாம் ! . மற்றபடி எல்லா சினிமாக் காரர்களின் ஈசி டார்கெட் யாரோ அவர்களை மட்டுமே இவர்களும் குறி வைத்திருக்கிறார்கள் . கொஞ்சம் வித்தியாசத்துக்கு மற்ற மதத்தினரைப் பற்றிய ஒன்றிரண்டு சீன்களை சேர்த்திருக்கிறார்கள் அவ்வளவே . இதை எழுதுவதால் எனது நோக்கம் எல்லா மதத்தினரையும் கிண்டல் செய்ய வேண்டுமென்பதல்ல . என்னுடைய வாதம் புதிதாய் நாம் அறியாத களம் எதுவும் படத்தில் இல்லை என்பது மட்டுமே ...

குறிப்பாக  மோடி ஆட்சியில் இப்படியொரு படம் எடுப்பதற்கு தையிரியம் வேண்டுமென்று ஒரு  பத்திரிக்கை எழுதியிருப்பதை படித்தால் சிரிப்பு தான் வருகிறது . அப்படி தையிரியத்தை பாராட்டுவதற்கு அமீர்கான் ஒன்றும் சாப்ளினும் அல்ல , மோடி ஒன்றும் ஹிட்லரும் அல்ல . எல்லோரும் செய்து கொண்டிருக்கும் பார்முலா படத்தை எடுத்து நாலு காசு பார்ப்போம் என்கிற வகையறா படம் தான் பி.கே வே தவிர மற்றபடி பெரிதாக எதுவுமில்லை . அப்படியே பாராட்டுவதாக இருந்தால் இந்த படத்தை எதிர்த்து தியேட்டர்களை அடித்து நொறுக்கி படத்துக்கு மேலும் பப்ளிசிட்டியை கூட்டிய சில இந்து அமைப்புகளை தவிர்த்து எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெருந்தன்மையாக எல்லா படங்களையும் ரசித்து ஊக்குவிக்கும் சாமனிய இந்துக்களை பாராட்டி விழா எடுக்கலாம் . இதை படித்து விட்டு யாராவது  கருத்து சுதந்திரக் கொடியை தூக்கலாம் . சினிமா விமர்சகனாக் மட்டுமல்ல தனி  மனிதனாகவும் எப்பொழுதும்   நான் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல . நான் எதிர்ப்பது  செலெக்டிவ் கருத்து சதந்திரத்தையும் , கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் அரைத்த மாவையே அரைப்பதையும் தான் . மற்றபடி பி.கே லாஜிக்கை தவிர்த்து விட்டு பார்த்தால் ரசித்துப் பார்க்கக் கூடிய  ஜாலி படம் ...


1 January 2015

தமிழ் சினிமா 2014 - TAMIL CINEMA 2014 ...




டந்த வருடம் 200 க்கும் அதிகமான தமிழ்படங்கள் ரிலீசாகியிருந்தாலும் வழக்கம் போல பத்துக்கும்  சற்று அதிகமான படங்களே வெற்றி பெற்றிருப்பது ஏமாற்றம் . லிங்குசாமி , கே.எஸ்.ரவிக்குமார் போன்ற கமர்சியல் இயக்குனர்களின் படங்கள்  தோல்வியை தழுவியிருந்தாலும் வினோத் , ஆனந்த்ஷங்கர்  போன்ற புதுமுக இயக்குனர்களின் வெற்றி ஆறுதல். விஜய் மில்டன் , வேல்ராஜ் , ரவி.கே.சந்திரன் ஆகிய மூன்று பிரபல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அதில் முதல் இருவரின் படங்கள் ஜெயித்திருப்பது நம்பிக்கை . பாலுமகேந்திரா , கே.பாலசந்தர்  , மணிவண்ணன் போன்ற சிறந்த இயக்குனர்களின்  மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . மற்றபடி புதுமுகங்களை விட  அஜித் , விஜய் , சுந்தர்.சி , ஏ.ஆர்.முருகதாஸ் என்று பிரபலமானவர்களே  2014 இல் ஜெயித்திருக்கிறார்கள்  என்பது இப்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி . முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2014

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1.தெகிடி
 2 கோலி சோடா
 3. குக்கூ
 4. யாமிருக்க பயமே
 5. முண்டாசுப்பட்டி
 6. சதுரங்க வேட்டை
 7. ஜிகர்தண்டா
 8. கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
 9. மெட்ராஸ்
10.பிசாசு 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  வீரம் 
2.  கோலி சோடா
3.  யாமிருக்க பயமே
4.  சதுரங்க வேட்டை
5.  வேலையில்லா பட்டதாரி
6.  ஜிகர்தண்டா
7.  அரிமா நம்பி  
8.  அரண்மனை
9.  சலீம்
10கத்தி 


ப்ளாக்பஸ்டர்  : வீரம் கத்தி 

டாப் டென் பாடல்கள்

1. கண்டாங்கி ( ஜில்லா  )
2. விண்மீன் ( தெகிடி  )
3. கூடமேல கூட ( ரம்மி )
4. ஆகாசத்த  ( குக்கூ )
5. காதல் கனவே  ( முண்டாசுபட்டி   )
6. அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
7. என்தாரா என்தாரா ( திருமணம் என்னும் நிக்காஹ்  )
8. மணப்பெண் சத்தியம் ( கோச்சடையான்  )
9. பேசாதே ( திருடன் போலீஸ்  )
10.ஆத்தி இவள  ( கத்தி  )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - குக்கூ
 கவர்ந்த நடிகர் - அட்டகத்தி தினேஷ்  ( குக்கூ )
 கவர்ந்த நடிகை - ஆண்ட்ரியா  ( அரண்மனை  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சத்யராஜ் / ராதாரவி ( சிகரம் தொடு / பிசாசு )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - சரண்யா ( வி.ஐ.பி  )
 கவர்ந்த காமெடி நடிகர் -  சந்தானம்  ( அரண்மனை )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  ப்ரிதிவிராஜ்  ( காவியத்தலைவன்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயன்   ( குக்கூ )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் -  ஆரோல் கோரெல்லி ( பிசாசு )
 கவர்ந்த ஆல்பம் - வி.ஐ.பி  ( அனிருத் )
 கவர்ந்த பாடல் - அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
 கவர்ந்த பாடகி - எஸ்.ஜானகி ( அம்மா அம்மா )
 கவர்ந்த பாடகர் - அனிருத் ( உன் விழிகளில்  )
 கவர்ந்த பாடலாசிரியர் - யுகபாரதி  ( மனசுல சூரக்காத்து )
 கவர்ந்த வசனகர்த்தா - வினோத்   ( சதுரங்க வேட்டை )
 கவர்ந்த கதாசிரியர் - ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ( க.தி.வ.இ )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - கார்த்திக் சுப்பராஜ்  ( ஜிகர்தண்டா  )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  ஆர்.டி.ராஜசேகர் ( அரிமா நம்பி )
 கவர்ந்த இயக்குனர் - வினோத்  ( சதுரங்க வேட்டை   )
 கவர்ந்த புதுமுகம் - மாளவிகா ( குக்கூ  )

வசூல் ராஜாக்கள் 

அஜித் ( வீரம்  )
விஜய்  ( கத்தி  )
தனுஷ்  ( வி.ஐ.பி  ) 
சுந்தர்.சி ( அரண்மனை ) 

ஏமாற்றங்கள்

அஞ்சான் 
லிங்கா 

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  
Related Posts Plugin for WordPress, Blogger...