9 January 2016

புத்தாண்டே ...



புத்தாண்டே நீ
ஒவ்வோர் வருடமும்
வருகிறாய் போகிறாய்
நாங்களும் உன்னை
வைத்து நிறைய திட்டமிடுகிறோம் ...

அதை செய்து முடிப்பதற்குள்
நீ
மீண்டும் வருகிறாய்
நாங்களும் வெக்கமேயில்லாமல்
மீண்டும் திட்டமிடுகிறோம்
அதில் மீண்டும் தோற்கிறோம் ...

இப்படி விழுவதும்
எழுவதும் தானே
வாழ்க்கை - அது
கூட இல்லையென்றால்
வேறென்ன கேளிக்கை ?! ...

நாங்கள் மதத்தை சொல்லி
குண்டு வைப்போம்
சாதியை சொல்லி  சக மனிதனை
தள்ளி வைப்போம்
ஏரியை நிரப்பி
வீடு கட்டுவோம்
வெள்ளம் வந்தால்
கடவுளை திட்டுவோம்
வெப்பமயமாதல் பற்றி
நிறைய சொல்வோம்
பக்கத்து கடைக்கு கூட
பைக்கில் தான் செல்வோம் ...

காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு போல
நீயும்  எங்கள் குறைகளை
மறந்து ஒவ்வொரு வருடமும்
வருகிறாய் .
உன்னை வெறுங்கையுடன் அனுப்பாமல்
நாங்களும் ஏதேதோ
பொய் சத்தியம்
செய்து கொடுக்கிறோம் ...

தனியாக பிறந்து
தனியாக மாயும்
இந்த மாய உலகில்
சேர்க்கும் பொன் பொருளை விட '
நாம் போன பின்
நமக்காக கண்ணீர் விட
சில இதயங்களை சேர்ப்பதே
சிறந்தது என
நாங்கள் எப்போது உணர்வோம்  ?! ...

( அப்பார்ட்மெண்ட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது படித்தது )



1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...