21 February 2016

சேதுபதி - SETHUPATHY - ஸ்லோ அண்ட் ஸ்டடி ...


ண்ணையாரும் பத்மினியும் பேசப்பட்ட அளவுக்கு பணம் பண்ணவில்லை . அதை நிவர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் அருண்குமார் எடுத்திருக்கும் மாஸ் ஆக்சன் படம் சேதுபதி . ஹீரோ போலீஸ் என்பதால் பஞ்ச் டயலாக் பேசி பத்து பேரை வானத்தில் பறக்க விடாமல் க்ரிப்பையும் விட்டுக் கொடுக்காமல் ரசிக்க வைக்கிறான் சேதுபதி ...

ஒரு எஸ்ஐ கொலையை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சேதுபதி ( விஜய் சேதுபதி ) அதற்கு காரணமான ஊர் பெரிய மனுஷன் வாத்தியாரை ( வேலு ராமமூர்த்தி ) கைது செய்ததால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் , அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதையும் சொல்லும் வழக்கமான கதை தான் சேதுபதி . ஆனால் 2010 இல் காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விஜய் சேதுபதி க்காக மாஸ் படத்தை கொஞ்சம் கிளாஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சில வெற்றிகளை கொடுத்திருந்தாலும் தனது ரசிகர்களை கன்சாலிடேட் செய்யும் விதமாக விஜய் சேதுபதியை ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியிருக்கிறான்  சேதுபதி . உடற்கட்டில் தெரியும் தொளதொளப்பை   கண்களிலும் , மீசையிலும் காட்டும்  போலீஸ் மிடுக்கில் சமன் செய்கிறார் சேதுபதி .  தன்னை முறைக்கும் வாத்தியாரின் மாப்பிள்ளையை பார்த்து " அப்படி பாக்காதய்யா எனக்கு சிரிப்பா வருது " என்று சொல்லும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது . என்ன தான் ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் காதலுடன் மனைவி காலில் விழும் இடத்தில் ரியல் ஹீரோவாக தெரிகிறார் விஜய் சேதுபதி ...

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பினும் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகில் ரம்யா நம்பீசன் . காலில் தாராளமாக விழலாம் என்று சொல்லவைக்கும் காதல் கண்கள் . இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட் ஆகியிருந்தாலும் ஹீரோ ஒரியண்டட் படத்தில் அடிக்கடி வரும் இவரது காட்சிகள் கொஞ்சம் நிறையவே ஸ்பீட் பிரேக்கர் ...


காப் படங்களில் ஹீரோயின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிறதோ இல்லையோ ஹீரோ - வில்லன் காம்பினேஷன் வொர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு சமீபத்திய உதாரணம் தனி ஒருவன் . அந்த வகையில் வில்லன் வாத்தியார் ஆக வரும் வேலு ராமமூர்த்தி மதுரை பேக் ட்ராப்பிற்கு நன்றாக பொருந்தினாலும்  கம்பீர சேதுபதிக்கு முன்னால் ஸ்கூல் தமிழ் வாத்தியார் போல இருக்கிறார் . கைது செய்யப்பட பிறகு சொந்தமாக எதுவும் செய்யாமல் சேதுபதிக்கு வரும் வேறொரு பிரச்சனையை வைத்து அவரை காலி செய்ய நினைப்பது புத்திசாலித்தனமாக பட்டாலும் பெரிய இம்பேக்ட் இல்லை .
" இனிமே உன் வாழ்க்கையில வர ஒவ்வொரு நிமிஷமும் நான் எழுதினதாத்தான் இருக்கும் " என்று அவர் பேசும் வசனத்தில் இருக்கும் வீரியம் செயலில் இல்லாதது சறுக்கல் ...

நானே ராஜா பாடல் தவிர மற்றவை பெரிதாக கவரவில்லை . பின்னணி இசையில் இரைச்சலை தவிர்த்திருக்கலாம் . வாத்தியாரின் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர் , போலீஷ்காரர் மூர்த்தி , விசாரணைக்கமிஷன் ஹெட் ஆக வருபவர் என படத்தில் நிறைய பேர் கவர்கிறார்கள் ...

விஜய் சேதுபதியின் நடிப்பு , கொஞ்சம் நீளமாக இருந்தாலும் மனதை டச் செய்யும் லவ் சீன்கள் , போலீஸ்காரர்களின் நல்ல பக்கத்தை காட்டும் டைட்டில் சாங் , வாத்தியாரின் ஆட்களை ஸ்டேஷனில் காக்க வைத்து விட்டு அவரை செவிலில் அறைந்து கைது செய்வது , வீட்டை சூழ்ந்த அடியாட்களை கொஞ்சம் கூட பதட்டப்படாமல் மகனிடம் போனில் பேசி அவனை வைத்தே விரட்டுவது உட்பட நல்ல மாஸ் சீன்கள் போன்றவை கொஞ்சம் நீளமான முதல் பாதி , சட்டென்று முடியும் க்ளைமேக்ஸ் , சம பலம்  இல்லாத வில்லன் & கோ ஆகிய குறைகளை மறக்கடிக்கின்றன . மொத்தத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக இருக்கும் சேதுபதியை விஜய் சேதுபதிக்காகவும் , அப்ளாஸ் அள்ளும்  மாஸ் சீன்களுக்காகவும் பார்க்கலாம் ...

ரேட்டிங் : 3 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...